|
|
தான் அவள் என்னும் வேற்றுமையின்மையான்,`நம் தனம்` என்று கூறினானென்க. பொன் : ஆகுபெயர். நோய் - துன்பம் `வந்தனங்காண்` என்புழி, காண்:உரையசை. |
(322) |
இவற்றுள், `பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்த`லும், `தலைவிக்கு உடன்போக்கு உணர்த்த`லும், ஆகிய இரண்டும் போக்கறிவுறுத்தல். |
`தலைமகன் மறுத்த`லும், `தலைவி நாணழிவிரங்க`லும் ஆகிய இரண்டும் போக்குடன்படாமை.
|
`பாங்கி தலைவனை யுடன்படுத்த`லும், `தலைவி கற்பின் மேம்பாடு பூண்முலைப் பாங்கி புகற`லும் ஆகிய இரண்டும் போக்குடன் படுதல்.
|
`தலைவன் போக்குடன்படுத`லும், `தலைவி யொருப்பட் டெழுத`லும், `பாங்கி சுரத் தியல்புரைத்துழித் தலைமகள் சொல்ல`லும் ஆகிய மூன்றும் உடன்போக்குடன்படுதல்.
|
`பாங்கி கையடை கொடுத்த`லும், `வைகிருள் விடுத்த`லும் `தலைமகன் தலைமகளைச் சுரத்துய்த்த`லும் ஆகிய மூன்றும் போக்கல்.
|
`தலைவன் தலைவியை அசைவறிந்திருத்த`லும், `கண்டோர் காதலின் விலக்க`லும் ஆகிய இரண்டும் விலக்கல். |
`தலைவன் தலைவியை யுவந்தலர்சூட்டி யுண்மகிழ்ச் துரைத்த`லும், `கண்டோரயிர்த்த`லும் ஆகிய இரண்டும் புகழ்தல்.
|
`கண்டோர் தன்பதியணிமை சாற்ற`லும், `தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக் குணர்த்த`லும் ஆகிய இரண்டும் தேற்றல் எனக் கொள்க.
|
உடன்போக்கு முற்றிற்று. |