பக்கம் எண் :

கட
21. உடன்போக்கு
246

 
அஃதாவது,  தலைவன்  தன்  ஊர்க்குத்  தலைவியை  உடன் கொண்டு  போதல்.

  1`போக்கே கற்பொடு புணர்ந்த கௌவை
மீட்சியென் றாங்கு விளம்பிய மூன்றும்
வெளிப்படைக் கிளிவியின் வழிப்படும் தொகையே`

என்னும் சூத்திரத்தால், உடன்போக்கு மூவகைப்படும்.

  1`போக்கறி வுறுத்தல் போக்குடன் படாமை
போக்குடன் படுத்தல் போக்குடன் படுதல்
போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றலென்
றியாப்பமை யுடன் போக் கிருநான்க வகைத்தே`

என்னுஞ் சூத்திரவிதியால், உடன்போக்கு எட்டு வகைப்படும்.

பாங்கி தலைவற்கு உடன்போக்குணர்த்தல்:
    பாங்கி தலைவற்க உடன்போக்கு உணர்த்தல் என்பது, காப்புக்  கைம்மிகலால்
உன் ஊர்க்கு உடன்கொண்டு போதியெனப் பாங்கி தலைவற்கு உரைத்தல்.

  மைந்நீர் நெடுங்கண் மடந்தை யுடன் தஞ்சை வாணன்வெற்பா
செந்நீர் விழவணி நின்னகர்க் கேகொண்டு சேர்ந்தருண்மற்
றிந்நீர்மை யல்லதொ ராறுமின் றாலிங்கெம் மையரென்றால்
முந்நீ ருலகுங்கொள்ளார்விலை யாக முலையினுக்கே.

    (இ-ள்.) தஞ்சைவாணன்   வெற்பா!   இவ்விடத்து   எம்   ஐயர்  கருத்துச்
சொல்லின்  
 முலையினுக்கு   விலையாக   முந்நீர்   சூழ்ந்த   இவ்வுலகத்தையும்
கொள்ளார்கள்; ஆதலால்    குங்கும      நீராடும்      வசந்தத்    
 திருவிழா
அலங்காரத்தையுடைய  நின்  நகர்க்கு  மையெழுதிய  நீர்மையையுடைய  நெடிய
கண்ணையுடைய   மடந்தையை   உடன்  கொண்டு  சேர்ந்தருள்வாய்; இம்முறை
யல்லாது நீ வரைவதற்கு வேறொரு வழியில்லை என்றவாறு.

`வெற்பா இங்கெம்மையர்`  எனவும்,  `முலையினுக்கு  விலையாக  முந்நீ  ருலகுங்
கொள்ளார்`    எனவும்,     `நின்னகர்க்கு  மைந்நீர்  நெடுங்கண்`      எனவும்,
`உடன்கொண்டு`  எனவும்  இயையும்.  மற்று: வினைமாற்று. செந்நீர் - குங்குமநீர்.
ஆறு - வழி.
(305)    

1. அகப்பொருள் விளக்கம், வரைவியல், 10 : 11.