| |
| |
செடியும் மூங்கிலும் நெருங்கும் வெவ்விய காட்டினிலக்கணத்தைக் கேட்டும் யான் துயருழக்கும் இவ் வேட்கை நோயைக் கண்டும் மனத்திடத்துக் கலக்கஞ் செல்லாது இந்த ஊர் என்னைக் கழறுதல் நன்றே என்றவாறு. |
| (266) |
| பாங்கி கழறியவதனை ஊரின்மேல் வைத்துக் கூறியது: |
வாணனுக்கு வன்புலியும் செண்டும் கொடுத்தகல் செம்பியர் போலத் தலைவன் சென்றான் என்று தலைவனுக்கு இகழ்ச்சி தோன்றியதெனின், தலைவன் ஊர்விட்டுக் கானிடைச் சென்றதற்கு உவமை கூறியதல்லது பதிகொடுத்தற்கு உவமை கூறிய தன்றாதலான், இகழ்ச்சி தோன்றதென் றுணர்க. |
மண்டுதல் - நெருங்குதல். புலியும், செண்டும்: ஆகுபெயர். செம்பியர் -சோழர். இண்டு - ஈசை. கழை - மூங்கில். |
| (266) |
| வருகுவர்மீண்டெனப் பாங்கி வலித்தல்: |
வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தல் என்பது, பாங்கி தலைவர் மீண்டுவருவர் எனக் கூறுதல்; வலித்தல் - கூறுதல். |
| | தேர்த்தானை வாணன்தென் மாறைமின் னேயஞ்சல் செம்புருக்கி வார்த்தா லனைய வழிநெடும் பாலை மடப்பெடைநோய் பார்த்தா தவந்தவி பாதவ மின்மையிற் பைஞ்சிறகால் போர்த்தாலு மஞ்ஞைகண் டும்போவ ரோநம் புரவலரே.
|
(இ-ள்.) தேர்ப்படையையுடைய வாணன் தென்மாறை நாட்டிலிருக்கும் மின்னே, அஞ்சலை; செம்பையுருக்கி வார்த்தா லொத்த வெப்பத்தைத் தருகின்ற வழி நெடிதாகிய பாலைநிலத்து மடப்பத்தொடு கூடிய பெடைமயிலினது வெயிலானாகிய துன்பத்தைப் பார்த்து, அவ் வெயிற்றணிக்கின்ற மரங்களில் லாமையால், தனது பசி சிறகினாலே போர்த்து அகவும், மயில் கண்டும், நம் புரவலர் போவரோ, மீண்டுவருவர், என்றவாறு. |
எனவே, தலைவன் ஏஞ்கால் சுரத்து நிகழுந்தன்மை பாங்கி யறிந்தாவாறென்னையெனின், தலைவன் செல்லுங்கால் சுரம் இத்தன்மையவென்று சொல்லியவாற்றால் அறிந்திருந்தாளாகலின், இவ்வாறு கூறினாளென்க.
|
இவ்வாறு சொல்லியதை 1`அரிதாய வறனெய்தி` என்னும் கலித்தொகையானும் உணர்க. |
| தானை - படை. ஆதவம் - வெயில். பாதவம் - மரம். ஓகாரம் : எதிர்மறை. |
| (267) |
|
| 1. `களிற்று` என்பதும் பாடம். |