|
|
வாணனது தென்மாறை நாட்டிலிருக்கும் என்னுடைய வஞ்சிக்கொம்பு போன்றவள் போர் செய்யும் சுடர்பொருந்திய இலைபோலும் வேலையுடைய ஒரு காளைபின் போயினள்; மீண்டு வரக்கூறி அருள்புரிவீராக என்றவாறு.
|
இருமை - பெருமை. முக்கோல் - திரிதண்டு. ஒழுக்கம் - ஆசாரம். இயைந்து - பொருந்தி. ஆறு - வழி. `மீண்டுவரக்கூறல்` அவாய் நிலையான் வந்தது. ஒன்றுமுதல்எட்டளவும் ஒழுங்காய்த் தொகை காட்டிவருதலால் செய்யுட்கு இஃதோர் அலங்காரந் தோன்றியவாறு காண்க. |
(341) |
மிக்கோ ரேதுக் காட்டல்: |
மிக்கோர்ஏதுக் காட்டல் என்பது, செவிலி வினாயதற்கு மிக்கோர் அஃது உலகியல்பென்று காரணமெடுத்துக்காட்டல். |
| இயங்கா வனமென் மகளொரு காளைபின் னேகினளென் றுயங்கா தொழியஃ துலகியல் பாலுல வும்புயல்தோய் வயங்கா டகமதில் சூழ்தஞ்சை வாணன் மணங்கமழ்தார் புயங்காதல் கொண்டணைந் தாளய னார்தந்த பூமகளே.
|
(இ-ள்.) ஒருவருஞ் சஞ்சரியாத வனத்தில் என் மகள் ஒரு காளைபின் ஏகினாளென்று வருந்தாதொழி; அவ்வாறு ஏகுதல் உலகவியல்பு; யாங்ஙனமெனின், வானத்து உலவும் புயலைத்தீண்டி விளங்கப்பட்ட பொன்மதில் சூழ்ந்த தஞ்சைவாணனது மணங் கமழ் மாலையணிந்த புயத்தைக் காதல்கொண்டு அயனார் படைத்த பூமிதேவியணைந்தாள் என்றவாறு.
|
இயங்கல் - சஞ்சரித்தல். ஏகினள் - போயினள். உயங்கல் - வருந்தல். வயங்கல் - விளங்கல். ஆடகமதில் - பொன்மதில். அயனார் - பிரமனார். பூமகள் - புமிதேவி. |
(342) |
செவிலியெயிற்றியொடு புலம்பல்: |
செவிலி எயிற்றியொடு புலம்பல் என்பது, செவிலி பாலை நிலத்துப் பெண்ணொடு புலம்பிக் கூறல்.
|
| செருமக ளேயும் புயத்தய லான்பின் செலவிடுத்தென் ஒருமக ளேயென் றுனையயிர்த் தேன்புனை ஓவியம்போல் வருமக ளேதஞ்சை வாணனொன் னார்துன்னும் வன்சுரத்தோர் அருமக ளேயுரையாயவள் போன அதரெனக்கே.
|
(இ-ள்.) போர்மகள் பொருந்திய புயத்தையுடைய அயலான் பின்னே போகவிடுத்து உன்னை என் ஒப்பற்ற மகளேயென்று ஐயமுற்றேன் |