பக்கம் எண் :

38அழகர் கிள்ளைவிடு தூது


5 கொண்டுதிரி பச்சைக் குதிராய் உனக்கெதிரோ
பண்டுதிரி வெய்யோன் பரியேழும்-கண்ட
செகமுழுதும் நீஞான தீபமும்நீ யென்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய்-வகைவகையாய்
எவ்வண்ண மாய்ப்பறக்கும் எப்பறவை யாயினும்உன்
ஐவண்ணத் துள்ளே யடங்குமே-மெய்வண்ணம்
பார்க்கும்பொழுதி லுனைப் பார்ப்பதியென் பாரென்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்-நாக்குத்
தடுமாறு வோரையெல்லாந் தள்ளுவரே யுன்னை
விடுவார் ஒருவருண்டோ விள்ளாய்-அடுபோர்
10 மறந்தரு சீவகனார் மங்கையரில் தத்தை
சிறந்ததுநின் பேர்படைத்த சீரே-பிறந்தவர்
ஆரும் பறவைகளுக் கச்சுதன்பே ருஞ்சிவன் றன்
பேரும் பகர்ந்தாற் பிழையன்றோ-நேர்பெறுவி
வேகி யொருகூடு விட்டுமறு கூட்டையும்
யோகி யுனக்குவமை யுண்டோகாண்-நீகீரம்
ஆகையா லாடை யுனக்குண்டே பாடகமும்
நீகொள்வாய் காலாழி நீங்காயே-ஏகாத
கற்புடையாய் நீயென்றாற் காமனையுஞ் சேர்வாயே
அற்புடைய பெண்கொடிநீ ஆகாயோ-பொற்புடையோர்
15 துன்னியசா யுச்யஞ் சுகரூபம் ஆகையால்
அன்னது நின்சொரூபம் அல்லவோ-வன்னி
பரிசித்த வெல்லாம் பரிசுத்தம் என்றோ
உருசித்த உன்னெச்சில் உண்பார்-துரிசற்றோர்
இன்சொல்லைக் கற்பா ரெவர்சொல்லும் நீகற்பாய்
உன்சொல்லைக் கற்கவல்லார் உண்டோகாண்-நின்போலத்
தள்ளரிய யோகங்கள் சாதியா தேபச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோரார்-உள்ளுணர்ந்த
மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசிதீர்ப்பாய்-மேலினத்தோர்