பக்கம் எண் :

5. பிரிவுழி மகிழ்ச்சி
57 

 
அஃதாவது, தலைவி, பிரிந்து போகுழிப் போகின்ற தன்மையைக் கண்டு  தலைவன்
மகிழ்தல்.

செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லல்:
      செல்லுங் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் என்பது, தலைவன்,
புணர்ச்சிக்களத்தினின்றும் பெயர்ந்து போகாநின்ற தலைமகளது செலவைக்  கண்டு
தன் நெஞ்சத்தோடு சொல்லுதல்.

அகிலேந்து கூந்த லொருகையி லேந்தி யசைந்தொருகை
துகிலேந்தி யேந்துந் துணைச்சிலம் பார்ப்பத் துளிகலந்த
முகிலேந்து பூம்பொழில் சூழ்தஞ்சை வாணன்முந் நீர்த்துறைவாய்
நகிலேந்து பூங்கொடி போற்செல்லு மானெஞ்ச நம்முயிரே.

      (இ-ள்.)  நெஞ்சமே  நம்முயிராய   தொருவடிவு  கொண்டு   அகிற்புகை
யேந்திய  கூந்தலை யொருகையி லேந்திக்கொண்டு,  அசைந்து, தாளிணையேந்துந்
துணைச்சிலம்பு  ஆராவாரிக்கத்   துளி  கலநத் முகிலையேந்திய   பூவொடுகூடிய
பொழில்   சூழ்ந்த தஞ்சைவாணனது கடற்கரையிடத்து, முலைலையேந்து பூங்கொடி
நடந்து சொல்லல்போற் செல்லும், நீ காண்பாயாக என்றவாறு.

      கூந்தல்    முடியாமலும்   துகில்   உடாமலும்    வந்ததென்னையெனின்,
புணர்ச்சிக்களத்து   இருப்புழி ஆயக்கூட்டத்தார் வருவாரென்றும், வந்தால்  களவு
வுலனாமென்றுங் கருதி,  அவ்விடத்து நீங்கிக் குழல் முடிக்கவும் துகில்  உடுக்கவும்
நினைத்து வந்தாளென்க.

     அகில்: ஆகுபெயர். துகில் - புடைவை. துளி - தண்ணீர். நகில் - முலை.
நெஞ்சம்: அண்மைவிளை. ஆல் : அசை. `காண்பாய்` என்னுஞ்சொல
் எச்சமாய் நின்று முடிந்தது.
(27)    
பாகனொடு சொல்லல்:
பாகனொடு   சொல்லல்  என்பது  தலைவன்  தன்னைத் தேடி வந்த  பாகனொடு
தலைவி செல்வதைக் காட்டிக் கூறல்.

 தென்பால் திலகமன் னன்றஞ்சை வாணன்தென் மாறைமுந்நீர்
வன்பால் திரண்முத்த வண்டலின் மேல்வரும் ஏதமஞ்சி
முன்பார்த்தென் நெஞ்சம் வரும்வழி பார்த்து முறைமுறையே
பின்பார்த் தொதுங்குதல் காண்வல வாவொரு பெண்ணணங்கே.