பக்கம் எண் :

42 செய்தக்காதி நொண்டி நாடகம்

    219. போற்றித்துவாவோத வே பரவசமாய்ப்
            புத்திமயங்கி யொரு நித்திரை செய்தேன்
         ஏத்துந்துவாக்கபூலா யெனக்குமுன்
            னிருந்தகாலுங்கையும் வளர்ந்தன வே

     220. சுறுக்குட னெழுந்திருந் தேன்* சுபுகா
            னல்லாவென்றிறையைச் சுக்கூறு* செய்தேன்
         குறிப்புடனதிசயித் தேன் ஈமான்*
            கொண்டபலன் கைம்மேலே கண்டோமென் றே

     221. காயலின்மகரா சன் செய்தக்
           காதியைத்திசை நோக்கிக் கையெடுத் தேன்
        தாயெனவுபசரித்த மாமு நயினார்ப்பிள்ளை
            தன்னையு நினைந்தே தாழ்ச்சிசெய் தேன்.

     222. அறபுக்கரையுமக்க மு மரச
            ரவர்வழி யவர்குல முறைவா ழி
         குறைசிக்கிளையும்* வாழி செய்யிதுக்
           கூட்டமும்வாழி புறுக்கான்வாழி

     223. ஆழிசூழ் புவிவா ழி செருவி
            லரியதுரைச்சேது பதி* வாழி
         கீழக்க ரைவா ழி சிங்கக்
            கேசச் சதக்கத்துல் லாவாழி

     224. தீனவர் குலம்வா ழி செய்தக்காதி
            செல்வமுங் கல்வியும் தினம்வாழி
         ஆனமதி மூன்று மழை பெய்தே
           அனைவோரும் வாழிறப்பில் ஆலமீ னே. *

      
தந்தன தந்தனனா தனனா தானன தானன தானான
       
               செய்தக்காதி நொண்டி நாடகம்

                        முற்றிற்று