பக்கம் எண் :

15


     சதுரனீ யென்றுரைத்தார் விருத்தனா யிருக்கின்றாய்
             சசியே-பாம்பின்
     தன்வாய்ப் படுந்துயரஞ் சற்று நினைக்கிலையே
             சசியே
     அதன்ம மெவர்க்காகு மதுநின்னிடத்துளதால்
             சசியே-தெய்வம்
     அந்தரத்தில் விட்டதுன்னை யிந்தவா றலைந்திடென்று
             சசியே
     மருவவென்னை மயக்கியுன் வசஞ்செயப் பார்க்கிறாயோ
             இந்துவே-தேவர்
     மந்திரியின் மனையாளால் வந்த குறை போதாதோ
             இந்துவே
     உருவிற் கறுப்பையிந்த வுலகமா னென்றல்பொய்
             இந்துவே-உனக்
     குள்ளக் கறுப்பல்லவோ மெள்ளமே லுதித்ததிங்கு
             இந்துவே
     அரிவையோ டுதித்தும்பெண் ணருமை யறிந்திலையே
             வெண்ணிலாவே-எண்ணின்
     அதுவுமல் லாதுனக் கெதிரல்ல வேநானும்
             வெண்ணிலாவே
     இருநிலம் போற்றுந்தஞ்சை சரபோஜி மன்னருடன்
             வெண்ணிலாவே-நாளை
     இருந்திடுவே னங்கேவா விருந்திடு வேனுனக்கு
             வெண்ணிலாவே
                            ___

ஸ்வரம்.


         கா ம பத, கப, மப, கம கா ரி சா, சப,
                 பாம, மகரிசா
         சகாம, பநி பநீ சரி, சநி நிசா, நித,
                 நிதா பம கரிச
                            ___