|
|
வரைவுமலிவு என்பது, வரைவு தொடங்கி நடக்கும் முயற்சி மிகுதல். |
| 1`வரைவுமுயல் வுணர்த்தல் வரைவெதிர் வுணர்ததல் வரைவறிந்து மகிழ்தல் பராவல்கண் டுவத்தலென் றொருநால் வகைத்தே வரைவு மலிதல்` |
என்னுஞ் சூத்திரவிதியால், வரைவுமலிதல் நால்வகைப்படும். |
காதலன் முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குரைத்தல்: |
| தொலைவிலை யாகிய பல்பொருள் காதலர் சூதமர்நின் முலையிலை யாக முகந்தளித் தார்முனை வேந்தர்தம்மைத் தலைவிலை யாகத் திறைகொண்ட வாணன் தமிழ்த்தஞ்சைநீ உலைவிலை யாகுக பொன்வண்ண மாறுக ஒண்ணுதலே.
|
(இ-ள்.) ஒள்ளிய நுதலை யுடையாய்! காதலர் எடுக்க எடுக்கத் தொலையாத பலவாகிய பொருள்களைச் சூதுபோற் பொருந்தும் நின் முலைவிலையாக அம்பண அளவையான் முகந்தளித்தார்; பகைவேந்தர் தம்மை அவர்த் தலைவியைக் கொள்ளாது விடுதற்கு அவர்கள் கொடுக்கும் பொன்னை விலையாகத் திறை கொண்ட வாணன் தமிழ்த் தஞ்சையி லிருக்கின்ற நீ வருத்தமில்லையாகுக, பசலை நிறத்தையொழிப்பாயாக என்றவாறு.
|
சூது முலை: உவமைத்தொகை. அமர்தல் - பொருந்துதல். முலைவிலை - கோடற்குரியார் கொடுத்தற்குரியார்க்குக் கொடுக்கும் பொருள். முனை - பகை. திறை - கப்பம். உலைவு - வருத்தம். பொன்வண்ணம் - பசலை. அம்பணம் - மரக்கால். |
(281) |
காதலி நற்றாயுள்ள மகிழ்ச்சி யுள்ளல்: |
காதலி நற்றாய் உள்ளமகிழ்ச்சி உள்ளல் என்பது, தலைவன் விடுத்த முலைவிலைப் பொருள்களைக் கண்டு, மகட்கு, மணக் காலம் என்று, நற்றாய் மகிழும் உள்ளத்து மகிழ்ச்சியைத் தலைவி நினைத்தல். |
| கயமா மலரெனுங் கண்ணியை வண்டெனுங் காளைபல்புள் இயமா மணம்புண ரீர்ந்துறை நாட ரெதிர்ந்தவர்மேல் வயமா நடத்திய வாணன்தென் மாறை வருகுவரேல் நயமா மணவணி கண்டியாயு மின்புறு நம்மினுமே. |
|
1. அகப்பொருள் விளக்கம், வரைவியல் - 3. |