|
|
அஃதாவது,கூறிய பாங்கியொடு வரைதற்குடன்பட்ட தலைவன் தன்னூர்க்கு ஒருவழி போய்வருகிறேனென்று போதல்.
|
| 1`செலவறிவுறுத்தல் செலவுடன் படாமை செலவுடன் படுத்தல் செலவுடன் படுதல் சென்றுழிக் கலங்கல் தேற்றியாற் றுவித்தல் வந்துழி நொந்துரை யெனவெழு வகைத்தே ஒன்றக் கூறிய வொருவழித் தணத்தல்` |
என்னுஞ் சூத்திரவிதியால் ஒருவழித்தணத்தல் எழுவகைப்படும்.
|
தன்பதிக் ககற்சி தலைவன் சாற்றல் : |
| திரைகே தகைமணங் கூடுமெம் பாடியிற் சென்றுவந்தியான் வரைகேன் வருந்துணை வல்லியை நீதஞ்சை வாணன்செவ்வேல் புரைகேழ் மதர்விழிக் கோங்கரும் பேர்முலைப் பூசல்வண்டு நிரைகேச வஞ்சியஞ் சேலென்று தேற்றுதல் நின்கடனே. |
(இ-ள்.) தஞ்சைவாணனது செவ்வேலையொக்கும் நிறம் பொருந்திய மதர்த்த விழியையும் கோங்கரும்பு போன்ற அழகிய முலையையும் ஆரவாரிக்கும் வண்டு நிரை யாயிருக்குங் கேசத்தையும் உடைய வஞ்சிபோன்றவளே! திரையானது தாழம்பூ மணத்தைக் கூட்டும் எம் ஊரில் யான் சென்று வந்து வரைவேன்; வருமளவும் நீ வல்லியை அஞ்சலென்று தேற்றுதல் நின் கடன் என்றவாறு.
|
திரை - அலை. கேதகை - தாழை. பாடி - ஊர். கேழ் - நிறம். மதர்விழி - மதர்த்த விழி. பூசல் - ஆரவாரம். கேசம் - அளகம். கடன் - முறைமை. அகற்சி - பிரிவு. |
(248) |
பாங்கி விலக்கல்: |
| பறந்தாங் கிவர்பரித் தேர்கட வேலுன் பதியடைந்தால் மறந்தாங் கமையவும் வல்லையன் பாதஞ்சை வாணனொன்னார் நிறந்தாங் கிவர்கணை போலுண்கள் மாமுகி னீர்மைகொண்டு புறந்தாழ கருங்குழல் வெண்முத்த வாணகைப் பொன்னினையே. |
(இ-ள்.) அன்பனே! நின் ஊர்க்குப் போய்ச் சேர்ந்தையானால், தஞ்சைவாணன் ஒன்னார் மார்பு தாங்க இவருங் கணையையொக்கும் உண்கண்ணையும், முகிலினது தன்மையைக்கொண்டு புறத்திலே தாழப்பட்ட கருங் குழலையும், வெண்முத்தம்போன்ற ஒளிபொருந்திய |
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 50. |