பக்கம் எண் :

கட

தஞ்சைவாணன் கோவை

30

1`மாறுகொ ளெச்சமும் வினாவும் ஐயமும்
கூறிய வல்லெழுத்தியற்கை யாகும்`

என்னுஞ்  சூத்திரத்தில் ஐய ஓகாரமும்  கொண்டார். அதற்கு உதாரணம், `பத்தோ பதினொன்றோ`   என  உரையாசிரியர்   காட்டிப்   போந்ததனானுங்   கொள்க. 
பாரணங்கோ என்பதற்குத் தெய்வப்பெண்ணோ என்று கூறினமையால் இறையனார் 
அகப்பொருளில்,

2`உரையுறை தீந்தமிழ் வேந்த னுசிதன் தென் னாட்டொளிசேர்
விரையுறை பூம்பொழின் மேலுறை தெய்வங்கொ லன்றிலின்தோண்
வரையுறை தெய்வங்கொல் வானுறை தெய்வங்கொல் நீர்மணந்த
திரையுறை தெய்வங்கொ லையந் தருமித் திருநுதலே`

என   ஐயத்திற்குக்   காட்டிய பாட்டில்  பொழிலின்  மேலுறை தெய்வம்  எனச்
சூரரமகளைக் கூறியவாறு கண்டு  கொள்க. `பங்கேருகத்தினோரணங்கோ` என்பது மகரவீற்றுப்பதம் அத்துச்சாரியை பெற்று,  இன்  என்னும் ஐந்தாமுருபு ஏழாவதின்
பொருள்பட வந்தது.

3`யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்`

என்னுஞ்     சூத்திரவிதியாற்     கண்டுகொள்க.   அன்றியும்,  ஊரினிருந்தார்,
மனையினிருந்தார் என்பதுபோற் பொள்ளினும் அமையும்.

     பொழிலைச்     சார்ந்து     நிற்றலின்,      `பாரணங்கோ`     என்றும்,
பசும்பொற்றகடுவேய்ந்து  மரகதவிளிம்படுத்த  மாணிக்கச்  சுனையருகு  சண்பகம், பாதிரி   வகுளம்,  அசோக,  சந்தன  முதலாய   தருக்கள்   மலர்ந்த   பூநாறு
கொழுநிழற்கீழ் ஒரு கற்பகத்தைச் சார்ந்து பளிக்குப் பாறைமேல்   கோலக்கலாபம் விரித்து மயிலாட நோக்கி நின்றாளாகலின், இவள் நிற்குமிடத்துச் சிறப்பு நோக்கிப், `பங்கேருகத்தினோரணங்கோ` என்றும், மலையிடத்து நிற்றலால், `வரையரமகளோ`
என்றும், சுனைநீ  ரருகுநிற்றலின், நீரரமகளே` என்றுங் கூறினாரென்க.

பொழிலின்மேலிருந்து பூசைகொள்ளுந் தெய்வம் யாதோ `எனின் சூரரமகள் என்ப.
`பாற்கடல்` என்ன அமையாதோ, `திரு`  என்றது  எற்றுக்கொவெனின்; கடல்களில்
குணமிக்க


1. தொல். எழுத். உயிர் மயங்கியல் - 88.
2. களவியல். 2ஆம் சூ. மேற்கோள்.
3. தொல். சொல். வேற்றுமை மயங்கியல் - சூ. 23.