98. மெலிவு கண்டு செவிலி கூறல்
 
   
கதிர் நிரை பரப்பும் மணி முடித் தேவர்கள்  
கனவிலும் காணாப் புனைவு அருந் திருவடி  
மா நிலம் தோய்ந்து ஓர் வணிகன் ஆகி,  
எழுகதிர் விரிக்கும் திரு மணி எடுத்து--  
வரையாக் கற்புடன் நான்கு எனப் பெயர் பெற்று,
5
ஆங்குஆங்கு, ஆயிர கோடி சாகைகள்  
மிடலொடு விரித்து, சருக்கம், பாழி,  
வீயா அந்தம் பதம், நிரை நாதம்,  
மறைப்பு, புள்ளி, மந்திரம், ஒடுக்கம், என்று  
இனையவை விரித்துப் பல பொருள் கூறும்--
10
வேதம் முளைத்த ஏதம் இல் வாக்கால்  
குடுமிச் சேகரச் சமன் ஒளி சூழ்ந்த  
நிறை மதி நான்கின் நிகழ்ந்தன குறியும்;  
குருவிந்தம், சௌகந்தி, கோவாங்கு,  
சாதரங்கம், எனும் சாதிகள் நான்கும்;
15
தேக்கின், நெருப்பின், சேர்க்கின், அங்கையின்,  
தூக்கின், தகட்டின், சுடர்வாய் வெயிலின்,  
குச்சையின், மத்தகக் குறியின், ஓரத்தின்,  
நெய்த்துப் பார்வையின், நேர்ந்து சிவந்து, ஆங்கு,  
ஒத்த நற்குணம் உடைய பன்னிரண்டும்;
20
கருகி நொய்து ஆதல், காற்று, வெகுளி,  
திருகல், முரணே, செம்மண், இறுகல்,  
மத்தகக் குழிவு, காசம், இலைச்சுமி,  
எச்சம், பொரிவு, புகைதல், புடாயம்,  
சந்தை, நெய்ப்பு இலி, எனத் தரு பதினாறு
25
முந்திய நூலில் மொழிந்தன குற்றமும்;  
சாதகப்புட் கண், தாமரை, கழுநீர்,  
கோபம், மின்மினி, கொடுங்கதிர், விளக்கு,  
வன்னி, மாதுளம் பூ, விதை, என்னப்  
பன்னு சாதரங்க ஒளிக் குணம் பத்தும்;
30
செம்பஞ்சு, அரத்தம், திலகம், உலோத்திரம்,  
முயலின் சோரி, சிந்துரம், குன்றி,  
கவிர் அலர், என்னக் கவர் நிறம் எட்டும்;  
குருவிந் தத்தில் குறித்தன நிறமும்;  
அசோகப் பல்லவம், அலரி, செம்பஞ்சு,
35
கோகிலக் கண், நீடு இலவு அலர், செம்பு, எனத்  
தரு சௌகந்திதன் நிறம் ஆறும்;  
செங்கல், குராமலர், மஞ்சள், கோவை,  
குங்குமம், அஞ்சில் கோவாங்கு, நிறமும்;  
திட்டை, ஏறு, சிவந்த விதாயம்,
40
ஒக்கல், புற்று ஆம் குருதி, தொழுனை,  
மணி, கோகனகம், கற்பம், பாடி,  
மாங்கிசகந்தி, வளர் காஞ்சு, உண்டை, என்று  
ஆங்கு ஒரு பதின் மூன்று அடைந்தன குற்றமும்;  
இவை எனக் கூறிய நிறை அருட் கடவுள்
45
கூடல் கூடா குணத்தினர் போல)  
முன்னையள் அல்லள்! முன்னையள் அல்லள்!  
அமுத வாய்க் கடு விழிக் குறுந் தொடி நெடுங் குழற்  
பெருந் தோட் சிறுநகை முன்னையள் அல்லள்!  
உலகியல் மறந்த கதியினர் போல
50
நம்முள் பார்வையும் வேறு வேறு ஆயின;  
பகழி செய் கம்மியர் உள்ளம் போல  
ஐம் புலக் கேளும் ஒரு வாய்ப் புக்கன;  
அதிர் உவர்க் கொக்கின் களவு உயிர் குடித்த  
புகர் இலை நெடு வேல் அறுமுகக் குளவன்,
55
தகரம் கமழும் நெடு வரைக் காட்சி  
உற்றனள் ஆதல் வேண்டும்,  
சிற்றிடைப் பெருந்தோள் தேமொழி தானே!  
உரை