606 சூழ்ந்து பலமுனிவர் சாந்திமந்திரஞ்சொல்லி சுபந்தரு நவக்கிரக செபம் கொடுக்க பூசுரர் உடைகளை வேசியர்கள் உடுக்க வேசியர் உடைகளை பூசுரர்கள் உடுக்க பூசிய பொடிவகை வேசியர் இறைக்க வேசியர் மிசையதை வேதியர்கள் இறைக்க பொன் போலும் சட்டமிட்ட மாலிகை மின்போலும் சுற்றில்வைத்த பாலிகை பொங்கரம் சுற்றிலும் பளபளென எங்கேயும் சித்திரம் தளதளென புத்தமு தத்தினை நிகர்த்த மொழிச்சியர் அத்திர சத்திகள் ஒத்த விழிச்சியர் பொற்கடகக்கையில் அப்பி அடிக்கடி கற்பகப் புட்பம் இறைத்து சதிப்படி போராட வேகுயில்கள் நேர்பாடவே மயில்கள் போலாடவே தகவும் கோலாடவே மிகவும் பூமிகளும் பாமிகளும் காமிகளு மேமகிழப் பூதாதி தரும்போக வேதாவுடனே லோக மாதாஎனும் வைபோக சீதாசமேதனாக (மகு) 3. அங்கதன் அருகிலுடை வாள்பிடிக்க சுக்ரீவன் கைலாகுதந்து தோள்பிடிக்க அஞ்சி அனுமான்சாமி தாள்பிடிக்க வந்தடைப்பம் சுமந்துமத வேள்பிடிக்க அட்சய விவேகிஎனும் லட்சுமணன் சத்துருக்கன் அருகினில் நின்று கவரிகள் வீச பட்டமுள்ள சுமந்திரன் எச்சரிக்கை என்றுசொல்ல பரதன் குடைபிடித்து நயம் பேச அற்புதக்கு பேரன்வந்து பொற்பணி திருத்தமணி அணிபணி கண்டுசூ ரியன் கூச கற்பனை கடந்தராமன் ஒப்பனை செய்திருமார்பில் களபச் சந்தனங்கள் சந்திரன் பூச அருள்முகக் கமலமும் அதிலிரு கமலமும் இருகர கமலமும் இருபத கமலமும் |