|
|
செய்யுள்
76
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கடன்மக ளுள்வைத்து வடவைமெய் காயவு
மலைமக டழற்றரு மேனியொன் றணைக்கவு
மாசறு திருமகண் மலர்புகுந் தாயிரம்
புறவிதழ்ப் புதவடைத் ததன்வெதுப் புறுக்கவுஞ்
சயமகள் சீற்றத் தழன்மனம் வைத்துப் |
10
|
|
திணிபுகும்
வென்றிச் செருவழல் கூடவு
மையர் பயிற்றிய விதியழ லோம்பவு
மவ்வனற் கமர ரனைவரு மணையவு
முன்னிடைக் காடன் பின்னெழ நடந்து
நோன்புறு விரதியர் நுகரவுள் ளிருந்தென் |
15
|
|
னெஞ்சக
நிறைந்து நினைவினுண் மறைந்து
புரையறு மன்பினர் விழிபெறத் தோற்றி
வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டிப்
பதுக்கைசெய் யம்பலத் திருப்பெரும் பதியினும்
பிறவாப் பேரூர்ப் பழநக ரிடத்து |
20
|
|
மகிழ்நடம்
பேய்பெறும் வடவனக் காட்டினு
மருமறை முடியினு மடியவ ருளத்தினுங்
குனித்தரு ணாயகன் குலமறை பயந்தோ
னருந்தமிழ்க் கூடற் பெருந்தவர் காண
வெள்ளியம் பலத்துட் டுள்ளிய ஞான்று |
25
|
|
நெருப்பொடு
சுழலவும் விருப்பெடுத் தவ்வழல்
கையினிற் கொள்ளவுங் கரியுரி மூடவு
மாக்கிய பனிப்பகைக் கூற்றிவை நிற்க
வாங்கவர் துயர்பெற வீன்றவென் னொருத்தி
புகல்விழு மன்பதற் கின்றி |
|
|
மகவினைப்
பெறலாம் வரம்வேண் டினளே. |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவன் கூற்று.
துறை: முன்பனிக்கு நொந்துரைத்தல்.
(இ-ம்)
இதற்கு, அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் (தொல். கற்பி. 6) எனவரும்
நூற்பாவின்கண் கிழவனை மகடூஉப்புலம்ப
பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்.....................இடும்பையும்
ஆகிய விடத்தும்; எனவரும் விதிகொள்க.
1-6:
கடல்........................கூடவும்
(இ-ள்)
கடல் மகள் வடவை உள்வைத்து மெய்காயவும்- கடலாகிய பெண் இப்பனியினது குளிருக்கு ஆற்றாது
வடவைத் தீயைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு உடல் காயவும்; மலைமகள் தழல்தரு மேனிஒன்று
அணைக்கவும்- பார்வதி இக்குளிருக் கஞ்சித் தீயைத் தருகின்ற இறைவனுடைய திருமேனியை
அணைத்துக் கொண்டிருக்கவும்; மாசு அறு திருமகள்-குற்றமற்ற திருமகள்; மலர் புகுந்து-இதற்கஞ்சித்
தாமரை மலரினுட் புகுந்து ஆயிரம் புற இதழ் புதவு அடைத்து-அதன் ஆயிரமாகிய புறவிதழ்களாகிய
கதவுகளை அடைத்துக் கொண்டு; அதன் வெதுப்புறுக்கவும்-அதனாலுண்டாகும் வெப்பத்தைப் பொருந்தவும்;
சயமகள் மனம் சீற்றத்தழல் வைத்து- வெற்றித்திருவாகிய கொற்றவையோ இப்பனிக்கஞ்சித்தன்
நெஞ்சினூடே சினத்தீயை வளர்த்துக் கொண்டு; திணிபுகும் வென்றி செரு அழல் கூடவும்-திண்மையால்
செல்லுதற்குரிய வெற்றியுள்ள போராகிய வெம்மையைப் பொருந்தவும் என்க.
(வி-ம்.)
கடல்மகள்-கடலாகிய பெண். வடவை-வடவைத்தீ. மெய்காத்தல்- மெய்யைக் காய்வித்தல்.
மலைமகள்-பார்வதி. தழல் தருமேனி-தீ வண்ணனாகிய இறைவன் திருமேனி. அவனுடைய எண்வகை
வடிவங்களுள் நெருப்பும் ஒன்றாகலின் தழல்தரு மேனி என்றாள். மலர்-ஈண்டுக் குறிப்பால்
தாமரை மலரை உணர்த்திற்று. புதவு-கதவு. அதனாலுண்டாகும் வெதுப்பு என்க. வெதுப்புறுத்தல்:
ஒரு சொல். அஃதாவது வெப்பமுண்டாக்கிக் கோடல் என்க. சயமகள் என்றது கொற்றவையை.
அவள் இப்பனிக் கஞ்சி உள்ளேயும் சீற்றத்தழல் வைத்துப் புறத்தேயும் செருஅழல் கூடினாள்
என்னும் நயமுணர்க. சீற்றத்தழல்-சினமாகிய தீ. திணி-திண்மை. செருஅழல்-போராகிய
நெருப்பு.
7-8:
ஐயர்..................அணையவும்
(இ-ள்)
ஐயர் பயிற்றிய விதி அழல்-மறையவர் தமக்குக் கற்பித்துள்ள விதிகளையுடைய வேள்வித்தீயினைச்
சார்ந்திருந்தது; ஓம்பவும்-இக்குளிருக்கு அஞ்சி அதனை வளர்ப்பவும்; அமரர் அனைவரும்-தேவர்கள்
எல்லோரும் தீக்காய்தற் பொருட்டு; அவ்வனற்கு அணையவும்-அந்த வேள்வித் தீயை விரும்பி
வந்து சேராநிற்பவும் என்க.
(வி-ம்.)
பயிற்றிய என்றது தம்மாசான் பயிற்றிய என்பதுபட நின்றது. ஐயர்-ஈண்டு மறையோர்.
ஐயர் தம்முடைய அறம் என்பது பற்றி அன்றியும் குளிருக்குத் தீக்காய்தற் பொருட்டும்
வேள்வித்தீயை
வளர்த்தனர் என்க. அங்ஙனமே அமரர் அவியுண்ணற் பொருட்டன்றி அத்தீயினை அணுகினர்
என்க.
9-14:
முன்....................பெரும்பதியினும்
(இ-ள்)
இடைக்காடன் முன் எழபின் நடந்து-இடைக்காடன் முன்னொரு காலத்தே சென்றபோது அவன்
பின்னே சென்று; நோன்பு உறு விரதியர் நுகர உள் இருந்தென-தவம் செய்கின்ற துறவோர்
நுகர்ந்து இன்புறும்படி அவர்கள் உள்ளத்தில் அமுதமாக இருந்தாற்போல; நெஞ்சகம் நிறைந்து-அடியார்
நெஞ்சினிடத்தே நிறைந்திருந்து; நினைவினுள் மறைந்து-அவர்கள் நினையும் நினைவினுக்கும்
நினைவாய் மறைந்திருந்து; புரை அரும் அன்புனர் விழிபெற ஒப்புக்காண்டலரிய-அன்பினையுடைய
அவ்வடியார் கண்கூடாகக் காணும்படி; தோற்றி-நல்லாசிரியன் உருவம் கொண்டு அவர்முன்
தோன்றி; வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டி-தேவர்களுடைய நீண்ட முடிகளிலுள்ள மாணிக்கத்திரள்களைச்
சேர்த்து; பதுக்கைசெய் அம்பலம் திருப்பெரும் பதியினும்-மேடாக்குகின்ற பொன்னம்பலமாகிய
பெரிய திருப்பதியினிடத்தும் என்க.
(வி-ம்.)
இடைக்காடன் முன்எழ என்புழி முன் முற்காலத்தில் என்பதுபட நின்றது. நோன்புறு விரதியர்-தவத்தோர்.
நுகர்தல்- உண்ணுதல். நினைவினுள் மறைதலாவது நினைவினுக்கும் நினைவாய் மறைந்து நிற்றல்.
புரை-ஒப்பு. விழிபெறுதல்-கண்ணாற் காணப்பெறுதல். தேவர்கள் திரண்டு வந்து வணங்குங்கால்
அவர் முடிகள் ஒன்றனோடொன்று தாக்குண்டு உதிர்ந்த மணிகள் பொன்னம்பலத்தை மேடாக்குதலால்
வானவர் முடி மணித்தொகை திரட்டிப் பதுக்கை செய் அம்பலம் என்றார். பதுக்கை-மேடை;
கற்குவியல்.
15-19:
பிறவா..................காண
(இ-ள்)
பிறவாப் பேரூர் பழநகர் இடத்தும்-பிறவாமையைத் தருகின்ற பெரிய ஊராகிய பழைய காசி
நகரிடத்தும்; மகிழ் நடம் பேய் பெறும் வடவனக்காட்டினும்- இன்பக்கூத்தைக் காரைக்காலம்மையார்
பெற்ற திருவாலங்காட்டினிடத்தும்; அருமறை முடியினும்-உணர்தற்கரிய மறைநூலின் இறுதியிலும்;
அடியவர் உள்ளத்தினும்-மெய்யடியார் நெஞ்சகத்தினும்; குனித்து அருள் நாயகன்-திருக்கூத்தாடியருளிய
முதல்வனும்; குலம்மறை பயந்தோன்-சிறந்த வேதத்தை அருளிச்செய்தவனும் ஆகிய சிவபெருமான்;
தமிழ்க் கூடல் பெருந்தவர் காண-செந்தமிழ் வளர்த்த மதுரை நகரத்தின்கண் பெரிய தவத்தினையுடைய
பதஞ்சலி முதலியோர் காணும்படி என்க.
(வி-ம்.)
காசியில் இறந்தோர் மீண்டும் பிறவார் ஆகலின் காசியைப் பிறவாப் பேரூர் என்று
கூறினார். மகிழ்-இன்பம். பேய்- காரைக்காலம்மையார்.
அவ்வம்மையாரே பலவிடங்களில் தம்மைப் பேய் என்று கூறலால் இவரும் அங்ஙனமே கூறினார்.
வடம்-ஆல். வனம்-காடு. எனவே திருவாலங்காடு என்றாயிற்று. அருமறை- உணர்தற்கரிய வேதம்.
குனித்தல்- கூத்தாடுதல். அம்பலத்தினும் திருவாலங்காட்டினும் அடியாருளத்தினும் குளித்தருள்
நாயகன் என்க. தவர்-பதஞ்சலி முதலிய தவத்தோர்.
20-23:
வெள்ளி........................நிற்க
(இ-ள்)
வெள்ளி அம்பலத்துள் துள்ளிய ஞான்று- வெள்ளியாலியன்ற மன்றத்தின்கண் நடித்தருளிய
நாளிலே; நெருப்பொடு சுழலவும்- இப்பனிப்பருவத்துக் குளிருக்கஞ்சிக் கையிலே நெருப்பினை
ஏந்திச் சுழன்று ஆடாநிற்பவும்; விருப்பு எடுத்து-அத்தீயின்கண் விருப்பங்கொண்டு; அ
அழல் கையினில் கொள்ளவும்-அந்த நெருப்பினை எப்பொழுதும் கையில் ஏந்தாநிற்பவும்;
கரி உரி மூடவும்-பின்னரும் யானைத் தோலைப் போர்த்துக் கொள்ளவும்; ஆக்கிய-இவ்வாறு
பாகுபடுத்திய; பனிப்பகை கூற்று இவை நிற்க-பனியாகிய இந்நோயின் இக்கூறுபாடுகள் நிற்க
என்க.
(வி-ம்.)
துள்ளுதல்-நடித்தல். இறைவன்-இக்குளிருக்கஞ்சியே ஆடும் பொழுதும் அனலேந்தி ஆடுகின்றான்.
எஞ்சிய பொழுதும் அதனை ஏந்தியிருக்கின்றான். பின்னரும் யானைத்தோலையும் போர்த்துக்கொள்கிறான்
என்றவாறு.
24-26:
ஆங்கு......................வேண்டினள்
(இ-ள்)
அவர் ஆங்கு துயர்பெற-கடவுளராகிய அவரெல்லாம் இவ்வாறு இப்பனியால் துன்புறா நிற்ப;
என் ஈன்ற ஒருத்தி-என்னை ஈன்ற என் தாயானவள்; புகல் விழும் அதற்கு அன்பு இன்றி-தான்
புகலாக விரும்பத்தக்க அம்மகவின்பால் அன்பின்றி; மகவினைப்பெறல் ஆம் வரம் வேண்டினள்-
பிள்ளையைப் பெறுதற்கரிய வரம் கிடந்து என்னை ஈன்றாள். யான் அவளை நோவதன்றி யாரை
நோவேன் என்க.
(வி-ம்.)
என் தாய் தன்மகவு இப்பனிப்பருவத்தில் இங்ஙனம் துன்புறும் என்றறிந்திருந்தும் அம்மகவின்பால்
அன்பின்றி வீணே வரங்கிடந்து என்னை ஈன்றாள். என் துன்பத்திற்கு என் தாயே காரணமன்றிப்
பிறர் இலர் என்று தாயை நொந்துரைத்தவாறு.
இதனை,
காயவும் அணைக்கவும் உறுக்கவும் கூடவும் ஓம்பவும் சுழலவும் கொள்ளவும் மூடவும் ஆக்கிய
பனிப்பகைக் கூற்று நிற்க, அவர் துயர்பெற ஈன்ற வொருத்தி அன்பின்றி மகவுபெறலாம்
வரம் வேண்டினளென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|