96. நெறி விலக்கிக் கூறல்
 
   
வனப்புட அனிச்சம் புக மூழ்கிய என,
இவ் அணங்கு, அவ் அதர்ப் பேய்த்தேர்க்கு இடந்தனள்;
தென் திசக் கோமகன் பகடு பொலிந்தன்ன
கறயடிச் சென்னியின் நக நுதி போக்கி,
குருத் அயில் பேழ்வாய்ப் பல் படச் சீயம்
5
அதர்தொறும் குழுவும்; அவற்றினும் மற்று-அவன்
கடுங் கால் கொற்றத் அடும் தூவர் எனத்
தனி பார்த் உழலும் கிராதரும் பலரே;
ஒரு கால் இரதத் எழு பரி பூட்டி
இரு வான் போகிய எரிசுடர்க் கடவுள்,
10
'மாதவர் ஆம்' என, மேல்மல மறந்தனன்;
மின் பொலி வேலோய்! (அன்பினர்க்கு அருளும்
கூடற் பதி வரும் ஆடற் பரியோன்,
எட்டு-எட்டு இயற்றிய கட்டு அமர் சடயோன்
இரு சரண் அடந்த மறுவிலர் போல)
15
அருளுடன் தமிய ஆடின ஐய!
தண்ணீர் வாய்த் தரும் செந் நிறச் சிதல
அதவு உதிர் அரிசி அன்ன செந் தின
நுண் பதம், தண் தேன், விளங்கனி, முயல்-தச,
வெறிக் கண் கவஅடிக் கடுங் கால் மேதி
20
அன்புமகப் பிழத்க் கல்லறப் பொழிந்த
வறள்பால், இன்ன எம்முழ உள அயின்று,
கார் உடல் அனுங்கிய பங் கண் கறயடி
சென்னி தூக்கி நின்றன காட்டும்
நெடு மர அதள் வேய் சில் இடக் குரம்பயில்,
25
மற்று-அதன் தோலில் உற்று, இருவீரும்
கண்படுத், இரவி கீறுமுன்
எண்பட நும் பதி ஏகுதல் கடனே!
 
உரை