பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
254

 
கண்டோ ரயிர்த்தல்:
    கண்டோர்   அயிர்த்தல்   என்பது,   வடிவின்   மேம்பாட்டாற்  கண்டோர்
ஐயமுற்றுக் கூறுதல்.

 1சையத் திரள்புயன் சந்திர வாணன் தனிபுரக்கும்
வையத் துறைகின்ற மானிட ரோவன்றி வானவரோ
நையப் படுமழல் வெஞ்சுரத் தூடு நடந்தவரென்
றையப் படுவதல் லாலுண்மை சால அறிவரிதே.

    (இ-ள்.) வருகின்றோர்   உளம்  நையப் பாலை அழல்படும் வெய்ய  சுரத்தில்
நடந்த  இவர், மலைபோல்  திரண்ட  புயத்தை  யுடையவனாகிய  
 சந்திரவாணன்
ஒப்பில்லாது   காத்தளிக்கும்   புவியின்கண்   உறைகின்ற  மானிடரோ! அல்லது,
வானுலகின்கணுள்ளவரோ   என்ற   ஐயப்படுவதல்லாமல்  உண்மையை  
மிகவும்
அறியவரிது என்றவாறு.

    சையம் - மலை. திரள்புயம்: வினைத்தொகை. புரத்தல் - காத்தல்.
வையம் - புவி. `அழல்படும்` என இயையும். சால - மிகவும்.

கண்டோர் காதலின விலக்கல்:
    கண்டோர்   காதலின்  விலக்கல் என்பது, கண்டோர் காதலினால்  போக்கை
விலக்கி, எம் பாடியில் தங்கிப்போம் என்று கூறுதல்.

    கண்டோராவார் - பாலைநிலத்து   எயிற்றியர்.  ஆடவர்  கண்டோர் எனில்
வருங்குற்றம்     என்னையெனின்,     `கலந்துடன் வருவோர் புலம்பல் தேற்றல்`
(செய். 347)   என்னுங்   கிளவிச்   செய்யுளில், யான்   தலைவனைக் கண்டேன்,
என்   காதலி  தலைவியைக்  கண்டாள்  என்பதனோடு மாறுபடுமென்று  உணர்க.
(319)    
 மாலுந் திருவு மெனவரு வீர்தஞ்சை வாணன்தெவ்வூர்
போலுஞ் சுரமினிப் போகவெண் ணாது பொருப்படைந்தான்
ஆலும் புரவி யருக்கனிக் கங்குல் அடற்கடமான்
பாலுந் தசையுமுண் டேதங்கு வீரெங்கள் பாடியிலே.

     (இ-ள்.) மாலும்   திருவும்   என்று   சொல்ல  வருவீர்,   தஞ்சைவாணன்
பகைவரிருக்கும்  ஊர்போலும்  பாழாகிய  சுரம்  என்ற இவ்விடம் விட்டு அப்பாற்
போகத்தகாது;  ஆரவாரஞ்  செய்யும் புரவிபூட்டிய தேரில் வரு அருக்கன்  அத்த
வெற்படைந்தான்; இருள் வருங்கால மாகிய இக்கங்குலில் போர் செய்யும்  கடமான
பாலும்  தசையும்  யாங்கள்  தருதும்,  அதனையுண்டு எங்கள் பாடியில்  தங்குவீர்
என்றவாறு.

    தெவ்வூர்   பாழாய்  மக்ளியக்கமின்றி  யிருத்தலின், சுரம்  உவமை யாயிற்று.
`அருக்கன்   பொருப்படைந்தான்`   எனக்  கூட்டுக.   ஆலுதல் - ஆரவாரித்தல்.
அடல் - போர்.
(320)    

1. தொல். பொருள். களவியல் - 22.