|
|
ஆர் - ஒப்பு. `நுதல்விழி` என்புழி: உம்மைத்தொகை. விழி : ஆகுபெயர். தெவ்: ஆகுபெயர். ஒல்லாது - பொருந்தாது. உணங்கல் - உலர்தல். `இன்றிந்நாள்`: என இயையும். `நின்குறை யல்ல என்குறை` என்றது குறிப்புமொழி. `கற்கறித்து நன்கட்டாய்` என்பதுபோல், 1`வயக்குறு மண்டிலம்` என்னும் பாலைக்கலி பன்னீரடித்தரவில், `இறத்திராலைய மற்றிவணிலைமை கேட்டீமின்` என்றது போலும் ஒருமை பன்மை மயக்க மெனக் கொள்க. பாங்கி : முன்னிலையெச்சம். |
`இன்றிந்நாளெல்லா மிரந்தது` என்று வரையறுத்துக் கூறியவதனால் `குறையுற வுணர்தல்` முதல், நாலாநாட் செய்தி என்று அறிவித்தற்குக் கூறியவாறென்று உணர்க. |
(89) |
| தேனுஞ் கரும்புஞ் செறிதொங்கல் வாணன்தென் மாறைவெற்பா மானுங் கலையும் வடிக்கணை யாலெய்து மன்னுயிரும் ஊனுங் கவர்கின்ற தன்னையர் போலயி லொத்தகண்ணாள் தானும பிறருள்ள நோயறி யாத தகைமையளே.
|
(இ-ள்.) பெடையும் கரும்பும் செறிந்த மாலையையணியும் வாணனது தென்மாறைநாட்டு வெற்பிலுள்ளவனே! மானும் கலையும் வடித்த கணையால் எய்து, அவ்விலங்கினது உயிரும் ஊனும் கொள்கின்ற தன்னுடன் பிறந்த தன்னையர்போல, வேலொத்த கண்ணினையுடையாள் தானும பிறருள்ளத் தின்கண்ணுள்ள நோயை யறியாத முறைமையள் என்றவாறு.
|
தேன்: சாதிப்பெயர்; பெடைமேல் நின்றது. சுரும்பு - ஆண்வண்டு. வடி - வடித்தல். கவர்தல் - கொள்ளுதல். தன்னையர் - தமையன்மார். அயில் - வேல். தகைமை - முறைமை. ஓரிடத்திற் பிறந்தவராகலான் தன்னையர் குணம் இவட்குமாயினவாறு உணர்க. |
(90) |