பக்கம் எண் :

18 செய்தக்காதி நொண்டி நாடகம்

    75, குறுகலர் திறையிட வேநடந்தொரு
            கூட்டத்துடனேசெஞ்சிக் கோட்டையின்மேல்
        கறைபடிவேலர சர்பேரிகை
            கறங்கிடப்பாளைய மிறங்கினரே

    76. தாடாண்மையுடனேவந் துசெஞ்சியிற்
           றலைவரைச் சுற்றுமட்ட குலவரைபோற்
        கூடாரமும்மடித் தேபடங்குகள்
           கோட்டினார் நிசானிகளு *நாட்டினாரே

     77. கடகரித் திரள்களெல் லாநிரை நிரை
           கருங்கிரியென்னச் சுற்றி நெருங்கிடவே
        மிடைதரு செடியற வேகாடுகள்
           வெட்டினார் குதிரையுங் கட்டினாரே

    78. ஒட்டகைத்திரளுட னேசுமையெடுத்
           தொருதிரளாகவந்த வெருதுகளுங்
       கட்டினாரணியணியாத் திசையெட்டிற்
           காவல் வைத்தார்கள்கள்ளச் சேவருக்காய்

    79. வடுகருங் கன்னடருஞ் சோலைதொறு
           மடங்கடொறு மிருந்தாரிடம் பெறவே
       தொடுகடல் வளைந்தது போற்பாளையந்
           தொகுத்தனரரசரும் வகுத்தனரே

    80. நரபதி தளமல்லவே யொட்டிரட்டிO
           நால்கொண்டO கோல்கொண்டO தளமல்லவே
       பெருகிய கடலதுபோல் வந்தோரெல்லாம்
           பேச்சறியாத்துலுக்க ராச்சு * தென்றே