பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
172

 
     வருவள் என்று தலைவன்  வந்து நிற்க.  தலைவன்  வருங்கால் அணித்தும்
அல்லது சேய்த்தும் அல்லதாய ஒருபுன்னை  மரத்திருந்த அன்னங்கள் தற்செயலா
யெழுந்து ஆரவாரிக்க,  அது  தோழியாலறிந்த  தலைவி,  அவ்வன்னங்களெழுந்த
புன்னைக் கீழ் வந்து நின்று போயினள்.

     தலைவனும் மயிலிருக்கும் புன்னைக் கீழ்  நின்று தலைவியைக் காணானாய்,
இரு  புன்னைக்கும்  நடுவிருந்த  தாழைமரங்களிலே  ஒரு மரத்தில்  தான் வந்து
போயதற்கு  அடையாளமாகத் தான்  அணிந்த மாலையை வைத்துப்  போயினன்.
இருவரும் அல்ல குறிப்பிட்ட காரணம் இஃது என்று உணர்க.

  பேசத் தகுவதொன் றன்றுகண் டாய்பிறி தோர்குறியை
நேசத் தவர்குறி யென்றுசென் றியான்குறி நின்றுவந்தேன்
வாசத் தமிழ்புனை கோளுடை யான்தஞ்சை வாணனொன்னார்
தேசத் தவருமெய் தாவெய்ய நோயெய்திச் சேயிழையே.

     (இ-ள்.) சேயிழையே!    தலைவர்      நிகழ்த்த     நிகழ்ந்ததல்லாதாய்ப்
பிறிதொன்றானிகழ்ந்த  அடையாத்தை   நேசத்தையுடைய  தலைவர்   நிகழ்த்திய
அடையாளமாக எண்ணிப்போய்க் குறியினின்றும்,  மணம்பொருந்திய  தமிழ்மாலை
புனைந்த  தோளுடையானாகிய  தஞ்சைவாணன்  பகைவர்  தேசத்திலுள்ளோரும்
எய்தாத     கொடிய      துன்பத்தை    யெய்தி   வந்தேன்,     அத்துன்பம்
சொல்லத்தகுவதொன்று அன்று என்றவாறு.

     கண்டாய்: முன்னிலையசை - குறி - அடையாளம். நேசத்தவர் -
அன்புடையவர். வாசம் - மணம். ஒன்னார் - பகைவர்.
(191)    
பாங்கி தலைமகன் தீங்கெடுத் தியம்பல்
     பாங்கி  தலைமகன்  தீங்கெடுத்து  இயம்பல்  என்பது,  பாங்கி  தலைவன்
பொல்லாங்கை யெடுத்துக் கூறல்.

  வடியோ வெனுங்கண் மடந்தைநல் லாய்தஞ்சை வாணனைவந்
தடியோ மெனச்சென் றடையலர் போலயர் கின்றநின்கைத்
தொடியோட மென்பணைத் தோளிணை வாடுந் தொழில்புரிந்த
கொடியோர் துணிந்துசெய் தார்குறி யாத குறிநமக்கே.

      (இ-ள்.) வடுவோ கண்ணோ  என்று ஐயந்தருங்  கண்ணையுடைய மடந்தை
நல்லாய்! தஞ்சைவாணனை  வந்து யாம்  அடியோமெனச்  சொல்லி யடையாதவர்
போல அயர்கின்ற நின்  கைத்தொடி யோடிப்போக  மெல்லிய மூங்கில்  போன்ற
தோளிணை வாடுந் தொழிலைக்கொடுத்த  கொடியோர் குறியாத குறியை  நமக்குத்
துணிந்துசெய்தார் என்றவாறு.