தொடக்கம் |
21-30
|
|
|
21. தன்னுள் கையாறு எய்திடு
கிளவி
|
|
|
|
நீர்
நிலை நின்று, கால் கறுத்து எழுந்து, |
|
திக்கு
நிலை படர்ந்த முகில்-பாசடையும்; |
|
இடை
இடை உகளும் மீன் ஆம் மீனும்; |
|
செம்
முகில் பழ நுரை, வெண் முகில் புது நுரை, |
|
எங்கும்
சிதறிப் பொங்கி எழு வனப்பும்; |
5
|
பல
தலை வைத்து முடியாது பாயும், |
|
எங்கும்,
முகம் வைத்த கங்கைக் காலும்; |
|
கொண்டு
குளிர் பரந்த மங்குல்-வாவிக்குள்-- |
|
முயல்
எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கி, |
|
தேவர்-மங்கையர்
மலர் முகம் பழித்து, |
10
|
குறையாப்
பாண்டில் வெண்மையின் மலர்ந்த |
|
மதித்
தாமரையே! மயங்கிய ஒருவேன், |
|
நின்பால்
கேட்கும் அளி மொழி ஒன்று உள: |
|
மீன்
பாய்ந்து மறிக்கத் திரையிடை மயங்கி, |
|
சூல்
வயிறு உளைந்து, வளை கிடந்து முரலும் |
15
|
புன்னைஅம்
பொதும்பரில்--தம்முடை நெஞ்சமும்; |
|
மீன்
உணவு உள்ளி இருந்த வெண் குருகு எனச் |
|
சோறு
நறை கான்ற கைதைய மலரும்; |
|
பல
தலை அரக்கர் பேர் அணிபோல, |
|
மருங்கு
கூண்டு எழுந்து, கருங் காய் நெருங்கி, |
20
|
விளை
கள் சுமந்த தலை விரி பெண்ணையும்; |
|
இன்னும்
காணாக் காட்சி கொண்டு இருந்த |
|
அன்னத்
திரளும்; பெருங் கரியாக, |
|
சொல்லா
இன்பமும் உயிருறத் தந்து, |
|
நாள்
இழைத்திருக்கும் செயிர் கொள் அற்றத்து-- |
25
|
மெய்யுறத்
தணந்த பொய்யினர், இன்று, |
|
(நெடு
மலை பெற்ற ஒரு மகள் காண, |
|
நான்முக-விதியே
தாளம் தாக்க, |
|
அந்த
நான்முகனை உந்தி பூத்தோன் |
|
விசித்து
மிறை பாசத்து இடக்கை விசிப்ப, |
30
|
மூன்று
புரத்து ஒன்றில் அரசுடை வாணன் |
|
மேருக்
கிளைத்த தோள் ஆயிரத்தொடும், |
|
எழு
கடல் கிளர்ந்த திரள் கலி அடங்க, |
|
முகம்
வேறு இசைக்கும் குடமுழவு இரட்ட; |
|
புட்
கால் தும்புரு, மணக் கந்திருவர், |
35
|
நான்மறைப்
பயன் ஆம் ஏழ் இசை அமைத்து, |
|
சருக்கரைக்
குன்றில் தேன்மழை நான்றென; |
|
ஏழு
முனிவர்கள் தாழும் மாதவர், |
|
அன்பினர்
உள்ளமொடு என்பு கரைந்து உருக; |
|
விரல்
நான்கு அமைத்த அணி குரல் வீங்காது, |
40
|
நான்
மறை துள்ளும் வாய் பிளவாது, |
|
காட்டி
உள் உணர்த்தும் நோக்கம் ஆடாது, |
|
பிதிர்
கனல் மணி சூழ் முடி நடுக்காது, |
|
வயிறு
குழி வாங்கி, அழு முகம் காட்டாது; |
|
நாசி,
காகுளி, வெடிகுரல், வெள்ளை, |
45
|
பேசாக்
கீழ்-இசை, ஒருபுறம் ஒட்டல், |
|
நெட்டுயிர்ப்பு
எறிதல், எறிந்து நின்று இரட்டல், |
|
ஓசை
இழைத்தல், கழி போக்கு, என்னப் |
|
பேசுறு
குற்றம் ஆசொடும் மாற்றி; |
|
வண்டின்
தாரியும், கஞ்ச நாதமும், |
50
|
சிரல்
வான்நிலையும், கழை இலை வீழ்வதும், |
|
அருவி
ஓசையும், முழவின் முழக்கமும், |
|
வலம்புரிச்
சத்தமும், வெருகின் புணர்ச்சியும், |
|
இன்னும்
என்று இசைப்பப் பன்னிய விதியொடு; |
|
மந்தரம்,
மத்திமம், தாரம், இவை மூன்றில், |
55
|
துள்ளல்,
தூங்கல், தெள்ளிதின் மெலிதல், |
|
கூடிய
கானம் அன்பொடு பரவ, |
|
பூதம்
துள்ள, பேய் கைமறிப்ப, |
|
எங்கு
உள உயிரும் இன்பம் நிறைந்து ஆட, |
|
நாடக-விதியொடு
ஆடிய பெருமான், |
60
|
மதுரை
மாநகர்ப் பூழியன் ஆகி, |
|
கதிர்
முடி கவித்த இறைவன் மா மணிக் |
|
கால்
தலைக் கொள்ளாக் கையினர் போல) |
|
நீங்கினர்;
போக்கும், ஈங்குழி வருவதும், |
|
கண்டது
கூறுதி ஆயின்; |
65
|
எண்தகப்
போற்றி, நின் கால் வணங்குதுமே. |
|
|
|
உரை
|
|
|
|
|
22.
வேறுபடுத்துக் கூறல் |
|
|
|
கண்ட
காட்சி, சேணின், குறியோ? |
|
என்னுழி
நிலையா உள்ளத்தின் மதியோ? |
|
சூர்ப்பகை-உலகில்
தோன்றினர்க்கு அழகு |
|
விதிக்கும்
அடங்கா என்பன விதியோ? |
|
என்னுடைக்
கண்ணும் உயிரும் ஆகி, |
5
|
உள்
நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி-- |
|
மலைக்குஞ்
சரத்தின் கடக் குழி ஆகி, |
|
நெடு
மலை விழித்த கண்ணே ஆகி, |
|
அம்
மலைத் திருநுதற்கு அழியாது அமைத்த |
|
வெள்ளைகொள்
சிந்துர நல் அணி ஆகி, |
10
|
தூர
நடந்த தாள் எய்ப்பு ஆறி |
|
அமுதொடு
கிடக்கும் நிறைமதிப் பக்கம் |
|
ஒருபால்
கிடந்த துணை மதி ஆகி, |
|
அருவி
வீசப் பறவை குடிபோகி |
|
விண்டு
நறவு ஒழுக்கும் பாண்டில் இறால் ஆய், |
15
|
இளமை
நீங்காது காவல் கொள் அமுதம் |
|
வரையர
மாதர் குழுவுடன் அருந்த |
|
ஆக்கியிடப்
பதித்த வள்ளமும் ஆகி, |
|
இடை
வளி போகாது நெருங்கு முலைக் கொடிச்சியர் |
|
சிறு
முகம் காணும் ஆடி ஆகி, |
20
|
சிறந்தன,
ஒரு சுனை, இம் மலை--ஆட, |
|
அளவாக்
காதல் கைம்மிக்கு அணைந்தனள்: |
|
அவளே
நீயாய், என் கண் குறித்த |
|
தெருமரல்
தந்த அறிவு நிலை கிடக்க; |
|
சிறிது,
நின் குறு வெயர் பெறும் அணங்கு ஆறி, |
25
|
ஒரு
கணன் நிலைக்க மருவுதி ஆயின், |
|
இந்
நிலை பெயர உன்னும் அக் கணத்தில், |
|
தூண்டா
விளக்கின், ஈண்டு, அவள் உதவும்: |
|
அவ்வுழி,
உறவு மெய் பெறக் கலந்து, இன்று, |
|
ஒரு
கடல் இரண்டு திருப் பயந்தாங்கு, |
30
|
வளைத்த
நெடுங் கார்ப் புனத்து, இருவீரும்-- |
|
மணி
நிற ஊசல் அணி பெற உகைத்தும்; |
|
கருங்
கால் கவணிடைச் செம்மணி வைத்து, |
|
பெருந்தேன்
இறாலொடு குறி விழ எறிந்தும்; |
|
வெண்
துகில் நுடங்கி, பொன் கொழித்து, இழியும் |
35
|
அருவி
ஏற்றும்; முழை மலை கூஉயும்; |
|
பெருஞ்
சுனை விழித்த நீலம் கொய்தும்; |
|
கொடுமரம்
பற்றி, நெட்டிதண் பொலிந்து, |
|
தினைக்
குரல் அறையும் கிளிக் கணம் கடிதிர்: |
|
(வெள்ளி,
இரும்பு, பொன், எனப் பெற்ற |
40
|
மூன்று
புரம் வேவ, திருநகை விளையாட்டு, |
|
ஒரு
நாள், கண்ட பெருமான், இறைவன், |
|
மாதுடன்
ஒன்றி, என் மனம் புகுந்து, |
|
பேணா
உள்ளம் காணாது நடந்து, |
|
கொலை
களவு என்னும் பழுமரம் பிடுங்கி, |
45
|
பவர்
சுவர் இடித்துப் புதுக்கக் கட்டி, |
|
அன்புகொடு
மேய்ந்த நெஞ்சமண்டபத்து, |
|
பாங்குடன்
காணத் தோன்றி, உள் நின்று, |
|
பொன்
மலர்ச் சோலை விம்மிய பெரு மலர் |
|
இமையோர்
புரத்தை நிறை மணம் காட்டும் |
50
|
கூடல்அம்
பதியகம் பீடுபெற இருந்தோன் |
|
இரு
தாள் பெற்றவர் பெருந் திருப் போல) |
|
மருவிய
பண்ணை இன்பமொடு விளைநலம் |
|
சொல்லுடன்
அமராது ஈங்கு-- |
|
வில்லுடன்
பகைத்த செந் திரு நுதலே! |
55
|
|
|
உரை
|
|
|
|
|
23.
காமம் மிக்க கழிபடர் கிளவி |
|
|
|
வானவர்க்கு
இறைவன், நிலம் கிடை கொண்டு, |
|
திரு
உடல் நிறை விழி ஆயிரத் திரளும் |
|
இமையாது
விழித்த தோற்றம் போல, |
|
கஞ்சக்
கொள்ளை இடையற மலர்ந்து, |
|
மணம்
சூழ் கிடந்த நீள் கருங் கழியே! |
5
|
கருங்
கழி கொடுக்கும் வெள் இறவு அருந்தக் |
|
கை
பார்த்திருக்கும் மடப் பெடைக் குருகே! |
|
பெடைக்
குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு |
|
காவல்
அடைகிடக்கும் கைதைஅம் பொழிலே! |
|
வெம்மையொடு
கூடியும், தண்மையொடு பொருந்தியும், |
10
|
உலக
இருள் துரக்கும் செஞ்சுடர், வெண்சுடர், |
|
காலம்
கோடா முறைமுறை தோற்ற |
|
மணி
நிரை குயிற்றிய மண்டபம் ஆகி; |
|
பொறை
மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள் |
|
களையாது
உடுக்கும் பைந் துகில் ஆகி; |
15
|
வேனிற்
கிழவன் பேர் அணி மகிழ, |
|
முழக்காது
தழங்கும் வார் முரசு ஆகி; |
|
நெடியோன்
துயிலா அறிவொடு துயில, |
|
பாயற்கு
அமைந்த பள்ளியறை ஆகி; |
|
சலபதி
ஆய்ந்து, சேமநிலை, வைத்த |
20
|
முத்து
மணி கிடக்கும் சேற்று இருள் அரங்காய்; |
|
புலவு
உடற் பரதவர் தம் குடி ஓம்ப, |
|
நாளும்
விளைக்கும் பெரு வயல் ஆகி; |
|
கலம்
எனும் நெடுந் தேர் தொலையாது ஓட, |
|
அளப்பு
அறப் பரந்த வீதி ஆகி; |
25
|
சுறவ
வேந்து நெடும் படை செய்ய |
|
முழக்கமொடு
வளைத்த அமர்க்களம் ஆகி; |
|
மகரத்
தெய்வம் நாள் நிறைந்து உறைய, |
|
மணி
விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி; |
|
நீர்
நெய் வார்த்துச் சகரர் அமைத்த |
30
|
தீ
வளர் வட்டக் குண்டம் ஆகி; |
|
எண்
திகழ் பகுவாய் இன மணிப் பாந்தள்- |
|
தண்டில்
நின்று எரியும் தகளி ஆகி; |
|
பஞ்சவன்
நிறைந்த அன்புடன் வேண்ட, |
|
மாறிக்
குனித்த நீறு அணி பெருமாற்கு |
35
|
அமுத-போனகம்
கதுமென உதவும் |
|
அடும்
தீ மாறா மடைப்பள்ளி ஆகி; |
|
இன்னும்
பலவாய் மன்னும் கடலே! |
|
நுங்கள்
இன்பம் பெருந் துணை என்றால், |
|
தண்ணம்
துறைவற்கு இன்று இவள் ஒருத்தி, |
40
|
நெருப்பு
உறு மெழுகின் உள்ளம் வாடியும், |
|
அருவி
தூங்கக் கண்ணீர் கொண்டும், |
|
அரவின்
வாய் அரியின் பலவும் நினைந்தும், |
|
நிலையாச்
சூளின் நிலையா நெஞ்சம் |
|
கொண்டனள்
என் என, என் முகம் நாடி, |
45
|
உற்ற
வாய்மை சற்றும் தருகிலீர் |
|
அன்று
எனின், நும்மின் ஒன்று பட்டு, ஒருகால், |
|
'இவளோ
துயரம் பெறுவது என்?' என்று |
|
வினவாது
இருக்கும் கேண்மை, |
|
மனனால்
நாடின், கொலையினும் கொடிதே! |
50
|
|
|
உரை
|
|
|
|
|
24.
இடம் அணித்துக்கூறி வற்புறுத்தல் |
|
|
|
பொருப்பு
வளன் வேண்டி, மழைக்கண் திறப்ப, |
|
குருகு
பெயர்க் குன்றத்து உடல் பக எறிந்த |
|
நெடு
வேற் கடவுள் மயில், கொடி, முன்றில் |
|
பெருங்கிளை
கூண்டு, வெட்சி மலர் பரப்பி, |
|
இறால்
நறவு அளாய செந் தினை வெள் இடி, |
5
|
தேக்கு
இலை விரித்து, நால் திசை வைத்து, |
|
மனவு
அணி முதியோள், வரை அணங்கு அயர்ந்து, |
|
மூன்று
காலமும் தோன்றக் கூற, |
|
வேலன்
சுழன்று குறு மறி அறுப்ப, |
|
கருவி
நுதிகொள் நெறி இலை ஈந்தின் |
10
|
முற்றிய
பெரு நறவு எண்ணுடன் குடித்து, |
|
நெட்டிலை
அரம்பைக் குறுங் காய் மானும் |
|
உளியம்
தணித்த கணை கொள் வாய்த் திரிகல் |
|
ஒப்பு
உடைத்தாய வட்ட வாய்த் தொண்டகம், |
|
கோல்
தலை பனிப்ப, வான்விடு பெருங் குரல் |
15
|
வீயாது
துவைக்கும் கடன் மலை நாடர் |
|
வருந்தி
ஏற்று எடுத்த செந்திரு மட மகள்! |
|
ஒருவுக,
உளத்துப் பெருகிய நடுக்கம்: |
|
எம்
ஊர்ச் சேணும், நும் ஊர்க் குன்றமும், |
|
பெருந்
தவர் குழுவும், அருங் கதி இருப்பும்; |
20
|
பொதியமும்,
களிப்ப விரிதரு தென்றலும்; |
|
கனைகடல்
குடித்த முனிவனும், தமிழும்; |
|
மேருவும்,
மூவர்க்கு ஓதிய புரமும்; |
|
உலகம்
ஈன்று அளித்த உமையும், மா அறனும்; |
|
தேவர்க்கு
அரசனும், காவல் தருவும்; |
25
|
வழுவா
விதியும், எழுதா மறையும்; |
|
செங்கோல்
வேந்தும், தங்கிய குடியும்; |
|
தவம்
சூழ் இமயமும், கமஞ் சூல் மழையும்: |
|
எல்லையில்
ஈங்கு இவை சொல்லிய அன்றி, |
|
கண்ணன்
கரமும் வெண்ணெயும் போலப் |
30
|
பாசடை
புதைத்த நெட்டாற்று எரியுள், |
|
பூத்து
அலர் விரித்த சேப் படு தாமரை- |
|
உள்
வளை உறங்கும் வள்ள வாய்க் கூடல் |
|
நிறைந்து
உறை முக் கண் பெருந் திறல் அடிகள், |
|
அடியவர்க்கு
எவ்வளவு" அது ஆம்-- |
35
|
கொடி
புரை நுசுப்பின் பெரு முலையோளே! |
|
|
|
உரை
|
|
|
|
|
25. நின் குறை நீயே சென்று
உரை என்றல்
|
|
|
|
வேற்றுப்
பிடி புணர்ந்த தீராப் புலவி |
|
சுற்றமொடு
தீர்க்க உய்த்த காதலின், |
|
கருங்
கை வெண் கோட்டுச் சிறு கட் பெருங் களிறு, |
|
உளத்து
நின்று அளிக்கும் திருத்தகும் அரு நூல் |
|
பள்ளிக்
கணக்கர் பால் பட்டாங்கு, |
5
|
குறிஞ்சிப்
பெருந் தேன் இறாலொடு சிதைத்து, |
|
மென்
நடைப் பிடிக்குக் கைபிடித்து உதவி, |
|
அடிக்கடி
வணங்கும் சாரல் நாட! |
|
(அந்தணர்
இருக்கை அகல்வோர் சூழ்ந்தென, |
|
நல்
நயம் கிடந்த பொன்னகர் மூடிப் |
10
|
புலை
செய்து, உடன்று, நிலைநிலை தேய்க்கும் |
|
தள்ளா
மொய்ம்பின், உள் உடைந்து, ஒருகால், |
|
வேதியன்
முதலா அமரரும் அரசனும் |
|
போது
தூய் இரப்ப, புணரா மயக்கம் |
|
நாரணன்
நடித்த பெரு வாய்த் தருக்கத்து |
15
|
அறிவு
நிலை போகி, அருச்சனை விடுத்த |
|
வெள்ள
முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும், |
|
அடுக்கு
நிலை சுமந்த வலித் தடப் பொன்மலை |
|
கடு
முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி, |
|
ஆயிரம்
தீ வாய் அரவு நாண் கொளீஇ, |
20
|
மாதவன்,
அங்கி, வளி, குதை, எழு நுனி, |
|
செஞ்சரம்;
பேர் உருள், அருக்கன், மதி ஆக; |
|
தேர்
வரை வையம் ஆகத் திருத்தி, |
|
சென்னி
மலை ஈன்ற கன்னி விற் பிடிப்ப; |
|
ஒரு
கால் முன் வைத்து, இரு கால் வளைப்ப, |
25
|
வளைத்த
வில் வட்டம் கிடைத்தது கண்டு, |
|
சிற
நகை கொண்ட ஒரு பெருந் தீயின், |
|
ஏழ்
உயர்வானம் பூழிபடக் கருக்கி; |
|
அருச்சனை
விடாது, அங்கு, ஒருப்படும் மூவரில் |
|
இருவரைக்
காவல் மருவுதல் ஈந்து, |
30
|
மற்று
ஒருவற்கு வைத்த நடம் அறிந்து |
|
குடமுழவு
இசைப்பப் பெறும் அருள் நல்கி, |
|
ஒரு
நாள் அருச்சனை புரிந்திடா அவர்க்கும் |
|
அரும்பெறல்
உளது ஆம் பெரும் பதம் காட்டி, |
|
எரியிடை
மாய்ந்த கனல்விழி அரக்கர்க்கு |
35
|
உலவாப்
பொன்னுலகு அடைதர வைத்த |
|
சுந்தரக்
கடவுள், கந்தரக் கறையோன், |
|
மாமி
ஆடப் புணரி அழைத்த |
|
காமர்
கூடற்கு இறைவன் கழல் இணை, |
|
களிப்புடை
அடியர்க்கு வெளிப்பட்டு என்ன) |
40
|
ஒரு
நீ தானே மருவுதல் கிடைத்து, |
|
கள்ளமும்
வெளியும் உள்ள முறை அனைத்தும் |
|
விரித்துக்
கூறி, பொருத்தமும் காண்டி-- |
|
ஈயா
மாந்தர் பொருள் தேய்ந்தென்ன |
|
நுண்
இடை சுமந்து ஆற்றாது |
45
|
கண்ணிய
சுணங்கின் பெரு முலையோட்கே! |
|
|
|
உரை
|
|
|
|
|
26.
இரவுக் குறி வேண்டல் |
|
|
|
வள்ளியோர்
ஈதல் வரையாது போல, |
|
எண்
திசை கரு இருந்து, இன மழை கான்றது; |
|
வெண்
நகைக் கருங் குழல் செந் தளிர்ச் சீறடி |
|
மங்கையர்
உளம் என, கங்குலும் பரந்தது; |
|
தெய்வம்
கருதாப் பொய்யினர்க்கு உரைத்த |
5
|
நல்
வழி மான, புல் வழி புரண்டது; |
|
காலம்
முடிய, கணக்கின் படியே, |
|
மறலி
விடுக்க வந்த தூதுவர் |
|
உயிர்தொறும்
வளைந்தென, உயிர் சுமந்து உழலும் |
|
புகர்மலை
இயங்காவகை அரி சூழ்ந்தன; |
10
|
(வெள்
உடற் பேழ்வாய்த் தழல் விழி மடங்கல்- |
|
உரிவை
மூடி, கரித் தோல் விரித்து, |
|
புள்ளி
பரந்த வள் உகிர்த் தரக்கின் |
|
அதள்
பியற்கு இட்டு, குதி பாய் நவ்வியின் |
|
சருமம்
உடுத்து, கரும் பாம்பு கட்டி, |
15
|
முன்பு
உகுவிதிகள் என்பு குரல் பூண்டு, |
|
கருமா
எயிறு திரு மார்பு தூக்கி, |
|
வையகத்
துயரின் வழக்கு அறல் கருதி-- |
|
தொய்யில்
ஆடும் கடனுடைக் கன்னியர் |
|
அண்ணாந்த
வன முலைச் சுண்ணமும் அளறும், |
20
|
எழிலி
வான் சுழலப் பிளிறு குரற் பகட்டினம் |
|
துறை
நீர் ஆடப் பரந்த கார் மதமும்; |
|
பொய்கையும்,
கிடங்கும், செய்யினும் புகுந்து; |
|
சிஞ்சை
இடங்கரை, பைஞ் சிலைச் சேலை, |
|
உடற்
புலவு மாற்றும் படத்திரை வையை |
25
|
நிறைநீர்
வளைக்கும் புகழ் நீர்க் கூடல்-- |
|
வெள்ளிஅம்
பொதுவில், கள் அவிழ் குழலொடும் |
|
இன்ப
நடம் புரியும் தெய்வ நாயகன்) |
|
அருவி
உடற் கயிறும், சுனை மதக் குழியும், |
|
பெருந்தேன்
செவியும், கருந் தேன் தொடர்ச்சியும், |
30
|
ஓவா,
பெரு மலைக் குஞ்சரம் மணக்க, |
|
வளம்
தரும் உங்கள் தொல் குடிச் சீறூர்க்கு, |
|
அண்ணிய
விருந்தினன் ஆகி |
|
நண்ணுவன்--சிறு
நுதற் பெரு விழியோளே! |
|
|
|
உரை
|
|
|
|
|
27.
நகர் அணிமை கூறல் |
|
|
|
புயற்கார்ப்
பாசடை, எண்படப் படர்ந்த, |
|
வெள்ளப்
பெரு நதி கொள்ளை முகம் வைத்து, |
|
நீட,
நிறை பாயும் வான வாவிக்குள் |
|
ஒரு
செந்தாமரை நடு மலர்ந்தென்ன, |
|
மூஅடி
வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு, |
5
|
ஒரு
தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய |
|
கருங்
கடல் வண்ணன் செங் கருங் கரத்து |
|
ஒன்றால்
இரு மலை அன்று ஏந்தியதென, |
|
உந்தி
ஒழுக்கு ஏந்திய வன முலையாட்டியும் |
|
வரை
பொரும் மருமத்து ஒரு திறன் நீயும், |
10
|
முழை
வாய் அரக்கர் பாடு கிடந்தொத்த |
|
நிறை
கிடைப் பொற்றை வரை கடந்து இறந்தால்-- |
|
எரி
தழற் குஞ்சி, பொறி விழி, பிறழ் எயிற்று, |
|
இருள்
உடல் அந்தகன் மருள் கொள உதைத்த |
|
மூவாத்
திருப் பதத்து ஒரு தனிப் பெருமான், |
15
|
எண்ணில்
பெறாத அண்டப் பெருந் திரள் |
|
அடைவு
ஈன்றளித்த பிறை நுதற் கன்னியொடும் |
|
அளவாக்
கற்பம் அளி வைத்து நிலைஇய-- |
|
பாசடை
நெடுங் காடு காணிகொள் நீர்நாய், |
|
வானவில்
நிறத்த நெட்டுடல் வாளைப் |
20
|
பேழ்வாய்
ஒளிப்ப, வேட்டுவப்பெயர் அளி- |
|
இடை
உறழ் நுசுப்பின் குரவை வாய்க் கடைசியர் |
|
களை
கடுந் தொழில் விடுத்து, உழவு செறு மண்ட, |
|
பண்கால்
உழவர் பகடு பிடர் பூண்ட |
|
முடப்
புது நாஞ்சில் அள்ளல் புக நிறுத்தி, |
25
|
சூடு
நிலை உயர்த்தும் கடுங் குலை ஏற, |
|
பைங்
குவளை துய்க்கும் செங் கட் கவரி |
|
நாகொடு
வெருண்டு கழைக் கரும்பு உழக்க, |
|
அமுத
வாய் மொழிச்சியர் நச்சுவிழி போல |
|
நெடுங்
குழை கிழிப்பக் கடுங் கயல் பாயும் |
30
|
தண்ணம்
பழனம் சூழ்ந்த-- |
|
கண்
இவர் கூடல் பெரு வளம் பதியே! |
|
|
|
உரை
|
|
|
|
|
28. அறியாள் போன்று நினைவு கேட்டல்
|
|
|
|
பற்றலர்த்
தெறுதலும், உவந்தோர்ப் பரித்தலும், |
|
வெஞ்
சுடர், தண் மதி, எனப் புகழ் நிறீஇய |
|
நெட்டிலைக்
குறும் புகர்க் குருதி வேலவ! |
|
(வேதியன்
படைக்க, மாலவன் காக்கப் |
|
பெறாதது
ஓர் திரு உருத் தான் பெரிது நிறுத்தி, |
5
|
அமுது
அயில் வாழ்க்கைத் தேவர்கோன் இழிச்சிய, |
|
மதமலை
இரு-நான்கு பிடர் சுமந்து ஓங்கிச் |
|
செம்
பொன் மணி குயிற்றிய சிகரக் கோயிலுள், |
|
அமையாத்
தண்ணளி உமையுடன் நிறைந்த |
|
ஆலவாய்
உறைதரும் மூலக் கொழுஞ் சுடர்) |
10
|
கருவி
வானம் அடிக்கடி பொழியும், |
|
கூடம்
சூழ்ந்த நெடு முடிப் பொதியத்து-- |
|
கண்
நுழையாது காட்சிகொடு தோற்றிய |
|
வெறி
வீச் சந்தின் நிரை இடை எறிந்து, |
|
மற்று
அது வேலி கொள வளைத்து, வளர் ஏனல் |
15
|
நெடுங்
கால், குற்றுழி, இதணுழை காத்தும்; |
|
தேவர்கோமான்
சிறை அரி புண்ணினுக்கு |
|
ஆற்றாது,
பெரு முழை வாய் விட்டுக் கலுழ்ந்தென, |
|
கமஞ்
சூற் கொண்மூ, முதுகு குடியிருந்து, |
|
வான்
உட்க முரற்றும் மலைச் சுனை குடைந்தும்; |
20
|
பிரசமும்,
வண்டும், இரவி தெறு மணியும், |
|
வயிரமும்,
பொன்னும், நிரைநிரை கொழித்து, |
|
துகில்
நான்று நுடங்கும் அருவி ஏற்றும்; |
|
மறு
அறு செம்மணி கால் கவண் நிறுத்தி, |
|
நிறைமதி
கிடக்கும் இறால் விழ எறிந்தும்; |
25
|
எதிர்
சொல் கேட்பக் கால் புகத் திகைத்த |
|
நெருக்கு
பொழில் புக்கு, நெடு மலை கூயும்; |
|
நுசுப்பின்
பகைக்கு நூபுரம் அரற்றப் |
|
பைங்
காடு நகைத்த வெண் மலர் கொய்தும்; |
|
மனத்தொடு
கண்ணும் அடிக்கடி கொடுபோம் |
30
|
செம்
பொன் செய்த வரிப் பந்து துரந்தும்; |
|
இனைய,
பல் நெறிப் பண்ணை இயங்கும் |
|
அளவாக்
கன்னியர்-அவருள், |
|
உளம்
ஆம் வேட்கையள் 'இன்னள்' என்று உரையே. |
|
|
|
உரை
|
|
|
|
|
29.
சுடரோடு இரத்தல் |
|
|
|
ஈன்ற
என் உளமும், தோன்றும் மொழி பயின்ற |
|
வளை
வாய்க் கிள்ளையும், வரிப் புனை பந்தும், |
|
பூவையும்,
கோங்கின் பொன் மலர் சூட்டிய |
|
பாவையும்,
மானும்--தெருள்பவர் ஊரும், |
|
நெடுந்
திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினைப் |
5
|
பெரு
வளி மலக்க, செயல் மறுமறந்தாங்கு-- |
|
சேர
மறுக, முதுக்குறை உறுத்தி, |
|
எரி
தெறும் கொடுஞ் சுரத்து இறந்தனளாக, |
|
(நதி
மதம், தறுகண், புகர், கொலை, மறுத்த |
|
கல்
இபம்-அதனைக் கரும்பு கொள வைத்த |
10
|
ஆலவாய்
அமர்ந்த நீலம் நிறை கண்டன், |
|
மறிதிரைப்
பரவைப் புடை வயிறு குழம்பத் |
|
துலக்கு
மலை ஒரு நாள் கலக்குவ போல, |
|
உழுவை
உகிர் உழக்கும் ஏந்து கோட்டு உம்பல், |
|
உரிவை
மூடி ஒளியினை மறைத்து, |
15
|
தரை
படு மறுக்கம் தடைந்தன போல) |
|
விண்
உற விரித்த கரு முகிற்படாம் கொடு, |
|
மண்ணகம்
உருகக் கனற்றும் அழல் மேனியை-- |
|
எடுத்து
மூடி, எறிதிரைப் பழனத்துப் |
|
பனிச்
சிறுமை கொள்ளா முள் அரை முளரி |
20
|
வண்டொடு
மலர்ந்த வண்ணம் போல, |
|
கண்ணும்
மனமும் களிவர மலர்த்துதி-- |
|
மலர்தலை
உலகத்து இருள் எறி விளக்கும், |
|
மன்
உயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும், |
|
மறை
உகு நீர்க்குக் கருவும், கரியும், |
25
|
வடிவம்
எட்டனுள் வந்த ஒன்றும், |
|
சேண்
குளம் மலர்ந்த செந்தாமரையும், |
|
சோற்றுக்
கடன் கழிக்கப் போற்று உயிர் அழிக்கும் |
|
ஆசைச்
செருநர்க்கு அடைந்து செல் வழியும், |
|
அருளும்
பொருளும், ஆகித் |
30
|
திரு
உலகு அளிக்கும் பருதி வானவனே! |
|
|
|
உரை
|
|
|
|
|
30.
இன்னல் எய்தல் |
|
|
|
வள்
உறை கழித்துத் துளக்கு வேல்-மகனும், |
|
மனவு
மயிற்கழுத்து மாலையாட்டியும், |
|
நெல்
பிடித்து உரைக்கும் குறியினோளும், |
|
நடுங்கு
அஞர் உற்ற பழங்கண் அன்னையரும், |
|
அயரும்
வெறியில் தண்டா அரு நோய், |
5
|
ஈயாது
உண்ணுநர் நெடும் பழி போலப் |
|
போகாக்
காலை புணர்க்குவது என்னோ? |
|
(நான்கு
எயிற்று ஒருத்தல் பிடர்ப் பொலி வரைப்பகை |
|
அறுகால்
குளிக்கும் மதுத் தொடை ஏந்த, |
|
முள்-தாட்
செம்மலர் நான்முகத்து ஒருவன் |
10
|
எண்ணி
நெய் இறைத்து மண அழல் ஓம்ப, |
|
புவி
அளந்து உண்ட திரு நெடு மாலோன் |
|
இரு
கரம் அடுக்கிப் பெரு நீர் வார்ப்ப |
|
ஒற்றை-ஆழியன்,
முயல் உடல் தண்சுடர், |
|
அண்டம்
விளர்ப்பப் பெரு விளக்கு எடுப்ப, |
15
|
அளவாப்
புலன் கொள, விஞ்சையர் எண்மரும், |
|
வள்ளையில்
கருவியில் பெரும் புகழ் விளைப்ப, |
|
முனிவர்
செங் கரம் சென்னி ஆக, |
|
உருப்பசி
முதலோர் முன் வாழ்த்து எடுப்ப, |
|
மும்
முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட) |
20
|
கூடற்கு
இறைவன் இரு தாள் இருத்தும் |
|
கவையா
வென்றி நெஞ்சினர் நோக்க, |
|
பிறவியும்
கூற்றமும் பிரிந்தன போலப் |
|
பீரமும்
நோயும் மாறில், |
|
வாரித்
துறைவற்கு என் ஆதும்மே? |
25
|
|
|
உரை
|
|
|
|