586 தரு-89 புன்னாகவராளி ராகம் ஆதிதாளம் பல்லவி இதற்கோநான் ஆளானேன் இதற்கோ அண்ணாவே (இத) அநுபல்லவி சதிக்குள் சத்துருக்கனா வாயென்றழைத்திட்டாயே சாமிபரதா என்னைக் கைநழுவ விட்டாயே (இத) சரணங்கள் 1. பூமிஆளச்சொல்லி என் னைத்தானே-விட்டுப் போனால் என்னாகுமோ கோமானே ராமன் முகமும் உன்முகமும் கண்டுநானே இரண்டாட்டில் ஊட்டின குட்டிபோல் ஆனேனே (இதற்) 2. ஒருவன் கானகத்தில் ஏகவும்-அவன் உடனொரு தம்பிதுணை போகவும் ஒருதம்பி யானநீ நெருப்பிலே மூழ்கவும் ஒருதம்பி எனதுயிர்வல்லுயி ராகவும் (இதற்) 3. எனக்கு மாத்திரம் உடல் கெட்டியோ-உன்பின் இருந்துல காளாவிட்டால் நஷ்டியோ உனக்குப்பின் வாராமல் எனக்கொரு வெட்டியோ உன்னுயிரிலும் என்தன் உயிர்கருப் பட்டியோ (இதற்) ------ அக்கினியில் விழும் பரதரைக் கௌசலைஅம்மன் தடுத்துக் கூறுதல் விருத்தம்-113 வாடியிவ்வா றழுததம்பிக் கிரங்கான் நான்போய் மாள்வனெனின் இவண்புவியை ஆள்வன் என்று கூடிய மந்திரிமாரும் ஊர்உள் ளாரும் குலைந் தலறப்பரதன்தீ வளர்க்கச் சொன்னான் |