பக்கம் எண் :

பொய் பாராட்டல்:

40

 
யெனின்,  தலைவன்  நெஞ்சுட்  கூறியதனைத்தலைவி  அறியாளென்று  உணர்க.

தேறாக தெவ்வென்ற வாணன்தென் மாறைச்செந் தேனருவி
ஊறாத காலத்து மூறுதண் சார லொதுக்கிடந்தந்
தாறாத சோகமும் ஆற்றுதல் வேண்டும் அசோகமெய்தி
மாறாத தண்ணளி கூர்மலர் வாள்முக மாதவியே.

     (இ-ள்.)  அசோகமரத்தைப்   பொருந்தி  எஞ்ஞான்றும்  மாறாத தண்ணிய
வண்டு  செறிந்த  மலரை  ஒளிபொருந்திய  முகத்திலேயுடைய  குருக்கத்தியே, நீ
யொரு   காரியஞ்  செய்ய  வேண்டும்;  அஃதென்னை  யெனின், தெளிவில்லாத
பகையை  வென்ற  வாணனது தென்மாறை நாட்டகத்துச் செந்தேன் கலந்த அருவி
யாறு  ஊறாத வேனிற்காலத்தும் ஊறப்பட்ட குளிர்மலையினிடத்து இருக்கின்றனை
நீ  யாதலால்,  எனக்கு  ஒதுங்குமிடம்  கொடுத்து,  இவரது  ஆறாத   சோகமும்
ஆற்றுதல் வேண்டும் என்றவாறு.

      இவரது   சோகத்தை   ஆற்றுந்தன்மை   பெண்தன்மையாகலின், நினக்கு
அப்பெண்தன்மை  சிலேடை  வகையால்  தோன்ற  நின்றனையென்று  கூறினாள்
என்பது.    அஃதென்னையெனில்,   நீ   சோகமின்மையையெய்தினை;   அன்றி, தண்ணளியையுமுடையை;  மலர்போலும்  வாண்முகத்தையுமுடையை;   அன்றியும் மாதவியென்று    ஒரு   பெண்    பெயரினையுமுடையை;   ஆதலான்,   இவர்
சோகத்தையாற்றல்  வேண்டுமென்பதனான்,  நீயொரு  கருமஞ் செய்ய வேண்டும்
என   வருவித்து   உரைக்கப்பட்டது.   மாதவியை   நோக்கி   நீ  செய்கென்று
கூறினமையான்,  தலைவி  மறுத்தமை  தோன்றிற்று. இங்ஙனங்  கூறத்  தலைவன்
நெருங்கி  வருதலால்  நாணிக்  கண்புதைத்தாள்   என்க.  இஃது  இச்செய்யுளில்
இல்லையால்,  கூறியவாறு  என்னை யெனின், மேல் வருங் கவியுள்  கண்புதைக்கு
வருந்தல்  கூறுகின்றாராதலான்,  இச்  செய்யுளிற் கண்புதை கூறவேண்டுவதென்று
உணர்க.

 
      தேறாக - தெளியாத. தெவ் - பகை. அருவி யூறாத காலம்  வேனிற்காலம். உம்மை - சிறப்பு. சாரல் - மலைப்பக்கம்.

      குருக்கத்திமேல்   ஏற்றுங்கால் - அசோகம் - ஒரு மரம்.  அளி - வண்டு,
மலர் வாண்முக மாதவி- மலர்பொருந்திய முகத்தையுடைய குருக்கத்தி.

      பெண்மேல்   ஏற்றுங்கால் - அசோகம் - துன்பமின்மை.
தண்ணளி - அருள்.  மலர் வாண்முகம் - மலர்போலும்  ஒளி பொருந்திய முகம்.
மாதவி - மாதவியென்னும் பெண்.
(11)