|
|
| 1`காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்`
|
என்பது தன்னுட் கூறியது. |
(142) |
பாங்கி புலம்பல்: |
| காலையம் போருக வாள்முகத் தாளன்பர் கையகல மாலையம் போது வருவித்த நீர்தஞ்சை வாணன்தெவ்வர் ஆலையம் போலுங்க ளாதவன் கோயி லழல்கொளுந்த வேலையம் போடுழல் வீர்பரி காளென்றும் வெய்துயிர்த்தே.
|
(இ-ள்.) பரிகாள், காலை அம்போருகம்போலும் ஒளியை யுடைய முகத்தாளைத் தலைவர் கையகல மாலையம் பொழுதை வரச்செய்த நீர் தஞ்சைவாணன் தெவ்வராலயம் போல், உங்கட்கு இறைவனாகிய கதிரவன் கோயில் அழல் பற்றக் கடலில் தண்ணீரோடே யெப்போதும் நெட்டுயிர்த்து வருந்துவீராக என்றவாறு.
|
காலையம்போருகம் - முறுக்கவிழ்தாமரை. `அம்போருக வாள் முகம்`: உவமைத்தொகை. `முகத்தாள்` என்புழி இரண்டனுருபு தொக்கது. கையகல் - ஒருசொல்: அதுபிரிதல்.
|
| 2`செற்றர் ரௌக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றா லுறாஅ தவர்` |
என்பதுபோலும்.
|
ணுதெவ்வர் - பகைவர். ஆதவன் - கதிரவன். கொளுந்தல் - கொளுத்தல். அம்பு - நீர். உழலுதல் - வருந்துதல். வெய் துயிர்த்தல் - நெட்டுயிர்த்தல். |
(143) |
தலைவனீடத் தலைவி வருந்துதல்: |
தலைவன் நீடத் தலைவி வருந்துதல் என்பது. தலைவன் வாராது நாழிகை நீட்டித்துழித் தலைவி வருந்திக் கூறுதல்.
|
| ஆராத வின்ப விடந்தொறு நீங்கிய வாயமென்பால் வாராத முன்னம் வருகில ராற்றஞ்சை வாணன்வெற்பில் கூரா தரநல்கி வல்வினை யேனலங் கொள்ளைகொண்டு தேரா தளனுட னேநென்னல் மாலையிற் சென்றவரே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பில் மிகுந்த காதலைக் கொடுத்து, வல்வினையேன் நலத்தையெல்லாங் கொள்ளை கொண்டு, தேரோடு |
|
1. குறள். பொழுதுகண்டிரங்கல் - 7. |
2. குறள். நெஞ்சொடு கிளத்தல் - 5. |