|
|
செய்யுள்
89
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
ஊர்நகைத்
துட்க வூக்குமோர் விருந்தினைக்
குவளையடி பூத்த கட்டவள வாணகைக்
குறுந்தொடி மடந்தைநந் தோழியுங் கேண்மோ
கவிரலர் பூத்தசெஞ் செம்மைவிற் குடுமி
மஞ்சடை கிளைத்த வரிக்குறு முட்டாட் |
10
|
|
கூரரி
வாளன் றோகையஞ் சேவற்
கொடியோன் குன்றம் புடைவளர் கூடற்
கணிச்சியங் கைத்தலத் தருட்பெருங் காரண
னுலகுயிர் மகவுடைப் பசுங்கொடிக் கொருபாற்
பகுத்துயிர்க் கின்பந் தொகுத்துமெய்த் துறவினன் |
15
|
|
முளரிநீர்ப்
புகுத்திய படமலர்த் தாட்டுணை
மணிமுடி சுமந்தநம் வயலணி யூரர்பின்
வளர்மறித் தகரெனத் திரிதரும் பாண்மக
னெனக்குறித் தறிகிலம் யாமே யெமது
மணியொளிர் முன்றி லொருபுடை நிலைநின் |
20
|
|
றன்ன
வூரர் புல்லமும் விழுக்குடிக்
கடாஅக் கிளவியும் படாஅப் பழியு
மெங்கையர் புலவியி லியம்பின நம்பாற்
றனதுமுன் புன்மொழி நீளத் தந்து
மொன்றுபத் தாயிர நன்றுபெரப் புனைந்துங் |
25
|
|
கட்டிய
பொய்ப்பரப் பனைத்துநிற் குறுத்திற்
பேரெறுழ்ச் சகர ரேழெனப் பறித்த
முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழங்
காட்டையு ளிம்பர் காணத்
தோட்டிநின் றளிக்குந் தன்மையது பெறுமே. |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று
துறை: பாணனொடு
வெகுளுதல்.
(இ-ம்.)
இதற்கு, அவனறிவு ஆற்ற அறியும் (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண் வாயிலின்
வரூஉம் வகை எனவரும் விதி கொள்க.
(இ-ள்)
குவளை பூத்த வடிகண்-குவளைமலர்போல மலர்ந்த கூர்மையான கண்களையும்; தவள வாள் நகை-வெள்ளிய
ஒளிபொருந்திய பற்களையும்; குறுந்தொடி மடந்தை நம் டோழி (உம்) கேண்மோ-குறிய தொடியையுமுடைய
மடப்பத்டையுடைய எந் தொழியே கேட்பாயாக; ஊர் நகைத்து உட்க-ஊறாற் பழித்து அஞ்ச;
ஊக்கும் ஓர் விருந்தினை-நெஞ்சத்தைக் கிளர்ச்சிசெய்யும் ஒரு புதுமைச் செய்தியை;
கைர் அலர் பூத்த-முருக்கு மலர்ந்தாலொத்த; வொல் செஞ் செம்மை குடுமி-ஒளியோடு மிகவும்
சிவண்ட சூட்டையுடைய; மஞ்சுஅடை கிளைத்த-இளமை நீங்காத; வரிகுறு முள் தாள் கூர் அரிவாளின்-
வரிபொருந்திய சிறுமுள்ளோடு கூடிய காலாகிய கூரிய அரிவாளையும் என்க.
(வி-ம்.)
குவளை: ஆகுபெயர். வடி-மாவடுவுமாம். நகை-பல். தொடி-வளையல். கேண்மோ என்புழி, மோ:
முன்னிலையசை. தோழி ஓர் விருந்தினைக் கேண்மதி என இயையும். விருந்து- புதுமை; அஃதாவது
புதுமையான செய்தி. தோழியும் என்புழி, உம்: இசைநிறை. ஊர்: ஆகுபெயர். உட்குதல்-அஞ்சுதல்.
கவிர்-முருக்க மரம். சுட்டு-உச்சிக்கொண்டை.
6
- 9: தோகை............................கொடிக்கு
(இ-ள்)
தோகை அம்சேவல் கொடியோன்-தோகையையுமுடைய அழகிய கோழியையுடைய உயர்த்திய முருகக்
கடவுளினது; குன்றம் புடைவளர் கூடல்- திருப்பரங்குன்றம் ஒருபால் வளர்ந்துள்ள மதுரையின்கண்;
கணிச்சி அம் தைத்தலத்து-மழுப்படையை அழகிய கையினிடத்தேந்திய; அருட் பெரும் காரணன்-அருளையுடைய
பெரிய காரணனாகிய இறைவன்; உலகு உயிர் மகவு உடைப் பசுங்கொடிக்கு-உலகிலுள்ள அனைத்துயிருமாகிய
மக்களையுடைய பசிய பூங்கொடியை யொத்த உமாதேவிக்கு என்க. 9வி-ம்.) சேவற் கொடியோன்-முருகன்.
குன்றம்-திருப்பரங்குன்றம். கணிச்சி- மழுப்படை. காரணன்-நிமிர்த்த காரணள்; என்றது
இறைவனை. பசுங்கொடி: அன்மொழித்தொகை.
9
- 14: ஒருபால்.....................யாமே
(இ-ள்)
ஒருபால் பகுத்து-தன்மெய்யில் ஒருபாகத்தைப் பகுத்துக்கொடுத்து; உயிர்க்கு-முன்கூறப்பட்ட
உயிராகிய மக்களுக்கு; இன்பம் தொகுத்த மெய்த் துறவினன்-இன்ப வாழ்க்கையைக் கூட்டிவைத்த
உண்மைத் துரவியினுடைய; முளைரி நீர் புகுத்திய- தாமரை மலர் வெல்கி நீரிற் புகும்படி
செய்த; பதமலர் தாள் துணை-அன்பர் பெறும் பதமாகிய இரண்டு திருவடிமலரையும்; மணிமுடி
சுமந்த நம் வயல் அணி ஊரர்பின்-அழகிய முடிமேற்கொண்ட நம்முடைய கழனிகள் நிரம்பிய
ஊரையுடைய தலைவருடனே; வளர் மறித்தகர் என-அவரால் வளர்க்கப்பட்ட ஆட்டுக்கிடாய்
போல; திரிதரும் பாண்மகன் எனக்குறித்து- திருயாநின்ற பாணன் என நீ கூறுவாய்; யாம்
அறிகிலம்-யாம் அவனை அங்ஙனம் அறிகின்றிலேம் என்க.
(வி-ம்.)
பால்-பகுதி. உயிர்-ஈண்டு மக்களுயிரைக் குறித்து நின்றது. இறைவன் தனக்குள்ளேயே ஆணும்
பெண்ணும் என இரு தன்மைகளை யுண்டாக்கிக்கொண்டு பெண்ணாகிய உமாதேவிக்குத் தனது இடப்பாகத்தை
யளித்து உயிரினங்களும் தம்முள் ஆணும் பெண்ணும் ஆகிக் காதலுற்று இன்புற்று வாழவேண்டும்
என்னும் கருத்தால் ஆதலின் பசுங்கொடிக்கு ஒருபால் பகுத்து உயிர்க்கு இன்பம் தொகுத்த
எனப் பசுங்கொடிக்குப் பாகம் பகுத்தமையை ஏதுவாக்கினார். இதனை,
படைப்பாதித்
தொழிலும் பத்தர்க் கருளும்பா வனையும் நூலும்
இடைப்பாக மாத ராளோ டியைந்துயிர்க் கின்ப மென்றும்
அடைப்பானாம் அதுவும் முத்தியளித்திடு மியோகும் பாசந்
துடைப்பானாந் தொழிலும் தொடக்கானேற் சொல்லொணாதே
(சித்தி. 74) |
என்னும் சித்தியாரானுன்
உமர்க. வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதுபற்றி இறைவனை மெய்த்துறவினன் என்றார்.
தாமரை மலர்கள் திருவடியின் அழகினை யாம் ஒவ்வோம் என நாணி நீர் புக்கன என்பது
கருத்து; மறித்தகர்-ஆட்டுக்கிடாய். திரிதரும்: ஒருசொல். பாண்மகன்: ஒருசிஒல் பாணன்
என்க.
14
- 19: எமது..........................தந்தும்
(இ-ள்)
எமது மணி முன்றில்-எம்முடைய மண்பிகள் விளங்குகின்ற முற்றத்தில்; அன்ன ஊரர்-அத்தலைவருடைய;
புல்லமும் விழுக்குடிக்கு அடாக் கிளவியும்-புன்மையும் அவரது உயர்குடிப் பிறப்பிற்குத்
தகுதியில்லாத சொல்லும், படா அப் பழியும்-இல்லாத வசையுமாகிய; தனது புல் மொழி-தனது
புன்சொற்களை; முன் எங்கையர் புலவியில்-முன்னர் எந்தங்கையராகிய பரத்தையர் ஊடற்பொழுதின்கண்;
இயம்பின-சொல்லிப் பழகியவற்றையே; நம்பால் நீளத் தந்தும்-னம்மிடத்தேயும் மிகுதியாகச்
சொல்லியும் என்க.
(வி-ம்.)
அன்ன ஊரர் என்றது தலைவனுடைய அயன்மை தோன்ற நின்றது. புல்லம்-புன்மை. விழுக்குடி-உயர்குடி.
அடாக் கிளவி-பொருந்தாச் சொல். படாப்பழி-பொய்ப்பழி. நீளத்தருதல். நெடும்பொழுது
பேசுதல். இப்பானன் நந்தலைவருடன் பரத்தையர் ஊடாடியபொழுது அவர் ஊடல்
தீர்க்கும் பொருட்டுப் பேசிய புல்லிய பொய்ம்மொழிகளையே நம்பால் வந்து நீளமொழிகின்றான்
என்றவாறு.
20 - 21: ஒன்று....................உறுத்தின்
(இ-ள்)
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெற-ஒன்றையே பத்தாகவும் ஆயிரமாகவும் பெருக்கி நாம் நம்பும்படி;
புனைந்தும் கட்டிய பொய்ப்பரப்பு அனைத்தும்-சிறப்பித்து அவனால் கட்டிப் பேசப்பட்ட
பொய்யினது விரிவு முழுதும் யாம் (ஓருவமை வாயிலாய்); நிற்கு உறுத்தின்-உனக்குச் சொல்லப்புகுந்தால்
என்க.
(வி-ம்.)
ஒன்றைப் பத்தும் நூறும் ஆயிரமுமாகப் பெருக்கி என்க. நூறு இனம்பற்றிக்கொள்க. கட்டுதல்-கற்பித்துப்
பேசுடல். உறுத்துதல்-சொல்லி அறிவுறுத்துதல் என்க. உவமைவாயிலாய் என மேலே உவமை கூறுதலால்
வருவித்தோதுக.
22
- 25: பேர்...................பெறும்
(இ-ள்)
பேர் அறுழ் சகரர்-பேராற்றலுடைய சகரர்கள்; ஏழ் எனப் பறித்த முதிர்திரை அடிக்கும்
பரிதி அம் தோழம்-ஏழு என்று எண் கூறும்படி அகழ்ந்த பெரிய அலைவிசுகின்ற ஞாயிறு தோன்றுதற்கிடனான
கடலிடத்தையெல்லாம்; காட்டையுள் இம்பர்காண்-ஒருசில நொட்சியில் இங்குக் காணுமாறு;
தோட்டி நின்று அளிக்கும் தொன்மை உண்டு எனில் அது பெறும்-பெயர்த்து எடுத்துக் காட்டுகின்ற
பழங்கதை ஒன்று உண்டெனில் அதனை ஒக்கும் என்க.
(வி-ம்.)
எறுழ்-வலிமை. பறித்டல், அகழ்தல் என்பன தோண்டுதற் பொருள். திரை, அலை என்பன
ஆகுபெயர்கள். தோழம்-இடம். காட்டை-பதினைந்து நிமிடம் கொண்ட காலத்தின் அளவு.
தோட்டல்- பேர்த்தல். சகரர்கள்-சகரச் சக்கரவர்த்தியின் புதல்வர்கள். இவர்கள்
தொகை அறுபதினாயிரம். பெருமை-இங்கு அடங்காமைப் பொருட்டு. இம்பர்: ஆகுபெயர். அளித்தல்-இங்குக்
காட்டலெனப் பொருள்பட்டு நின்றது. இதனை, நந்தோழி ஒருவிருந்து கேண்மோ, தோகையஞ்
சேவற் கொடியோன் குன்றம் புடைவளர் கூடல் மெய்த்துறவினன் முளரிநீர் புகுத்திய படமலர்த்
தாட்டுணை மணிமுடி சுமந்த நம் வயலணி யூரர் பின் தகரெனத் திரிதரும் பாண்மகன், எமது
முன்றி லொருபுடை நின்று அன்னவூரர்புல்லமும் அடாஅக் கிளவியும் படாப்பழியும் எங்கையர்
புலவிய லியம்பின, நம்பால் நீளத்தந்தும் நன்றுபெறப் புனைந்தும் கட்டிய அனைத்தும்
நிற்குறுத்தின் சகரர் பறித்த பரிதியந் தோழங் காட்டைய்ள் இம்பர் கானத் தோட்டிநின்
றளிக்குந் தொன்மையது பெறுமென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|