பக்கம் எண் :

தமிழ்விடுதூது21


62.

அரியா சனமுனக்கே யானா லுனக்குச்
சரியாரு முண்டோ தமிழே - விரிவார்
 
63. திகழ்பா வொருநான்குஞ் செய்யுள்வரம் பாகப்
புகழ்பா வினங்கண்மடைப் போக்கா - நிகழவே
 
64. நல்லேரி னாற்செய்யு ணாற்கரணத் தேர்பூட்டிச்
சொல்லே ருழவர் தொகுத்தீண்டி - நல்லநெறி
 
65. நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்
மேலே பலன்பெறச்செய் விக்குநாள் - மேலோரிற்
 
66. பாத்தனதாக் கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லியொட்டக்
கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளுஞ் - சீத்தையரைக்
 
67. குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்
வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் - கட்டி
 
68. வளர்ந்தனைபான் முந்திரிகை வாழைக் கனியாய்க்
கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத் - திளங்கனியாய்த்
 
69. தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள்
 
70. உண்ணப் படுத்தேனே யுன்னோ டுவந்துரைக்கும்
விண்ணப்ப முண்டு விளம்பக்கேள் - மண்ணிற்
 
71. குறமென்று பள்ளென்று கொள்வார் கொடுப்பாய்க்
குறவென்று மூன்றினத்து முண்டோ - திறமெல்லாம்
 
72. வந்தென்றுஞ் சிந்தா மணியா யிருந்தவுனைச்
சிந்தென்று சொல்லியநாச் சிந்துமே - அந்தரமேல்
 
73. முற்றுணர்ந்த தேவர்களு முக்குணமே பெற்றார்நீ
குற்றமிலாப் பத்துக் குணம்பெற்றாய் - மற்றொருவர்
 
74. ஆக்கிய வண்ணங்க ளைந்தின்மே லுண்டோநீ
நோக்கிய வண்ணங்க ணூறுடையாய் - நாக்குலவும்