|
|
பிரியினும், கணப்போதும் தரியேன் என்று அணங்கின் முன்னே சூளுற்றான் என்றவாறு.
|
வண்மைக்கொடி, வண்கொடியென நின்றது; நன்மை நெறி நன்னெறியென நின்றாற்போல. வண்மை, நன்மையென்பன பண்புப்பத மாகலின், ஈற்றுயிர் மெய்கெடுதல் அப்பதத்திற் கியல்பெனக் கொள்க. வண்மை - கொடை, எய்தல் - பொருந்துதல். `வாணனொன்னார்` என்பது,
|
| 1"அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயின் அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே" |
என்னும் வேற்றுமை மயங்கியற் சூத்திரத்தால், அது என்னும் ஆறனுருபு, `வாணனுக்கு ஒன்னார்` என நான்கனுருபாகப் பொருள் கொள்க.
|
எண் - எண்ணம். இவ்வண்ணம் என்புழி, சுட்டு, முற்கவியில், `விளர்ப்பதென்னே` என்று கூறினமையான், அவ்விளர்ப்பு வண்ணத்தைச் சுட்டிற்று. `இரங்கேல் இரங்கேல்` என்றது அடுக்குமொழி. என்னையெனின்,
|
| 2`கொல்லல் கொல்லல் செய்நலங் கொல்லல் எஞ்ஞான்றும் சொல்லல் சொல்லல் பொய்ம்மொழி சொல்லல் எஞ்ஞான்றும் புல்லல் புல்லல் தீநெறி புல்லல் எஞ்ஞான்றும்`
|
(என்னும் இம்மூவடி வெளிவிருத்தத்துள், அடிதோறும் அச்சப் பொருண்மைக்கண் விரைவுபற்றிய அடுக்குமொழி வந்தவாறு போலக் கொள்க. ஏர் - அழகு. இமிர்தல் - முரலுதல். என்னை, |
| 3"வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத் தேந்து மருப்பி னினவண் டிமிர்பூதும்" |
என்னுங் குறிஞ்சிக் கலியுள், இமிர்தல் வண்டொலிக்கு வந்தவாறு கண்டுகொள்க. |
`நுண்கொடி யேரிடை`: உவமைத்தொகை. `நுண்கொடி யேரிடை வண்டிமிர் பூங்குழ னூபுரத்தாள்` என்புழி உம்மைத்தொகை. `பிரியேன்` என்னுங் கிளவியில், `தரியேன் நிற்பிரியினும்` என்று கூறியவாறு என்னையெனின், இங்ஙனங் கூறாவிடின், `பிரிந்து வருகென்றல்` என்று அடுத்த கிளவி வருதலின், `பிரியேன்` என்று முன்சொல்லி, உடனே, `பிரிந்து
|
|
1. தொல். சொல். வேற்றுமை மயங். - 11. 2. யாப்பருங் - விரு. செய். 15-ஆம் சூ. உரை, மேற்கோள். 3. கலித். குறிஞ்சி - 7. |
|