585 வரும்விதி வந்ததென்றால் படும்விதி படவேணும் மாட்டோம் என்றாலும்வி டாதே-ராமராமா 6. அண்னானும் என்சொல்லைச் சத்துருக்கனும் கேளாமல் அரசாள மனம்மங்கி றானே அண்ணன் அழைத்துப் போன லட்சுமணன்போல் என்னையும் அழைத்துப் போ கூடஎன்கி றானே-ராமராமா 7. பூமிநெருப்பில் விழும் விழவேண்டாம் என்றொரு புத்திமதி சொல்லநில் லாயோ சாமிபின் போனநெஞ்சே வருவானோ வாரானோ சற்றே நீவந்து சொல் லாயோ-ராமராமா 8. பொடித்தவனந்தனிலே எவருடன் சண்டையோ புரோகிதரே சொல்லொ ணாதோ நடுப்படையிற் போனாலும் வடுப்படாமல் திரும்பும் நாயகன் வரத்தடை ஏதோ-ராமராமா 9. பருவங்கள் பதினாலும் தவம்செய்தென்ன கண்டேன் படைத்தேனே இந்த அப வாதம் பெருமாள் சென்றவழியில் புல்லாய் முளைத்தாலும் பெறலாமே ஆண்டவன் பாதம்-ராமராமா 10. அரசனையும் காணேன் அரசுக்கரசாய் நின்ற அண்ணனையும் காணேன்நான்எம் மாத்திரம் பரதன் என்ற பேரை பதர்என்று சொல்லலாம் பாவிநான் அதற்கல்லோ பாத்திரம்-ராமராமா ------ சத்துருக்கன் அரசாட்சிக்கு உடன்படாமை விருத்தம்-112 பரதனிந்த விதம்புலம்பிச் சாமிதெரிசனங்காணாப் பாவிநானே சரதமினித் தீப்பாய் வேன் உலகாள்வாய் சத்துருக்கா தம்பி என்றான் விரவியகா திலதுபோய் நெருப்பாகச் சுடஅவனும் வீழ்ந்துசோர்ந்தான் நரகமன்றோ உனக்குப்பின் நிலமென்றான் எனகென்னநலம் என்றானே |