|
|
குறி விலக்குவித்தல் என்பது, தலைவி தலைவன் வரும் இரவுக்குறியை விலக்கெனப் பாங்கியொடு கூறல். |
| வெற்றிய வாவிய வாணர் பிரான்தஞ்சை வெற்பகத்திப் பெற்றிய சோலைப் பிறங்கிருள் வாரல்மீன் பேதையின்னும் முற்றிய வேனற் படுகிள்ளை யோட்டு முறைமையளென் றெற்றிய காதலி னாலிசைத் தாளன்னை யென்றுரையே.
|
(இ-ள்.) தலைவி இன்னும் முற்றிய தினையிடத்து வீழுங் கிளியோட்டும் முறைமையளென் றிரங்கிய காதலினால் அன்னை சொன்னாளாதலால், வெற்றியை விரும்பிய வாணர்பிரானது தஞ்சை வெற்பிடத்து இவ்விடையீடு படுவதாகிய சோலையிற் செறிந்த இருட்குறியிடத்து வாராதொழிமினென்று அன்பர்க்கு நீ கூறுவாயாக என்றவாறு.
|
பாங்கி முன்னிலை அதிகாரப்பட்டு வருதலாற் கொள்க. அன்பர்க்கு என்பது அவாய் நிலையான் வந்தது. பிறங்கல் - செறிதல். எற்றல் - இரங்கல். இசைத்தல் - கூறுதல். வாரன்மின் : ஒருமை பன்மை மயக்கம். என்னை, 1`வயக்குறு மண்டிலம்` என்னும் பாலைக்கலியில், `இறத்திரா லையமற் றிவணிலைமை கேட்டீமின்` என்றாற் போலக் கொள்க.
|
| 2`ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே`
|
என்னுஞ் சூத்திர விதியானும் உணர்க. |
(224) |
வெறி விலக்குவித்தல்: |
வெறி விலக்குவித்தல் என்பது, தலைவி, தாய் வெறியாடுதல் கொண்டாள் என்று தலைவர்க்குக் கூறி வரவு விலக்கெனத் தோழியோடு கூறல்.
|
| மின்னா திடித்தென அன்னைகொண் டாள்வெறி விந்தைமங்கை மன்னாண்மை மன்னிய வாணன்தென் மாறை வரையில் வண்டியாழ் என்னா அசுண மிறைகொள்ளு நாட ரெனக்கருளால் முன்னா ளருளிய நோய்தணிப் பானின்று மொய்குழலே.
|
(இ-ள்.) மொய்குழலே! வெற்றி மங்கையால் அரசாண்மை நிலைபெற்ற வாணன் தென்மாறையில் வண்டிசையை யாழிசை யென்றெண்ணி |
1. கலித். பாலை - 24. 2. தொல். சொல். எச்சவியல் - 65. |