|
|
அஃதாவது தலைவன் தலைவியை இரவுக்குறியிற் கூடுதல்.
|
| 1`வேண்டல் மறுத்த லுடன்படல் கூட்டம் கூடல்பா ராட்டல் பாங்கிற் கூட்டல் உயங்கல் நீங்கலென் றொன்பது வகைத்தே இயம்பிப் போந்த இரவுக்குறி தானே`
|
என்னுஞ் சூத்திரவிதியான் இரவுக்குறி ஒன்பது வகைப்படும்.
|
இறையோன் இருட்குறி வேண்டல்: |
இறையோன் இருட்குறி வேண்டல் என்பது, தலைவன் இருட்குறியை விரும்பிப் பாங்கியுடன் கூறல்.
|
| கருவிருந் தெண்டிசை யுங்கன மாமழை கான்றதுள்ளம் வெருவிருந் தெம்பதிக் கேகவொண் ணாது விதம்விதமாய் வருவிருந் தென்றும் புரந்தருள் வாணன்தென் மாறையன்னீர் ஒருவிருந் தெங்களைப் போலெய்து மோகங்குல் உங்களுக்கே.
|
(இ-ள்.) வகைவகையாய் வரும் விருந்தை எஞ்ஞான்றும் ஓம்பும் வாணன் தென்மாறை நாடுபோல்வீர், சூல்கொண்டு முகில் எண்டிசையும் பெரிய மழையைப் பெய்தது; ஆதலால், உள்ளத்தினிடையே அச்சமிருத்தலால் எம் பதிக்குச் செல்லுதல் கூடாது. இற்றைக்கு வைகுதல் வேண்டும்; எங்களைப்போல் ஒப்பற்ற விருந்து இந்தக் கங்குலின்கண் உங்களுக்கு நீர் வருந்தித் தேடுகினும் கிடைக்குமோ, சொல்லுவீராக என்றவாறு. |
கரு - சூல். கனம் - முகில். கான்றல் - பெய்தல். வெருவு - அச்சம். ஏக - போக. ஒண்ணாது - கூடாது. விருந்து புரத்தல் - விருந்தோம்பல். அன்னீர்: உயர்சொற்கிளவி. |
(163) |
பாங்கி நெறியின தருமைகூறல்: |
| மலைமாது வல்லவன் வாணன் வரோதயன் மாறைவெற்பில் சிலைமா லுருமெங்குத் தீயுமி ழாநிற்குஞ் சிங்கமெங்கும் கொலைமா கரியிரை தேர்ந்துழ லாநிற்குங் கொற்றவபொற் கலைமா னுறைபதி நீவரு மாறென்கொல் கங்குலிலே.
|
(இ-ள்.) வீரமகட்குக் கணவனாகிய வாணனென்னும் வரோதயன் வெற்பிடத்திற் கொற்றவனே! மேகலை பொருந்திய மான் உறைகின்ற பதிக்கு நீ வருகின்ற வழி வில்லொடுகூடிய மேகத்திடத்து இடிகளெங்குந் தீயைக் |
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 40. |