31-40
 
31. நெஞ்சோடு நோதல்
 
 
பொருள் செயல் அருத்தியின், எண் வழி தடைந்து,  
நால் திசை நடக்கும், அணங்கின் அவயவத்து,  
அலை தரு தட்டைக் கரும் புறம், மலை, மடல்,  
கடல் திரை உகளும் குறுங் கயல் மானும்  
கடுங் கான் தள்ளி, தடைதரு நெஞ்சம்!
5
(கயிலைத் தென்பால் கானகம், தனித்த  
தேவர் நெஞ்சு உடைக்கும், தாமரை யோகின்  
மணக் கோல் துரந்த குணக்கோ மதனை,  
திருக் குளம் முளைத்த கண் தாமரை கொடு  
தென் கீழ்த் திசையோன் ஆக்கிய தனிமுதல்
10
திரு மா மதுரை எனும்) திருப் பொற்றொடி,  
என் உயிர் அடைத்த பொன் முலைச் செப்பின்  
மாளா இன்பம் கருதியோ? அன்றி,  
புறன் பயன் கொடுக்கும் பொருட்கோ? வாழி!  
வளர் முலை இன்பு எனின், மறித்து நோக்குமதி:
15
பெரும்-பொருள் இன்பு எனின், பெரிது தடை இன்றே:  
யாதினைக் கருதியது? ஒன்றை  
ஓதல் வேண்டும்; வாழிய பெரிதே!  
உரை
   
          32. வேழம் வினாதல்  
   
தன் உடல் அன்றிப் பிறிது உண் கனை இருள்  
பகல் வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல,  
பெரு நிலவு கான்ற நீறு கெழு பரப்பில்--  
அண்ட நாடவர்க்கு ஆர் உயிர் கொடுத்த  
கண்டக் கறையோன், கண்தரு நுதலோன்,
5
முன் ஒரு நாளில் நால் படை உடன்று  
செழியன் அடைத்த சென்னி பாட  
எள் அருங் கருணையின், நள் இருள் நடு நாள்,  
அவன் எனத் தோன்றி அருஞ் சிறை விடுத்த  
முன்னவன் கூடல் மூதூர் அன்ன--
10
வெண் நகைச் செவ் வாய்க் கருங் குழல் மகளிர்!  
செம்மணி கிடந்த நும் பசும் புனத்து உழையால்,  
வாய் சொரி மழைமதத் தழைசெவிப் புழைக் கைக்  
குழிகண் பரூஉத் தாள் கூர்ங் கோட்டு ஒருத்தல்,  
சினை தழை விளைத்த பழுமரம் என்ன,
15
அறுகால் கணமும், பறவையும், கணையும்,  
மேகமும், பிடியும், தொடர  
ஏகியது உண்டேல், கூறுவிர் புரிந்தே.
உரை
   
   33. உலகின்மேல் வைத்து உரைத்தல்  
 
இருளொடு தாரகை இரண்டினை மயக்கி,  
குழல் என, மலர் என, மயல்வரச் சுமந்து;  
வில்லினைக் குனித்து, கணையினை வாங்கி,  
புருவம், கண் என, உயிர் விடப் பயிற்றி;  
மலையினைத் தாங்கி, அமுதினைக் கடைந்து,
5
முலை என, சொல் என, அவா வர வைத்து;  
மெய்யினைப் பரப்பி, பொய்யினைக் காட்டி,  
அல்குல், இடை என, நெஞ்சு உழலக் கொடுத்து;  
முண்டகம் மலர்த்தி, மாந் தளிர் மூடி,  
அடி என, உடல் என, அலமரல் உறீஇ-
10
(மூரி வீழ்ந்த நெறிச் சடை முனிவர்,  
சருக்கம் காட்டும் அரு மறை சொல்லி,  
உள்ளம் கறுத்து, கண் சிவந்து, இட்ட  
மந்திரத்து, அழல் குழி தொடு வயிறு வருந்தி,  
முன்பின் ஈன்ற, பேழ்வாய்ப் புலியினை,
15
கைதை முள் செறித்த கூர்எயிற்று அரவினை,  
கார் உடல் பெற்ற தீ விழிக் குறளினை--  
உரி செய்து உடுத்து, செங்கரம் தரித்து,  
செம்மலர் பழித்த தாட் கீழ்க் கிடத்தி,  
திருநடம் புரிந்த தெய்வ நாயகன்,
20
ஒரு நாள், மூன்று புரம் தீக் கொளுவ,  
பொன்மலை பிடுங்கி, கார்முகம் என்ன  
வளைத்த ஞான்று, நெடு விண் தடையக்  
கால் கொடுத்தன்ன கந்திகள் நிமிர்ந்து,  
நெருக்கு பொழில் கூடல் அன்ன) செம் மகளிர்
25
கண் எனும் தெய்வக் காட்சியுள் பட்டோர்,  
வெண்பொடி, எருக்கம், என்பு, பனை, கிழியினை,  
பூசி, அணிந்து, பூண்டு, பரி கடவி,  
கரத்தது ஆக்கி, அந் நோ  
அருத்தி மீட்பர்--நிலை வல்லோரே.
30
உரை
   
34. அல்லகுறி அறிவித்தல்
 
 
வற்றிய நரம்பு, நெடுங் குரல், பேழ்வாய்,  
குழிவிழி, பிறழ்பல், தெற்றற் கருங் கால்,  
தாளிப் போந்தின் தரு மயிர்ப் பெருந் தலை,  
விண் புடைத்து அப்புறம் விளங்கு உடற் குணங்கினம்  
கானம் பாடிச் சுற்றி நின்று ஆட,
5
சுழல் விழி, சிறு நகை, குடவயிற்று, இரு குழைச்  
சங்கக் குறுந் தாட் பாரிடம் குனிப்ப;  
தேவர் கண் பனிப்ப; முனிவர் வாய் குழற;  
கல்லவடத் திரள், மடி வாய்த் தண்ணுமை,  
மொந்தை, கல்லலகு, துத்தரி, ஏங்க;
10
கட்செவி சுழல; தாழ்சடை நெறிப்ப;  
இதழி தாது உதிர்ப்ப; பிறை அமுது உகுக்க;  
வெள்ளி அம்பலத்துள் துள்ளிய பெருமான்  
கூடல் மாநகர் அன்ன, பொற்கொடி!  
இரவிக்கு அணிய வைகறை காறும்
15
அலமரல் என்னை கொல்? அறிந்திலம் யாமே!--  
வெண் முத்து அரும்பி, பசும் பொன் மலர்ந்து,  
கடைந்த செம் பவளத் தொத்துடன் காட்டும்  
இரும்பு கவைத்தன்ன கருங் கோட்டுப் புன்னைச்  
சினை முகம் ஏந்திய இணர்கொள் வாய்க் குடம்பையின்,
20
எக்கர்ப் புள்ளினம் வெண்மை இடம் மறைக்கும்  
சிறை விரி தூவிச் செங் கால் அன்னம்,  
குறும் பார்ப்பு அணைக்கும் பெடையொடு வெரீஇ,  
சேவலும் இனமும் சூழும்  
காவில் மாறித் துயில் அழுங்குதற்கே.
25
உரை
   
     35. நலம் புனைந்து உரைத்தல்  
 
அருள் தரும் கேள்வி அமையத் தேக்க,  
பற்பல ஆசான் பாங்கு செல்பவர் போல்,  
மூன்று வகை அடுத்த தேன் தரு கொழு மலர்  
கொழுதிப் பாடும் குணச் சுரும்பினங்காள்!  
உளத்து வேறு அடக்கி, முகமன் கூறாது,
5
வேட்கையின் நீயிர் வீழ் நாள்-பூவினத்துள்--  
கார் உடல் பிறை எயிற்று அரக்கனைக் கொன்று  
வச்சிரத் தடக்கை வரைப் பகை சுமந்த  
பழ உடல் காட்டும் தீராப் பெரும் பழி,  
பனி மலை பயந்த மாதுடன், தீர்த்தருள்
10
பெம்மான் வாழும் பெரு நகர்க் கூடல்  
ஒப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்--  
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு,  
நானம் நீவி, நாள்மலர் மிலைந்து,  
கூடி உண்ணும் குணத்தினர் கிளைபோல்
15
நீடிச் செறிந்து, நெய்த்து உடல் குளிர்ந்த  
கருங் குழற் பெரு மணம் போல  
ஒருங்கும் உண்டோ? பேசுவிர் எமக்கே!  
உரை
   
      36. நாண் இழந்து வருந்தல்  
   
மை குழைத்தன்ன தொள்ளிஅம் செறுவில்,  
கூர்வாய்ப் பறை தபு பெருங் கிழ நாரை,  
வஞ்சனை தூங்கி, ஆரல் உண்ணும்  
நீங்காப் பழனப் பெரு நகர்க் கூடல்,  
கரம் மான் தரித்த பெருமான் இறைவன்
5
பொன் பழித்து எடுத்த இன்புறு திருவடி  
உளம் விழுங்காத களவினர் போல, என்  
உயிரொடும் வளர்ந்த பெரு நாண்-தறியினை,  
வெற்பன் காதற்கால் உலை வேலையின்--  
வலி உடைக் கற்பின் நெடு வளி சுழற்றிக்
10
கட்புலன் காணாது, காட்டை கெட உந்தலின்;  
என்போல், இந் நிலை, ஆறுவரப் படைக்கும்  
பேறு, ஆங்கு ஒழிக: பெரு நாண் கற்பினர்  
என் பேறு உடையர் ஆயின்,  
கற்பில் தோன்றாக் கடன் ஆகுகவே.
15
உரை
   
    37. தோழி இயற்பழித்தல்  
   
வடமீன் கற்பின் எம் பீடு கெழு மடந்தை,  
பெருங் கடல் முகந்த வயிறு நிறை நெடுங் கார்  
விண் திரிந்து முழங்கி வீழாதாகக்  
கருவொடு வாடும் பைங் கூழ்போல,  
கற்பு நாண் மூடிப் பழங்கண் கொள்ள--
5
உயர்மரம் முளைத்த ஊரி போல,  
ஓர் உடல் செய்து மறு மனம் காட்டும்  
மாணிழை-மகளிர்வயின் வைகுதலால்,  
(கரு முகிற் கனி நிறத் தழற்கண் பிறை எயிற்று  
அரி தரு குட்டி ஆய பன்னிரண்டினை,
10
செங்கோல் முளை இட்டு, அருள்நீர் தேக்கி,  
கொலை களவு என்னும் படர் களை கட்டு,  
தீப் படர் ஆணை வேலி கோலி,  
தருமப் பெரும் பயிர் உலகு பெற விளைக்கும்  
நால் படை வன்னியர் ஆக்கிய பெருமான்--
15
முள் உடைப் பேழ்வாய்ச் செங் கண் வராலினம்  
வளை வாய்த் தூண்டிற் கருங் கயிறு பரிந்து,  
குவளைப் பாசடை முண்டகம், உழக்கி,  
நெடுங் கால் பாய்ந்து, படுத்த ஒண் தொழில்  
சுருங்கை வழி அடைக்கும் பெருங் கழிப் பழனக்
20
கூடற்கு இறைவன்--இரு தாள் விடுத்த  
பொய்யினர் செய்யும் புல்லம் போல,)  
பேரா வாய்மை ஊரன்,  
தாரொடு மயங்கி, பெருமையும் இலனே.
உரை
   
       38. பொழுது கண்டு மயங்கல்  
   
கோடிய கோலினன் செருமுகம் போல,  
கனைகதிர் திருகிக் கல் சேர்ந்து முறை புக;  
பதினெண் கிளவி ஊர் துஞ்சியபோல்,  
புட் குலம் பொய்கைவாய் தாழ்க்கொள்ள;  
வேள் சரத்து உடைகுநர் கோலம் நோக்கி,
5
இருள்மகள் கொண்ட குறுநகை போல,  
முல்லையும் மௌவலும், முருகு உயிர்த்து, அவிழ;  
தணந்தோர் உளத்தில் காமத்தீப் புக;  
மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர் விட;  
அன்றில் புற் சேக்கை புக்கு, அலகு பெடை அணைய;
10
அந்தணர் அருமறை அருங்கிடை அடங்க;  
முது கனி, மூலம், முனிக்கணம் மறுப்ப;  
கலவையும், பூவும், தோள், முடி, கமழ;  
விரிவலை நுளையர் நெய்தல் ஏந்தி,  
துத்தம், கைக்கிளை, அளவையின் விளைப்ப;
15
நீரரமகளிர் செவ் வாய் காட்டிப்  
பசுந் தாட் சேக் கொள் ஆம்பல் மலர,  
(தோளும் இசையும், கூறிடும் கலையும்,  
அருள்-திரு எழுத்தும், பொருள்-திரு மறையும்,  
விரும்பிய குணமும், அருந் திரு உருவும்,
20
முதல் என் கிளவியும், விதமுடன் நிரையே--  
எட்டும், ஏழும், சொற்றன ஆறும்,  
ஐந்தும், நான்கும், அணிதரு மூன்றும்  
துஞ்சல் இல் இரண்டும், சொல் அரும் ஒன்றும்--  
ஆர் உயிர் வாழ அருள் வர நிறுத்திய,
25
பேர் அருட் கூடல் பெரும்பதி நிறைந்த)  
முக்கட் கடவுள் முதல்வனை வணங்கார்  
தொக்க தீப் பெரு வினை சூழ்ந்தன போலவும்;  
துறவால், அறனால், பெறல் இல் மாந்தர்  
விள்ளா அறிவும் உள்ளமும் என்னவும்;
30
செக்கர்த் தீயொடு புக்க நல் மாலை!  
என் உயிர் வளைந்த தோற்றம் போல,  
நாற் படை வேந்தன் பாசறை-  
யோர்க்கும் உளையோ" மனத் திறன் ஓதுகவே.
உரை
   
       39. ஆடு இடத்து உய்த்தல்  
   
முன்னி ஆடுக; முன்னி ஆடுக--  
குமுதமும், வள்ளையும், நீலமும், குமிழும்,  
தாமரை ஒன்றில் தடைந்து வளர் செய்த  
முளரி நிறை செம்மகள்! முன்னி ஆடுக:  
நிற் பெறு தவத்தினை முற்றிய யானும்,
5
(பல குறி பெற்று இவ் உலகு, உயிர், அளித்த  
பஞ்சின் மெல் அடிப் பாவை கூறு ஆகி,  
கருங்குருவிக்குக் கண்ணருள் கொடுத்த  
வெண் திரு நீற்றுச் செக்கர் மேனியன்--  
கிடையில் தாபதர் தொடை மறை முழக்கும்,
10
பொங்கர்க் கிடந்த சூற் கார்க் குளிறலும்,  
வல்லியில் பரியும் பகடு விடு குரலும்,  
யாணர்க் கொடிஞ்சி நெடுந் தேர் இசைப்பும்,  
ஒன்றி அழுங்க, நின்ற நிலை பெருகி,  
மாதிரக் களிற்றினைச் செவிடு படுக்கும்
15
புண்ணியக் கூடல் உள் நிறை பெருமான்--  
திருவடி சுமந்த அருளினர் போல)  
கருந் தேன் உடைத்துச் செம்மணி சிதறி,  
பாகற் கோட்டில் படர்கறி வணக்கி,  
கல்லென்று இழிந்து, கொல்லையில் பரக்கும்
20
கறங்கு இசை அருவிஅம் சாரல்  
புறம்பு தோன்றி, நின்கண் ஆகுவனே.
உரை
   
      40. விரதியரைவினாவல்  
   
நிலவு பகல் கான்ற புண்ணிய அருட்பொடி  
இரு வினை துரந்த திருவுடல் மூழ்கி,  
நடு உடல் வரிந்த கொடிக்காய்ப் பத்தர்,  
சுத்தி அமர் நீறுடன், தோள்வலன் பூண்டு,  
முடங்கு வீழ் அன்ன வேணி முடி கட்டி,
5
இரு மூன்று குற்றம் அடியறக் காய்ந்து, இவ்  
ஆறு எதிர்ப்பட்ட அருந் தவத் திருவினிர்!  
"தணியாக் கொடுஞ் சுரம் தரும் தழல் தாவிப்  
பொன்-உடல் தேவர் ஒக்கலொடு மயங்கி,  
கொண்மூப் பல் திரைப் புனலுடன் தாழ்த்தி,
10
பொதுளிய தருவினுள் புகுந்து, இமையாது,  
மருந்து பகுத்து உண்டு, வல் உயிர் தாங்கும்  
வட்டை வந்தனை!" என, வழங்கு மொழி நிற்க:  
"தாய் கால் தாழ்ந்தனள்; ஆயம் வினவினள்;  
பாங்கியைப் புல்லினள்; அயலும் சொற்றனள்;
15
மக்கட் பறவை பரிந்து உளம் மாழ்கினள்;  
பாடலப் புதுத் தார்க் காளையின் ஒன்றால்  
தள்ளா விதியின் செல்குநள்" என்று--  
தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் துளி முலை,  
பைங் கண் புல்வாய், பால் உணக் கண்ட
20
அருள் நிறை பெருமான், இருள் நிறை மிடற்றோன்,  
மங்குல் நிரை பூத்த மணி உடுக் கணம் எனப்  
புன்னைஅம் பொதும்பர்ப் பூ நிறை கூடல், நும்  
பொன் அடி வருந்தியும் கூடி--  
அன்னையர்க்கு உதவல் வேண்டும் இக் குறியே.
25
உரை