|
|
பாங்கி தலைவியருமை சாற்றல்: |
பாங்கி தலைவியருமை சாற்றல் என்பது, பாங்கி தலைவியை அரியளாக்கிக் கூறல். |
| புகழார் வரையெம் புரவலன் காதற் புதல்வியைநீர் இகழா வெளியளென் றெண்ணப் பெறீரெமக் கென்றும்வண்மை திகழா பரணன் செழுந்தஞ்சை வாணன் சிலம்பினுள்ளீர் அகழார் கலியுல கிற்புல னான அணங்கவளே.
|
(இ-ள்.) எமக்கெஞ்ஞான்றும் வளமை யொளிரும் ஆபரணம் போன்ற செழுந்தஞ்சை வாணனது சிலம்பிலிருப்பீர், புகழ் நிறைந்த வரைக்கு இறைவனாகிய எம்புரவலர்க்குக் காதற் புதல்வியா யுள்ளாளை யிகழ்ந்து எளிளென்றெண்ணப் பெறுந் தகுதியுடையீரல்லீர், அவள் சகரரால் அகழப்பட்ட கடல்சூழ்ந்த வுலகில் அறிவுருவான தெய்வப்பெண் என்றவாறு. |
வரை - மலை. புரவலன் - அரசன். ஆர்கலி - கடல். |
(86) |
தலைவன் இன்றியமையாமை இயம்பல்: |
தலைவன் இன்றியமையாமை இயம்பல் என்பது, இன்றியமையாமை ஒருசொல், முடிந்த பொரளாய்த் துணிபுபற்றிய சொல்; என்னை, |
| 1`நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு`
|
என்பதுபோலத் தலைவி இன்றியமையாமை கூறல். |
| வனைந்தா லனகொங்கை மாதுரு வாய்த்தஞ்சை வாணன்வெற்பில் புனைந்தா லனைய வுனத்தயல் வாய்வண்டு போதகத்தேன் நினைந்தா லனையவென் னல்வினை தான்வந்து நண்ணிற்றென்று நினைந்தா லணங்கனை யாய்தமி யேனுயிர் நிற்கின்றதே.
|
(இ-ள்.) அணங்குபோல்வாய்! தஞ்சைவாணனது வெற்பிடத்து அலங்கரித்தாற்போலும் புனத்தின் பக்கத்தில் என் நல்வினை தான், கைவல்லார் கையினாற் செய்து வைத்தாற் போலுங் கொங்கையையுடைய மாதுருவாய் வந்து பொருந்திற்றென்று நீ நினைத்தால், போதகத்திலிருக்குந் தேனில் வண்டு நனைந்தா லொத்த அத்தலைவி யின்பத்தின் மூழ்குந் தமியேனுயிர் நிற்கின்றது; நினையாவிடின் நில்லாதென் றறிவாய் என்றவாறு. |
|
1. திருக்குறள், வான்சிறப்பு - 10. |