தொடக்கம் |
61-70
|
|
|
61. கற்புப் பயப்பு உரைத்தல்
|
|
|
|
எழு
கடல் வளைந்த பெருங்கடல் நாப்பண் |
|
பத்துடை
நூறு பொற்பு அமர் பரப்பும் |
|
ஆயிரத்து
இரட்டிக் கீழ் மேல் நிலையும் |
|
யோசனை
உடுத்த, மாசு அறு காட்சிப் |
|
பளிக்குப்
பொருப்பில், திடர் கொள் மூதூர்க் |
5
|
களவுடை
வாழ்க்கை உள மனக் கொடியோன் |
|
படர்
மலை ஏழும், குருகு அமர் பொருப்பும், |
|
மா
எனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும், |
|
கடுங்
கனல் பூழிபடும்படி நோக்கிய |
|
தாரை
எட்டு உறையும் கூர் இலை நெடு வேல் |
10
|
காற்படைக்
கொடியினன் கருணையோடு அமர்ந்த |
|
புண்ணியக்
குன்றம் புடை பொலி கூடல் |
|
பிறைச்
சடை முடியினன், பேர் அருள் அடியவர்க்கு |
|
ஒருகால்
தவறா உடைமைத்து என்ன, |
|
பிரியாக்
கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த |
15
|
நெடுங்
கயல் எறி விழிக் குறுந் தொடித் திருவினள் |
|
தெய்வம்
என்று ஒரு கால் தெளியவும் உளத்து இலள்-- |
|
பல
உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும் |
|
இரு
குல வேந்தர் மறு புலப் பெரும் பகை |
|
நீர்
வடுப் பொருவ நிறுத்திடப் படரினும், |
20
|
ஏழ்
உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த |
|
தன்
பழங் கூடம் தனிநிலை அன்றி, |
|
உடு
நிலை வானப் பெரு முகடு உயரச் |
|
செய்யும்
ஓர் கூடம் புணர்த்தின், |
|
நெய்ம்மிதி
உண்ணாது, அவன் கடக் களிறே. |
25
|
|
|
உரை
|
|
|
|
|
62.
மருவுதல் உரைத்தல்
|
|
|
|
பெண்
எனப் பெயரிய பெரு மகள் குலனுள், |
|
உணா
நிலன் உண்டு பராய அப் பெருந் தவம் |
|
கண்ணுற
உருப்பெறும் காட்சி-அது என்னக் |
|
கரு
உயிர்த்து எடுத்த குடி முதல் அன்னை! |
|
நின்னையும்
கடந்தது அன்னவள் அருங் கற்பு; |
5
|
அரி
கடல் மூழ்கிப் பெறும் அருள் பெற்ற |
|
நிலமகள்
கடந்தது, நலனவள் பொறையே; |
|
இரு
வினை நாடி உயிர்தொறும் அமைத்த |
|
ஊழையும்
கடந்தது, வாய்மையின் மதனே; |
|
கற்பகம்
போலும் அற்புதம் பழுத்த |
10
|
நின்
இலம் கடந்தது, அன்னவள் இல்லம்; |
|
பேரா
வாய்மை நின் ஊரனைக் கடந்தது, |
|
மற்று-அவள்
ஊரன் கொற்ற வெண்குடையே; |
|
ஏழ்
உளைப் புரவியோடு எழுகதிர் நோக்கிய |
|
சிற்றிலை
நெரிஞ்சில் பொற்பூ என்ன, |
15
|
நின்
முகக் கிளையினர் தம்மையும் கடந்தனர், |
|
மற்று-அவட்
பார்த்த மதிக் கிளையினரே; |
|
உடல்
நிழல் மான உனது அருள் நிற்கும் |
|
என்னையும்
கடந்தனள், பொன்னவட்கு இனியோள்; |
|
(கொலை
மதில் மூன்றும் இகல் அறக் கடந்து, |
20
|
பெரு-நிலவு
எறித்த புகர் முகத் துளைக் கை |
|
பொழி
மதக் கறையடி அழிதரக் கடந்து, |
|
களவில்
தொழில் செய் அரிமகன் உடலம் |
|
திருநுதல்
நோக்கத்து எரிபெறக் கடந்து, |
|
மாறுகொண்டு
அறையும் மதிநூற்கடல் கிளர் |
25
|
சமயக்
கணக்கர்தம் திறம் கடந்து, |
|
புலனொடு
தியங்கும் பொய்உளம் கடந்த-- |
|
மலருடன்
நிறைந்து வான்வழி கடந்த |
|
பொழில்
நிறை கூடல் புது மதிச் சடையோன் |
|
மன்
நிலை கடவா மனத்தவர் போல) |
30
|
ஒன்னலர்
இடும் திறைச் செலினும், |
|
தன்
நிலை கடவாது, அவன் பரித் தேரே. |
|
|
|
உரை
|
|
|
|
|
63.
பள்ளியிடத்து ஊடல்
|
|
|
|
நீரர
மகளிர் நெருக்குபு புகுந்து |
|
கண்
முகம் காட்டிய காட்சித்து என்ன, |
|
பெருங்
குலை மணந்த நிறைநீர்ச் சிறைப் புனல் |
|
மணி
நிறப் படாம் முதுகு இடையறப் பூத்து, |
|
சுரும்பொடு
கிடந்த சொரி இதழ்த் தாமரை |
5
|
கண்ணினும்
கொள்ளாது உண்ணவும் பெறாது, |
|
நிழல்
தலைமணந்து புனல் கிடவாது, |
|
விண்
உடைத்து உண்ணும் வினைச் சூர் கவர்ந்த |
|
வானவர்
மங்கையர் மயக்கம் போல, |
|
பிணர்க்
கரு மருப்பின் பிதிர்பட உழக்கி, |
10
|
வெண்
கார்க் கழனிக் குருகு எழப் புகுந்து, |
|
கடுக்கைச்
சிறு காய் அமைத்த வாற் கருப்பை |
|
இணை
எயிறு என்ன இடைஇடை முள் பயில் |
|
குறும்
புதல் முண்டகம் கரும்பு எனத் துய்த்து, |
|
செங்
கட் பகடு தங்கு வயல் ஊரர்க்கு, |
15
|
(அரு
மறை விதியும், உலகியல் வழக்கும், |
|
கருத்து
உறை பொருளும், விதிப்பட நினைந்து, |
|
வடசொல்
மயக்கமும் வருவன புணர்த்தி, |
|
ஐந்
திணை வழுவாது அகப்பொருள் அமுதினை, |
|
குறுமுனி
தேறவும், பெறுமுதல் புலவர்கள் |
20
|
ஏழ்-எழு
பெயரும் கோது அறப் பருகவும், |
|
புலனெறி
வழக்கில் புணர் உலகவர்க்கும், |
|
முன்
தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும், |
|
நின்று
அறிந்து உணர, தமிழ்ப் பெயர் நிறுத்தி, |
|
எடுத்துப்
பரப்பிய இமையவர் நாயகன் |
25
|
மெய்த்
தவக் கூடல்) விளைபொருள் மங்கையர் |
|
முகத்தினும்,
கண்ணினும், முண்டக முலையினும், |
|
சொல்லினும்,
துவக்கும் புல்லம் போல |
|
எம்
இடத்து இலதால்; என்னை, |
|
தம்
உளம் தவறிப் போந்தது இவ் இடனே? |
30
|
|
|
உரை
|
|
|
|
|
64. வழிப்படுத்து உரைத்தல்
|
|
|
|
செங்கோல்-திருவுடன்
தெளிந்து அறம் பெருக்கிய |
|
மறு
புல வேந்தன் உறு படை எதிர்ந்த |
|
கொடுங்கோல்-கொற்றவன்
நெடும் படை அனைத்தும் |
|
சேர
இறந்த திருத்தகு நாளில், |
|
அவன்
பழி நாட்டு நடுங்கு நற் குடிகள் |
5
|
கண்ணொடு
கண்ணில் கழறிய போல, |
|
ஒருவரின்
ஒருவர் உள்ளத்து அடக்கித் |
|
தோன்றா
நகையுடன், துண்டமும் சுட்டி, |
|
அம்பல்
தூற்றும் இவ் ஊர் அடக்கி, |
|
கடல்
கிடந்தன்ன நிரைநிரை ஆய- |
10
|
வெள்ளமும்,
மற்றவர் கள்ளமும் கடந்து, |
|
தாயவர்
மயங்கும் தனித் துயர் நிறுத்தி, |
|
பறவை
மக்களைப் பரியுநர்க் கொடுத்து, |
|
கிடைப்பல்
யானே நும்மை: (தழைத்து எழு |
|
தாளியும்
கொன்றையும் தழைத்தலின் முல்லையும், |
15
|
பாந்தளும்
தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும், |
|
முடைத்தலை,
எரி, பொடி, உடைமையின் பாலையும், |
|
ஆமையும்
சலமும் மேவலின் மருதமும், |
|
கடுவும்
சங்கும் ஒளிர்தலின் நெய்தலும், |
|
ஆகத்
தனது பேர் அருள் மேனியில்,) |
20
|
திணை
ஐந்து அமைத்த இணைஇலி நாயகன் |
|
(வரும்
தொழில் அனைத்தும் வளர் பெரும் பகலே, |
|
எரி
விரிந்தன்ன இதழ்ப் பல் தாமரை |
|
அருள்
முகத் திருவொடு மலர்முகம் குவிய, |
|
மரகதப்
பாசடை இடை இடை நாப்பண் |
25
|
நீலமும்
மணியும் நிரை கிடந்தென்ன |
|
வண்டொடு
குமுதம் மலர்ந்து இதழ் விரிப்ப, |
|
குருகும்
சேவலும் பார்ப்புடன் வெருவிப் |
|
பாசடைக்
குடம்பையூடு கண்படுப்ப, |
|
துணையுடன்
சகோரம் களியுடன் பெயர்ந்து |
30
|
விடும்
அமுது அருந்த விண்ணகத்து அணக்க, |
|
சுரிவளைச்
சாத்து நிறைமதி தவழும்) |
|
எறிதிரைப்
பழனக் கூடல் |
|
செறிக
இன்று அம்ம, திருவொடும் பொலிந்தே! |
|
|
|
உரை
|
|
|
|
|
65.
கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
|
|
|
|
இரு
நிலம் தாங்கிய வலி கெழு நோன்மைப் |
|
பொன்முடிச்
சயிலக் கணவற் புணர்ந்து, |
|
திரு
எனும் குழவியும், அமுது எனும் பிள்ளையும், |
|
மதி
எனும் மகவும், அமர் உலகு அறியக் |
|
கண்ணொடு
முத்தம் கலுழ்ந்து, உடல் கலங்கி, |
5
|
வாய்விட்டு
அலறி, வயிறு நொந்து ஈன்ற |
|
மனன்
எழு வருத்தம்-அது உடையைஆதலின்; |
|
பெரு
மயல் எய்தா நிறையினள் ஆக |
|
என்
ஒரு மயிலும் நின் மகளாக் கொண்டு, |
|
(தோன்றி
நின்று அழியாத் துகள் அறு பெருந் தவம் |
10
|
நிதி
எனக் கட்டிய குறுமுனிக்கு, அருளுடன் |
|
தரளமும்,
சந்தும், எரி கெழு மணியும், |
|
முடங்குளை
அகழ்ந்த கொடுங் கரிக் கோடும், |
|
அகிலும்,
கனகமும், அருவி கொண்டு இறங்கிப் |
|
பொருநை
அம் கன்னிக்கு அணி அணி பூட்டும் |
15
|
செம்பு
உடல் பொதிந்த தெய்வப் பொதியமும், |
|
உவட்டாது
அணையாது உணர்வு எனும் பசி எடுத்து |
|
உள்ளமும்
செவியும் உருகி நின்று உண்ணும் |
|
பெருந்
தமிழ்-அமுதும் பிரியாது கொடுத்த) |
|
தோடு
அணி கடுக்கைக் கூடல் எம்பெருமான், |
20
|
எவ்
உயிர் இருந்தும் அவ் உயிர் அதற்குத் |
|
தோன்றாது
அடங்கிய தொன்மைத்து என்ன, |
|
ஆர்த்து
எழு பெருங் குரல் அமைந்து நின்று ஒடுங்கி, நின் |
|
பெருந்
தீக் குணனும் ஒழிந்து, உளம் குளிருறும் |
|
இப்
பெரு நன்றி இன்று எற்கு உதவுதி- |
25
|
எனின்
பதம் பணிகுவல் அன்றே--நன்கு அமர் |
|
பவள
வாயும், கிளர்பச்சுடம்பும், |
|
நெடுங்கயல்
விழியும், நிலைமலை முலையும், |
|
மாசு
அறப் படைத்து, மணி உடல் நிறைத்த, |
|
பெரு
முகில் வயிறு அளவு ஊட்டித் |
30
|
திரு
உலகு அளிக்கும், கடல்-மடமகளே! |
|
|
|
உரை
|
|
|
|
|
66.
பிரிவு உணர்த்தல்
|
|
|
|
நிலையுடைப்
பெருந் திரு நேர்படுகாலைக் |
|
காலால்
தடுத்துக் கனன்று எதிர் கறுத்தும், |
|
நனி
நிறை செல்வ நாடும் நன் பொருளும் |
|
எதிர்
பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும், |
|
தாமரை
நிதியமும் வால் வளைத் தனமும் |
5
|
இல்லம்
புகுதர இருங் கரவு அடைத்தும், |
|
அரி
அயன் அமரர் மலை வடம் பூட்டிப் |
|
பெருங்
கடல் வயிறு கிடங்கு எழக் கடைந்த |
|
அமுதம்
உட்கையில் உதவுழி ஊற்றியும், |
|
மெய்
உலகு இரண்டினுள் செய்குநர் உளரேல், |
10
|
எழு
கதிர் விரிக்கும் மணி கெழு திருந்திழை! |
|
நின்
பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுக-- |
|
(முழுதுற
நிறைந்த பொருள் மனம் நிறுத்தி, முன் |
|
வேடம்
துறவா விதியுடைச் சாக்கியன், |
|
அருட்கரை
காணா, அன்பு எனும் பெருங் கடல் |
15
|
பல
நாள் பெருகி, ஒரு நாள் உடைந்து, |
|
கரை
நிலை இன்றிக் கையகன்றிடலும், |
|
எடுத்துடைக்
கல் மலர் தொடுத்து, அவை சாத்திய, |
|
பேர்
ஒளி இணையாக் கூடல் மா மணி-- |
|
குல
மலைக் கன்னி என்று, அருள் குடியிருக்கும் |
20
|
விதி
நெறி தவறா ஒரு பங்கு உடைமையும், |
|
பறவை
செல்லாது நெடு முகடு உருவிய |
|
சேகரத்து
உறங்கும் திருநதித் துறையும், |
|
நெடும்
பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் |
|
அருங்
கரை இறந்த ஆகமக்கடலும், |
25
|
இளங்
கோவினர்கள் இரண்டு அறி பெயரும், |
|
அன்னமும்
பன்றியும் ஒல்லையின் எடுத்துப் |
|
பறந்தும்
அகழ்ந்தும், படி இது என்னாது |
|
அறிவு
அகன்று உயர்ந்த கழல் மணி முடியும் |
|
உடைமையன்--பொற்கழல்
பேணி |
30
|
அடையலர்
போல) மருள் மனம் திரிந்தே! |
|
|
|
உரை
|
|
|
|
|
67.
ஊடல் நீட வாடி உரைத்தல்
|
|
|
|
நிரை
வளை ஈட்டமும், தரளக் குப்பையும், |
|
அன்னக்
குழுவும், குருகு அணி இனமும், |
|
கருங்
கோட்டுப் புன்னை அரும்பு உதிர் கிடையும், |
|
முட
வெண் தாழை ஊழ்த்த முள் மலரும், |
|
அலவன்
கவைக் கால் அன்ன வெள் அலகும், |
5
|
வாலுகப்
பரப்பின் வலை வலிது ஒற்றினர்க்கு, |
|
'ஈது'
என அறியாது ஒன்றி, வெள் இடையாம் |
|
மாதுடைக்
கழிக் கரைச் சேரி ஓர் பாங்கர், |
|
புள்ளொடு
பிணங்கும் புள் கவராது |
|
வெள்
இற உணங்கல் சேவல் ஆக, |
10
|
உலகு
உயிர் கவரும் கொலை நிலைக் கூற்றம் |
|
மகள்
எனத் தரித்த நிலை அறிகுவனேல்; |
|
(விண்
குறித்து எழுந்து, மேலவர்ப் புடைத்து, |
|
நான்முகன்-தாங்கும்
தேனுடைத் தாமரை |
|
இதழும்
கொட்டையும் சிதறக் குதர்ந்து, |
15
|
வானவர்க்கு
இறைவன் கடவு கார் பிடித்துப் |
|
பஞ்சு
எழப் பிழிந்து தண் புனல் பருகி, |
|
ஐந்து
எனப் பெயரிய நெடு மரம் ஒடித்து, |
|
கண்
உளத்து அளவா எள்ளுணவு உண்டு, |
|
பொரி
எனத் தாரகைக் கணன் உடல் கொத்தி, |
20
|
அடும்
திறல் அனைய கொடுந் தொழில் பெருக்கிய |
|
மாயா
வரத்த பெருங் குருகு அடித்து, |
|
வெண்
சிறை முடித்த செஞ் சடைப் பெருமான்) |
|
கூடற்கு
இறையோன், குறி, உரு, கடந்த |
|
இரு
பதம் உளத்தவர் போல, |
25
|
மருவுதல்
ஒருவும் மதியா குவனே. |
|
|
|
உரை
|
|
|
|
|
68.
பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
|
|
|
|
சிலை
நுதல் கணை விழித் தெரிவையர் உளம் என |
|
ஆழ்ந்து,
அகன்று, இருண்ட சிறை நீர்க் கயத்துள், |
|
எரி
விரிந்தன்ன பல் தளத் தாமரை! |
|
நெடு
மயல் போர்த்த உடல் ஒருவேற்கு, |
|
குரு
மணி கொழிக்கும் புனல் மலைக் கோட்டுழி |
5
|
நின்
பதி மறைந்த நெட்டிரவகத்துள், |
|
குருகும்
புள்ளும் அருகு அணி சூழ, |
|
தேனொடும்
வண்டொடும் திருவொடும் கெழுமி, |
|
பெருந்
துயில் இன்பம் பொருந்துபு நடுநாள், |
|
காணும்
நின் கனவுள், நம் கவர் மனத்தவரைக் |
10
|
கொய்
உளைக் கடு மான் கொளுவிய தேரொடு, |
|
'பூ
உதிர் கானற்புறம் கண்டனன்' என, |
|
சிறிது
ஒரு வாய்மை உதவினை அன்றேல்-- |
|
(சேகரம்
கிழித்த நிறைமதி உடலம் |
|
கலை,
கலை சிந்திய காட்சியது என்ன, |
15
|
கடுமான்
கீழ்ந்த கடமலைப் பல் மருப்பு |
|
எடுத்துஎடுத்து
உந்தி, மணிக் குலம் சிதறி, |
|
கிளைஞர்கள்
நச்சாப் பொருளினர் போல, |
|
சாதகம்
வெறுப்ப, சரிந்து அகழ்ந்து ஆர்த்து, |
|
திரள்
பளிங்கு உடைத்துச் சிதறுவதென்ன, |
20
|
வழி
எதிர் கிடந்த உலமுடன் தாக்கி, |
|
வேங்கையும்
பொன்னும் ஓர் உழித் திரட்டி |
|
வரையர
மகளிர்க்கு அணி அணி கொடுத்து, |
|
பனைக்கைக்
கடமா எருத்துறு பூழி |
|
வண்டு
எழுந்து ஆர்ப்ப, மணி எடுத்து அலம்பி, |
25
|
மயில்
சிறை ஆற்ற, வலிமுகம் பனிப்ப, |
|
எதிர்
சுனைக் குவளை மலர்ப் புறம் பறித்து |
|
வரையுடன்
நிறைய மாலை இட்டாங்கு, |
|
நெடு
முடி அருவி அகிலொடு கொழிக்கும் |
|
கயிலை
வீற்றிருந்த கண்ணுதல் விண்ணவன், |
30
|
நாடகக்
கடவுள்) கூடல் நாயகன் |
|
தாமரை
உடைத்த காமர் சேவடி |
|
நிறை
உளம் தரித்தவர் போல, |
|
குறை
உளம் நீங்கி இன்பாகுவனே. |
|
|
|
உரை
|
|
|
|
|
69.
பதி பரிசு உரைத்தல்
|
|
|
|
எரி
தெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை; |
|
முகில்
தலை சுமந்து ஞிமிறு எழுந்து இசைக்கும் |
|
பொங்கருள்
படுத்த மலர் கால் பொருந்துக! |
|
கடுங்
கடத்து, எறிந்த கொடும் புலிக்கு ஒடுங்கினை; |
|
வரி
உடற் செங் கண் வராலினம் எதிர்ப்ப, |
5
|
உழவக்
கணத்தர் உடைவது நோக்குக! |
|
கொலைஞர்
பொலிந்த கொடித் தேர்க்கு அணங்கினை; |
|
வேதியர்
நிதி மிக விதிமகம் முற்றி, |
|
அவபிர
தத்துறை ஆடுதல் கெழுமி, |
|
பொன்
உருள் வையம் போவது காண்க! |
10
|
ஆறு
அலை எயினர் அமர்க் கலிக்கு அழுங்கினை; |
|
பணைத்து
எழு சாலி நெருக்குபு புகுந்து, |
|
கழுநீர்
களைநர்தம் கம்பலை காண்க! |
|
தழல்
தலைப்படுத்த பரல் முரம்பு அடுத்தனை; |
|
சுரி
முகக் குழு வளை நிலவு எழச் சொரிந்த |
15
|
குளிர்
வெண் தரளக் குவால் இவை காண்க! |
|
அலகை
நெட்டிரதம் புனல் எனக் காட்டினை; |
|
வன்மீன்
நெடுங் கயல் பொதி வினையகத்துக் |
|
கிடங்கு
எனப் பெயரிய கருங் கடல் காண்க! |
|
முனகர்கள்
பூசல் துடி ஒலி ஏற்றனை; |
20
|
குடுமிஅம்
சென்னியர் கரு முகில் விளர்ப்பக் |
|
கிடை
முறை எடுக்கும் மறை ஒலி கேண்மதி! |
|
அமரர்கள்,
முனிக் கணத்தவர், முன் தவறு |
|
புரிந்து,
உடன் உமை கண் புதைப்ப, மற்று, உமையும் |
|
ஆடகச்
சயிலச் சேகரம் தொடர்ந்த |
25
|
ஒற்றைஅம்
பசுங் கழை ஒல்கிய போல, |
|
உலகு
உயிர்க்கு உயிர் எனும் திருஉரு அணைந்து, |
|
வளைக்
கரம்கொடு கண் புதைப்ப, அவ்வுழியே |
|
உலகு
இருள் துரக்கும் செஞ்சுடர், வெண்சுடர், |
|
பிரமன்
உட்பட்ட நில உயிர் அனைத்தும் |
30
|
தமக்கு
எனக் காட்டும் ஒளிக் கண் கெடலும், |
|
மற்று-அவர்
மயக்கம் கண்டு, அவர் கண் பெறத் |
|
திரு
நுதல் கிழித்த தனி விழி நாயகன் |
|
தாங்கிய
கூடல்-பெரு நகர் |
|
ஈங்கு
இது காண்க!--முத்து எழில் நகைக் கொடியே! |
35
|
|
|
உரை
|
|
|
|
|
70.
தேறாது புலம்பல்
|
|
|
|
புட்பெயர்க்
குன்றமும், எழு வகைப் பொருப்பும், |
|
மேல்
கடல் கவிழ் முகப் பொரி உடல் மாவும், |
|
நெடுங்
கடல் பரப்பும், அடும் தொழில் அரக்கரும், |
|
என்
உளத்து இருளும், இடைபுகுந்து உடைத்த |
|
மந்திரத்
திரு வேல் மறம் கெழு மயிலோன், |
5
|
குஞ்சரக்
கொடியொடும் வள்ளிஅம் கொழுந்தொடும் |
|
கூறாக்
கற்பம் குறித்து நிலை செய்த, |
|
புண்ணியம்
குமிழ்த்த குன்றுடைக் கூடல் |
|
நிறைந்து
உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான் |
|
பேர்
அருள் விளைத்த மாதவர் போல, |
10
|
முன்
ஒரு நாளில், உடல் உயிர் நீ என |
|
உள்ளம்
கரிவைத்து, உரை செய்த ஊரர் |
|
தம்
மொழி திரிந்து தவறு நின்றுளவேல், |
|
அவர்
குறை அன்றால்; ஒருவன் படைத்த |
|
காலக்
குறிகொல்? அன்றியும், முன்னைத் |
15
|
தியங்கு
உடல் ஈட்டிய தரும் கடு வினையால், |
|
காலக்
குறியை, மனம் தடுமாறிப் |
|
பின்
முன் குறித்த நம் பெரு மதி அழகால், |
|
நனவிடை
நவிற்றிக் கனவிடைக் கண்ட |
|
உள்
எழு கலக்கத்துடன் மயங்கினமால்; |
20
|
குறித்த
இவ் இடைநிலை ஒன்றே-- |
|
மறிக்
குலத்து உழையின் வழி நோக்கினளே! |
|
|
|
உரை
|
|
|
|