|
|
அஃதாவது, மீண்டு வருதல் செவிலி புதல்வியைக் காணாது மீண்டு வருதலும், உடன்போய தலைவனும் தலைவியும் மீண்டு வருதலும் அடங்கப்பொதுப்பட மீட்சி யென்று கூறினார்.
|
| 1`தெளித்தல் மகிழ்ச்சி வினாதல் செப்பலென வெளிப்பட வுரைத்த மீட்சிநால் வகைத்தே` |
என்னுஞ் சூத்திர விதியால், மீட்சிநால்வகைப்படும். |
தலைவி சேணகன்றமை செவிலி, தாய்க் குணர்த்தல்: |
| 2ஏடார் மலர்க்குழல் வல்லியை யன்னையித்தீவினையேன் நாடா இடமில்லை ஞாலத் தகல்வயின் நன்கமலக் காடார் பழனக் கழனிநன் னாடு கடந்துதன்னூர் வாடா வளமனை கொண்டுசென் றானொரு வள்ளலின்றே. |
(இது பிறசெய்யுட் கவி) |
(349) |
தலைவன் தம்மூர்சார்ந்தமை சாற்றல்: |
தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்றல் என்பது, ஐம்பத்து நான்காநாள், தலைவன் மீட்சியில் தலைவியது ஊரைத் தாம் சார்ந்தமை தலைவிக்குச் சாற்றல்.
|
| நினையான் எதிர்ப்பட்ட நீடிருங் குன்றிது நீகுடைந்த சுனையா மதுமலர்ச் சோலைக ளாமுவை தூயவண்டல் மனையா மிவையினி வாணன்தென் மாறையை வாழ்த்தல்ர்போல் இனையா தெழுந்தருள் மானனையாய்நம் எழில்நகர்க்கே.
|
(இ-ள்.) மானனையாய்! நின்னை யான் முன் எதிர்ப்பட்ட நீண்ட பெரிய குன்று இது; நீ குடைந்து விளையாடிய சுனையாம் அது; நி விளையாடிய மலர்ச்சோலைகளாம் உவை; மாசிலாத வண்டலம்பாவை செய்து விளையாடிய சிற்றிலம் இவை; இன்று வாணன் தென்மாறையை வாழ்த்தாதவர்போல வருந்தாது, நமது எழிலையுடைய நகர்க்கு எழுந்தருள என்றவாறு.
|
தான் அவள் என்னும் வேற்றுமை யின்மையான், `நம் எழினகர்` எனக் கூறினன். இனி - இன்று. இளையாது - வருந்தாது. |
(350) |
|
1. அகப்பொருள் விளக்கம், வரைவியல் - 20. |
2. அம்பிகாபதிகோவை - 408. |