84 என்பிள்ளை ராமன் எட்டியோ நான்தா னென்ன மட்டியோ வெட்டிப் போடுவேன்உன்னை (ராம) ------ கைகேசியைக் கூனி கலைத்தல் விருத்தம்-6 துங்கமாம் அயோத்திஆளச் சொல்லிய ராம னுக்கே தங்கமா முடிகொ டாமல் சடைமுடி கொடுப்பேன் என்று பங்கமாய் கூனி முன்னாள் பகையினா லேகை கேசி மங்கையாள் எதிரே பின்னும் வார்த்தையால் கலைக்கின் றாளே. திபதை-2 அசாவேரி ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. ராமன் முடி சூடுமென்ற பேய்மதி உனக்குவந்தது ஏதம்மா - என்ன - வாதம்மா - அடி சீமாட்டி உன்பிள்ளை பரதன் காமாட்டி ஆனானே என்ன செய்கையே - அம்மா - கைகையே 2. உன்மகன் ஊர்க்கில்லாவேளை தன்மகனை முடிசூட்ட உன்னினாள் - கோசலை - எண்ணினாள் - அந்த மன்னவனும் அவள் சொன்ன வார்த்தை கடவாமலுன்னை வாதித்தான் - ஏதோ - போதித்தான் 3. கண்ணுள்ள போதல்லவோ கண்காட்சி என்பதறியாயோ கன்னியே - என்ன - உன்னியே - ஆர்க்கும் பண்ணிய பயிரில் அல்லவோ புண்ணியம் தெரியுமடி பாவியே - என்தன் - ஆவியே 4. ஓடம்விட்ட ஆறும் அடிச்சுடுமென்று சொல்லும் வார்த்தை உள்ளதோ - பெண்ணே - இல்லதோ - அதுபோல் ஈடழிந்துன் தாய்தந்தைமார் உன்னைவந் தடைந்த போதில் என்செய்வாய் - எவரைக் - கெஞ்சுவாய் |