தொடக்கம் |
71-80
|
|
|
71.
மாலைப் பொழுதொடு புலம்பல்
|
|
|
|
ஆயிரம்
பணாடவி அரவு வாய் அணைத்துக் |
|
கரு
முகில் நிறத்த கண்ணனின் சிறந்து, |
|
நிறை
உடல் அடங்கத் திரு விழி நிறைத்துத் |
|
தேவர்
நின்று இசைக்கும் தேவனின் பெருகி, |
|
குரு
வளர் மரகதப் பறைத் தழை பரப்பி |
5
|
மணி
திரை உகைக்கும் கடலினின் கவினி, |
|
முள்
எயிற்று அரவம் முறித்து உயிர் பருகிப் |
|
புள்
எழு வானத்து அசனியின் பொலிந்து, |
|
பூதம்
ஐந்து உடையும் காலக் கடையினும் |
|
உடல்
தழை நிலைத்த மறம் மிகு மயிலோன்; |
10
|
புரந்தரன்
புதல்வி, எயினர்தம் பாவை, |
|
இரு
பால் இலங்க, உலகு பெற நிறைந்த |
|
அருவிஅம்
குன்றத்து அணி அணி கூடற்கு |
|
இறையவன்,
பிறையவன், கறை கெழு மிடற்றோன், |
|
மலர்க்
கழல் வழுத்தும் நம் காதலர், பாசறை |
15
|
முனைப்பது
நோக்கி, என் முனை அவிழ் அற்றத்து-- |
|
பெரும்
பகலிடையே, பொதும்பரில் பிரிந்த |
|
வளை
கட் கூர் உகிர்க் கூக்குரல் மோத்தையை |
|
கருங்
கட் கொடியினம் கண் அறச் சூழ்ந்து, |
|
புகை
உடல் புடைத்த விடன் வினைபோல-- |
20
|
மனம்
கடந்து ஏறா மதில் வளைத்து, எங்கும் |
|
கரு
நெருப்பு எடுத்த மறன் மருள் மாலை! |
|
நின்
வரற்கு ஏவர் நல்கினர்? நின் வரல் |
|
கண்டு
உடல் இடைந்தோர்க் காட்டுதும்; காண்மதி: |
|
மண்
உடல் பசந்து கறுத்தது; விண்ணமும் |
25
|
ஆற்றாது
அழன்று, காற்றின் முகம் மயங்கி, |
|
உடு
எனக் கொப்புள் உடல் நிறை பொடித்தன; |
|
ஈங்கு
இவற்று அடங்கிய இரு திணை உயிர்களும் |
|
தம்முடன்
மயங்கின; ஒடுங்கின; உறங்கின; |
|
அடங்கின;
அவிந்தன; அயர்ந்தன; கிடந்தன; |
30
|
எனப்
பெறின்--மாலை! என் உயிர் உளைப்பதும், |
|
அவர்
திறம் நிற்பதும், ஒருபுடை கிடக்க; |
|
உள்ளது
மொழிமோ, நீயே: விண்ணுழை |
|
வந்தனை
என்னில், வரும் குறி கண்டிலன்; |
|
மண்ணிடை
எனினே, அவ் வழியான; |
35
|
கூடி
நின்றனை எனின், குறி தவறாவால்; |
|
தேம்
படர்ந்தனை எனின், திசை குறிக்குநரால்; |
|
ஆதலின்,
நின் வரவு எனக்கே |
|
ஓதல்
வேண்டும் புலன் பெறக் குறித்தே. |
|
|
|
உரை
|
|
|
|
|
72.
வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
|
|
|
|
திருமலர்
இருந்த முதியவன் போல |
|
நான்முகம்
கொண்டு, அறி நன்னர் நெஞ்சு இருந்து, |
|
வேற்றருள்
பிறவி தோற்றுவித்து எடுத்து; |
|
நிலம்
இரண்டு அளந்த நெடுமுகில் மான, |
|
அரக்கர்தம்
கூட்டம் தொலைத்து, நெய் உண்டு; |
5
|
களிற்று
உரி புனைந்த கண்ணுதல் கடுப்ப |
|
அழல்
எடுத்து ஒன்னலர்புரம் எரி உட்டி; |
|
இனைய,
எவ் உலகும் தொழுது எழு திரு வேல், |
|
சரவணத்து
உதித்த அறுமுகப் புதல்வன்-- |
|
பரங்குன்று
உடுத்த பயம் கெழு கூடல் |
10
|
பெரு
நகர் நிறைந்த சிறு பிறைச் சென்னியன்; |
|
மால்
அயன் தேடி, மறை அறைந்து, அறியாத் |
|
தன்
உரு ஒன்றில் அருள் உரு இருத்திய |
|
ஆதி
நாயகன்; அகல் மலர்க் கழல் இணை |
|
நண்ணலர்
கிளைபோல் தன் மனம் திரிந்து, நம் |
15
|
துறைவன்
தணக்க, அறிகிலம் யாமே-- |
|
பிணர்
முடத் தாழை விரிமலர் குருகு என, |
|
நெடுங்
கழிக் குறுங் கயல், நெய்தலுள் மறைந்தும்; |
|
புன்னைஅம்
பொதும்பர்க் குழைமுகம் குழைமுகம் |
|
கருந்
திரை சுமந்து எறி வெண் தரளத்தினை |
20
|
அரும்பு
என, சுரும்பினம், அலர நின்று இசைத்தும்; |
|
கலம்
சுமந்து இறக்கும் கரி இனம் பொருப்பு என, |
|
பருகிய
முகிற்குலம், படிந்து கண்படுத்தும்; |
|
பவள
நன் கவைக் கொடி வடவையின் கொழுந்து என, |
|
சுரிவளை
குளிக்குநர் கலனிடைச் செறிந்தும்; |
25
|
வெள்
இற உண்ண விழைந்து புகு குருகினம், |
|
கருங்
கழி நெய்தலைக் காவல் செய் கண் என, |
|
அரவு
எயிற்று அணி முட் கைதையுள் அடங்கியும்; |
|
விண்
தொட எழுந்து விழுதிரைக் குழுவினைக் |
|
கடல்
வயிற்று அடங்கிய மலையினம் வரவு என, |
30
|
குழி
மணற் கேணியுள் கொம்பினர் படிந்தும்; |
|
முயங்கிய
உள்ளம் போகி, |
|
மயங்கிய
துறையினம் ஒருங்குழி வளர்ந்தே. |
|
|
|
உரை
|
|
|
|
|
73.
அயல் அறிவு உரைத்து அவள் அழுக்கம் எய்தல்
|
|
|
|
ஆடகச்
சயிலத்து ஓர் உடல் பற்றி, |
|
கலி
திரைப் பரவையும், கனன்று எழு வடவையும், |
|
அடியினும்,
முடியினும், அணைந்தன போல, |
|
பசுந்
தழைத் தோகையும், செஞ் சிறைச் சேவலும், |
|
தாங்கியும்,
மலர்க்கரம் தங்கியும், நிலைத்த |
5
|
பேர்
ஒளி மேனியன்; பார் உயிர்க்கு ஓர் உயிர்; |
|
மாவுடைக்
கூற்றம்; மலர் மயன் தண்டம்; |
|
குறுமுனி
பெறும் மறை; நெடு மறை பெறா முதல்; |
|
குஞ்சரத்
தோகையும் குறமகட் பேதையும் |
|
இருந்தன
இரு புறத்து எந்தை; என் அமுதம்-- |
10
|
பிறந்தருள்
குன்றம் ஒருங்குறப் பெற்ற |
|
மாதவக்
கூடல் மதிச் சடைக் காரணன் |
|
இரு
பதம் தேறா இருள் உளம் ஆம் என, |
|
இவள்
உளம் கொட்ப, அயல் உளம் களிப்ப-- |
|
அரும்
பொருட் செல்வி எனும் திருமகட்கு, |
15
|
மானிட
மகளிர்தாமும், நின்று எதிர்ந்து, |
|
புல்
இதழ்த் தாமரை இல் அளித்தெனவும்; |
|
உலகு,
விண், பனிக்கும் ஒரு சயமகட்கு, |
|
தேவர்தம்
மகளிரும் செருமுகம் நேர்ந்து, |
|
வீரம்
அங்கு ஈந்து பின் விளிவது மானவும்; |
20
|
இருள்
உடல் அரக்கியர் கலைமகட் கண்டு, |
|
தென்
தமிழ், வட கலை, சில கொடுத்தெனவும்; |
|
நீரர
மகளிர் பாந்தள்அம் கன்னியர்க்கு, |
|
ஆர்
எரி மணித்திரள் அருளியது எனவும்; |
|
செம்
மலர்க் குழல் இவள் போய் அறிவுறுத்தக் |
25
|
கற்றதும்;
கல்லாது உற்ற ஊரனை |
|
அவள்
தர--இவள் பெறும் அரந்தைஅம் பேறினுக்கு |
|
ஒன்றிய
உவமம் இன்று: இவண் உளவால், |
|
மற்று-அவள்
தர, நெடுங் கற்பே |
|
உற்று
இவள் பெற்றாள் என்பதும் தகுமே. |
30
|
|
|
உரை
|
|
|
|
|
74. பிரிந்தமை கூறல்
|
|
|
|
மலரவன்
பனிக்கும் கவினும், குலமீன் |
|
அருகிய
கற்பும், கருதி, உள் நடுங்கித் |
|
திருமகள்
மலர் புகும் ஒரு தனி மடந்தை, இன்று, |
|
இரு
கடல் ஓர் உழி மருவியது என்னச் |
|
செருப்
படை வேந்தர் முனைமேல் படர்ந்த நம் |
5
|
காதலர்,
முனைப் படை கனன்று உடற்று எரியால், |
|
(முடம்
படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த |
|
நெடுங்
சால் போகிக் கடுங் கயல் துரக்கும் |
|
மங்கையர்
குழை பெறு வள்ளையில் தடை கொண்டு, |
|
அவர்
கருங் கண் எனக் குவளை பூத்த |
10
|
இருள்
அகச் சோலையுள் இரவு எனத் தங்கிய |
|
மற்று
அதன் சேக்கையுள் வதிபெறும் செங் கால் |
|
வெள்
உடல் ஓதிமம் தன்னுடைப் பெடை எனப் |
|
பறை
வரத் தழீஇப் பெற்று, உவை இனக் கம்பலைக்கு |
|
ஆற்றாது
அகன்று, தேக்கு வழி கண்ட |
15
|
கால்
வழி இறந்து, பாசடை பூத்த |
|
கொள்ளம்
புகுந்து, வள் உறை வானத்து |
|
எழில்
மதி காட்டி, நிறைவளை சூல் உளைந்து, |
|
இடங்கரும்
ஆமையும் எழு வெயில் கொளுவும் |
|
மலை
முதுகு அன்ன குலை முகடு ஏறி, |
20
|
முழுமதி,
உடுக்கணம், காதலின் விழுங்கி |
|
உமிழ்வன
போல, சுரிமுகச் சூல் வளை |
|
தரளம்
சொரியும் பழனக் கூடல்) |
|
குவளை
நின்று அலர்ந்த மறை எழு குரலோன், |
|
இமையவர்
வேண்ட, ஒரு நகை முகிழ்ப்ப, |
25
|
ஓர்
உழிக் கூடாது உம்பரில் புகுந்து |
|
வான்
உடைத்து உண்ணும் மறக் கொலை அரக்கர் முப் |
|
பெரு
மதில் பெற்றன அன்றோ-- |
|
மருவலர்
அடைத்த, முன், மறம் கெழு மதிலே? |
|
|
|
உரை
|
|
|
|
|
75.
கலக்கம் கண்டு உரைத்தல்
|
|
|
|
'பெருந்
துயர் அகற்றி, அறம் குடி நாட்டி, |
|
உளச்
சுருள் விரிக்கும் நலத் தகு கல்வி ஒன்று |
|
உளது'
என, குரிசில் ஒரு மொழி சாற்ற-- |
|
(பேழ்வாய்க்
கொய்உளை அரி சுமந்து எடுத்த |
|
பல்
மணி ஆசனத்து இருந்து, செவ் வானின் |
5
|
நெடுஞ்
சடைக் குறுஞ் சுடர், நீக்கி, ஐந்து அடுக்கிய |
|
ஆறு-ஐஞ்ஞூறொடு
வேறு நிரை அடுத்த |
|
பல்
மணி மிளிர் முடி பலர் தொழக் கவித்து, |
|
பல்
தலைப் பாந்தட் சுமை திருத் தோளில் |
|
தரித்து,
உலகு அளிக்கும் திருத்தகு நாளில், |
10
|
நெடு
நாள் திருவயிற்று அருளுடன் இருந்த |
|
நெடுஞ்
சடை உக்கிரற் பயந்தருள் நிமலன், |
|
மற்று-மவன்தன்னால்,
வடவையின் கொழுந்து சுட்டு |
|
ஆற்றாது,
உடலமும், இமைக்குறும் முத்தமும், |
|
விளர்த்து
நின்று அணங்கி, வளைக்குலம் முழங்கும் |
15
|
கருங்
கடல் பொரிய, ஒருங்கு வேல் விடுத்து, |
|
அவற்க
அருள் கொடுத்த முதற் பெருநாயகன்) |
|
வெம்மையும்
தண்மையும் வினை உடற்கு ஆற்றும் |
|
இரு
சுடர், ஒரு சுடர், புணர்விழி ஆக்கி, முன் |
|
விதியவன்
தாரா உடலொடு நிலைத்த |
20
|
முத்
தமிழ்க் கூடல் முதல்வன் பொற்றாள் |
|
கனவிலும்
காணாக் கண்ணினர் துயரும், |
|
பகுத்து
உண்டு ஈகுநர் நிலைத் திரு முன்னர், |
|
'இல்'
எனும் தீச் சொல் இறுத்தனர் தோமும், |
|
அனைத்து
உயிர் ஒம்பும் அறத்தினர் பாங்கர், |
25
|
'கோறல்'
என்று அயலினர் குறித்தன குற்றமும், |
|
நன்று
அறி கல்வியர் நாட்டுறு மொழி புக்கு |
|
அவ்
அரண் இழந்தோர்க்கு அரு விடம் ஆயதும்-- |
|
ஒரு
கணம் கூடி, ஒருங்கே |
|
இரு
செவி புக்கது ஒத்தன, இவட்கே. |
30
|
|
|
உரை
|
|
|
|
|
76.
முன்பனிக்கு நொந்து உரைத்தல்
|
|
|
|
கடல்மகள்,
உள் வைத்து வடவை, மெய் காயவும், |
|
மலைமகள்
தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும், |
|
மாசு
அறு திருமகள் மலர் புகுந்து, ஆயிரம் |
|
புற
இதழ்ப் புதவு அடைத்து, அதன் வெதுப்பு உறைக்கவும், |
|
சமயமகள்
சீற்றத் தழல் மனம் வைத்துத் |
5
|
திணி
புகும் வென்றிச் செரு அழல் கூடவும், |
|
ஐயர்
பயிற்றிய விதி அழல் ஓம்பவும், |
|
அவ்
அனற்கு அமரர் அனைத்தும் வந்து அணையவும், |
|
(முன்
இடைக்காடன் பின் எழ நடந்து, |
|
நோன்புறு
விரதியர் நுகர உள் இருந்து, என் |
10
|
நெஞ்சகம்
நின்று, நினைவினுள் மறைந்து, |
|
புரை
அறும் அன்பினர் விழி பெறத் தோற்றி, |
|
வானவர்
நெடு முடி மணித் தொகை திரட்டிப் |
|
பதுக்கை
செய் அம்பலத் திருப் பெரும் பதியினும், |
|
பிறவாப்
பேர் ஊர்ப் பழ நகரிடத்தும், |
15
|
மகிழ்
நடம் பேய் பெறும் வடவனக் காட்டினும், |
|
அரு
மறை முடியினும், அடியவர் உளத்தினும், |
|
குனித்து
அருள் நாயகன்) குல மறை பயந்தோன் |
|
இருந்
தமிழ்க் கூடல், பெருந் தவர் காண, |
|
வெள்ளி
அம்பலத்துள் துள்ளிய ஞான்று, |
20
|
நெருப்பொடு
சுழலவும், விருப்பு எடுத்து அவ் அழல் |
|
கையினில்
கொள்ளவும், கரி உரி மூடவும், |
|
ஆக்கிய
பனிப்பகைக் கூற்று இவை நிற்க-- |
|
அங்கு,
அவர் துயர் பெற ஈன்ற என் ஒருத்தி |
|
புகல்
விழும் அன்பு தற்கு இன்றி |
25
|
மகவினைப்
பெறலாம் வரம் வேண்டினளே. |
|
|
|
உரை
|
|
|
|
|
77.
மறவாமைருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என் |
|
|
மரு வளர்
குவளை மலர்ந்து, முத்து அரும்பி, |
|
பசுந்
தோள்-தோன்றி மலர் நனி மறித்து, |
|
நெட்டெறி
ஊதை நெருப்பொடு கிடந்து, |
|
மணி புறம்
கான்ற புரிவளை விம்மி, |
|
விதிப்பவன்
விதியா ஓவம் நின்றென, என், |
5
|
உள்ளமும்
கண்ணும் நிலையுறத் தழீஇனள்-- |
|
(உவணக்
கொடியினன் உந்தி மலர்த் தோன்றிப் |
|
பார்
முதல் படைத்தவன் நடுத் தலை அறுத்து, |
|
புனிதக்
கலன் என உலகு தொழக் கொண்டு-- |
|
வட்டம்,
முக்கோணம், சதுரம், கார்முகம், |
10
|
நவத்தலை,
தாமரை, வளைவாய்ப் பருந்து, எனக் |
|
கண்டன--மகம்தொறும்
கலிபெறச் சென்று, |
|
நறவு இரந்தருளிய
பெரியவர் பெருமான்; |
|
கூக்குரல்
கொள்ளாக் கொலை தரு நவ்வியும், |
|
விதிர்
ஒளி காற்றக் கனல் குளிர் மழுவும், |
15
|
இரு கரம்
தரித்த ஒரு விழி நுதலோன்) |
|
கூடல்
ஒப்பு உடையாய்! குல உடுத் தடவும் |
|
தட மதில்
வயிற்றுள் படும் அவர் உயிர்க்கணம் |
|
தனித்தனி
ஒளித்துத் தணக்கினும் அரிது எனப் |
|
போக்கு
அற வளைந்து புணர் இருள் நாளும், |
20
|
காவல்
காட்டிய வழியும், |
|
தேவர்க்
காட்டும் நம் பாசறையினுமே. |
|
|
|
உரை
|
|
|
|
|
78.
ஊடி உரைத்தல்
|
|
|
|
மதியம்
உடல் குறைத்த வெள்ளாங்குருகினம், |
|
பைங்
கால் தடவிச் செங் கயல் துரந்து உண்டு, |
|
கழுக்கடை
அன்ன தம் கூர்வாய்ப் பழிப் புலவு, |
|
எழில்
மதி விரித்த வெண் தளை இதழ்த் தாமரை |
|
மலர்மலர்
துவட்டும் வயல் அணி ஊர! |
5
|
கோளகைக்
குடிலில் குனிந்து இடைந்து, அப்புறத்து, |
|
இடைநிலை
அற்ற படர் பெரு வெளியகத்து |
|
உடல்
முடக்கு எடுத்த, தொழிற் பெரு வாழ்க்கைக் |
|
கவைத்தலைப்
பிறை எயிற்று இருள் எழில் அரக்கன்-- |
|
அமுதம்
உண்டு இமையா அவரும், மங்கையரும், |
10
|
குறவரும்
குறவத் துணையரும் ஆகி, |
|
நிலம்
பெற்று இமைத்து, நெடு வரை இறும்பிடை, |
|
பறவை
உண்டு ஈட்டிய இறால் நறவு அருந்தி, |
|
அந்
நிலத்தவர் என அடிக்கடி வணங்கும்-- |
|
வெள்ளிஅம்
குன்றகம் உள்ளுறப் புகுந்து, 'ஒரு |
15
|
தேவனும்
அதன் முடி மேவவும் உளன் ஆம்' |
|
எனப்
புயம் கொட்டி நகைத்து, எடுத்து ஆர்க்க, |
|
பிலம்
திறந்தன்ன பெரு வாய் ஒருபதும், |
|
மலை
நிரைத்து ஒழுங்கிய கரம் இருபத்தும், |
|
விண்
உடைத்து அரற்றவும், திசை உட்கி முரியவும், |
20
|
தாமரை
அகவயின் சேயிதழ் வாட்டிய |
|
திருவடிப்
பெரு விரல்-தலை நக நுதியால், |
|
சிறிது,
மலை உறைத்த மதி முடி அந்தணன், |
|
பொன்
அணி மாடம் பொலி நகர்க்) கூடல் |
|
ஆவண
வீதி அனையவர் அறிவுறில், |
25
|
ஊருணி
அன்ன நின் மார்பகம் தோய்ந்த என் |
|
இணை
முலை நன்னர் இழந்தன-அது போல், |
|
மற்று-அவர்
கவை மனம் மாழ்கி, |
|
செற்றம்
நிற் புகைவர்; இக் கால் தீண்டலையே. |
|
|
|
உரை
|
|
|
|
|
79.
தோழி பொறை உவந்து உரைத்தல்
|
|
|
|
உலர்
கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும், |
|
வீசு
கோட்டு ஆந்தையும் சேவலொடு அலமர, |
|
திரை
விழிப் பருந்தினம் வளை உகிர்ப் படையால் |
|
பார்ப்பு
இரை கவரப் பயன் உறும் உலகில், |
|
கடன்
உறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத் |
5
|
தழல்
உணக் கொடுத்த அதன் உணவிடையே, |
|
கைவிளக்கு
எடுத்துக் கரை இனம் கரைய, |
|
பிணம்
விரித்து உண்ணும் குணங்கினம் கொட்ப, |
|
சூற்
பேய் ஏற்ப, இடாகினி கரப்ப, |
|
கண்டு
உளம் தளிர்க்கும் கருணைஅம் செல்வி, |
10
|
பிறைநுதல்
நாட்டி, கடு வளர் கண்டி, |
|
இறால்
நறவு அருவி எழு பரங்குன்றத்து |
|
உறை
சூர்ப் பகையினற் பெறு திருவயிற்றினள் |
|
ஒரு
பால் பொலிந்த உயர்நகர்க் கூடல் |
|
கடுக்கைஅம்
சடையினன் கழல் உளத்து இலர் போல், |
15
|
பொய்
வரும் ஊரன் புகல் அரும் இல் புக, |
|
என்
உளம் சிகைவிட்டு எழும் அனல் புக்க, |
|
மதுப்
பொழி முளரியின் மாழ்கின என்றால், |
|
தோளில்
துவண்டும், தொங்கலுள் மறைந்தும், |
|
கை
வரல் ஏற்றும், கனவினுள் தடைந்தும், |
20
|
திரைக்
கடல் தெய்வமுன் தெளி சூள் வாங்கியும். |
|
பொருட்
கான் தடைந்தும், பாசறைப் பொருந்தியும், |
|
போக்கு
அருங் கடுஞ் சுரம் போக முன் இறந்தும், |
|
காவலில்
கவன்றும், கல்வியில் கருதியும், |
|
வேந்து
விடைக்கு அணங்கியும், விளைபொருட்கு உருகியும், |
25
|
நின்ற
இவட்கு இனி என் ஆம்-- |
|
கன்றிய
உடலுள் படும் நனி உயிரே? |
|
|
|
உரை
|
|
|
|
|
80.
கலவி கருதிப் புலத்தல்
|
|
|
|
நிலை
நீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி, |
|
வான்
தவழ் உடற் கறை மதி எனச் சுருங்கி, |
|
புல்லர்
வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும் |
|
சீறுணவு
இன்பத் திருந்தா வாழக்கை, |
|
கான்றிடு
சொன்றியின் கண்டு, அருவருத்து, |
5
|
புலன்
அறத் துடைத்த நலன் உறு கேள்வியர், |
|
ஆரா
இன்பப் பேர் அமுது அருந்தி, |
|
துறவு
எனும் திருவுடன் உறவு செய் வாழ்க்கையர், |
|
வாயினும்,
கண்ணினும், மனத்தினும், அகலாப் |
|
பேர்
ஒளி நாயகன்; கார் ஒளி மிடற்றோன்; |
10
|
மண்
திரு வேட்டுப் பஞ்சவற் பொருத |
|
கிள்ளியும்,
கிளையும், கிளர் படை நான்கும், |
|
திண்மையும்,
செருக்கும், தேற்றமும், பொன்றிட, |
|
எரிவாய்
உரகர் இருள் நாட்டு உருவக் |
|
கொலைக்
கொண்டாழி குறியுடன் படைத்து, |
15
|
மறியப்
புதைத்த மறம் கெழு பெருமான்; |
|
நீர்
மாக் கொன்ற சேயோன் குன்றமும், |
|
கல்வியும்,
திருவும், காலமும், கொடியும், |
|
மாடமும்,
ஓங்கிய மணி நகர்க் கூடல் |
|
ஆலவாயினில்
அருளுடன் நிறைந்த |
20
|
பவளச்
சடையோன்--பதம் தலை சுமந்த |
|
நல்
இயல் ஊர! நின் புல்லம் உள் மங்கையர் |
|
ஓவிய
இல்லம் எம் உறையுள் ஆக, |
|
கேளாச்
சிறு சொல் கிளக்கம் கலதியர் |
|
இவ்வுழி
ஆயத்தினர்களும் ஆக, |
25
|
மௌவல்
இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய் |
|
முன்றிலும்
எம்முடை முன்றில் ஆக, |
|
மலர்ச்
சுமைச் சேக்கை மது மலர் மறுத்த இத் |
|
திருமனம்
கொள்ளாச் சேக்கை-அது ஆக, |
|
நின்
உளம் கண்டு, நிகழ் உணவு உன்னி, |
30
|
நாணா
நவப் பொய் பேணி உள் புணர்த்தி, |
|
யாழொடு
முகமன் பாணனும் நீயும், |
|
திருப்
பெறும் அயலவர் காண |
|
வரப்
பெறு மாதவம் பெரிது உடையேமே. |
|
|
|
உரை
|
|
|
|