பக்கம் எண் :

16 புலவராற்றுப்படை

190 நிலைபயிலுங் கலைபயிலிய
தவமலியு மவர்நடுவட்
கருங்கடலிற் செஞ்ஞாயிறும்
பொரத்தலைமை கொளத்தவிசில்
விரைப்பாண்டித் துரைத்தேவ
195 னாற்றல்சால் சிறப்பி னாங்கவீற் றிருக்குங்
காட்சி கண்டனிர் களித்தனி ரண்மின்
மாட்சியி னவனே மலர்ந்த முகத்தினன்
யாரை நீயிரென வினாவு மோரையிற்
போந்தனென் பெருமநின் னவைக்கள மோர்ந்தெனின்
200 வருகெனத் தழீஇ யிருக்கென வருகிரீ இப்
போற்றினிர் சென்றநுங் கவியரங் கேற்று
நச்சியாங் கிருக்குந ருளப்பட மெச்சி
வாயரும் புலவன் பெருங்கவி ராயன்
பாவலன் வித்துவா னியறெரி நாவல
205 னென்றுயர் பெயர்களு ளொன்றுற நுமக்குக்
களிவர நல்கி யூர்கோ ளொருதலை
மீனிருந் தென்ன வானிற வயிர
மின்செய் தொளிறும் பொன்செய் யாழியும்
பொலந்தகடு குழித்துப் பொற்புற வமைத்த
210 வலந்த பொற்றொடரின் மாண்பிற் றாகிப்
பழுதறச் சமைந்த பொழுதறி கருவியு
நொய்ம்மயி ராய்ந்து துய்யென நெய்த
மின்னிவர்ந் தென்ன பொன்னிழை நுழைத்த
மாசுகெடச் சிறந்த காசு மீரமும்
215 விழுத்தலை யமைத்த கழுத்தள வரையன்
பணயம் பலவு மிணையறத் தரீஇப்
பெருகிய மகிழ்விற் பேணுபு விடுக்கும்
வருகுவிர் மாதோ வளமலி தன்மையிற்
செம்பொன் பழுநிய செழுமரன்
220 வம்பொடும் பொலிந்து வந்ததா லெனவே.

                     இதன் பொருள்

     புலவரிடத்து ஆற்றுப்படுத்தலானே இது புலவராற்றுப்படை
யெனவாயிற்று; முருகாற்றுப்படை என்றாற்போல. எனவே, மதுரைத் தமிழ்ச்
சங்கப் புலவரிடத்துச் சென்று சிறப்புப் பெயரும் பரிசிலும் பெற்றானொரு
புலவன் அவை பெறாதானொரு புலவனுக்குப் பெறுமாறு கூறி, அவனை
அவரிடத்து வழிப்படுத்தியதென்பது இதன் பொருள்.