|
|
`மருளுற்றுரைத்தல்` `நெருளுற்றுரைத்தல்` என்று இரு வகையாற் கூறப்படும் என்னும் இலக்கணம் சூத்திரத்துட் கூறலான், `தெருளுற்றுரைத்தல்` என்னும் இலக்கணத்தாற் கூறப்பட்டது. |
(30) |
பண்பு பாராட்டல் |
பண்பு பாராட்டல் என்பது, தலைவியது அழகைப் பரிந்து கொண்டாடல். பண்பு என்று அழகிற்குப் பெயரோவெனின், அழகும் பண்பு, பலவற்றினுள்ளும் ஒரு பண்பாதலான் அழகு பண்பெனப்பட்டது.
|
| மயலார் களிற்றண்ணல் வாணன்தென் மாறையில் வாய்த்தவர்கண் கயலா மெனிற்புயல் கள்ளங்கொள் ளாகருத் தாழளகம் புயலா மெனிற்புயல் போதுகொள் ளாதிப் புனையிழையார் இயலாம் அனைத்தையும் வேறென்ன பேரிட் டியம்புவதே.
|
(இ-ள்.) நெஞ்சமே, மயக்கமார்ந்த யானைப் பெருமையையுடைய வாணனது தென்மாறை நாட்டில் நமக்கு நல்வினைப் பயத்தால் வாய்த்த மடவாரின் கண்களைக் கண்களல்ல, கயலேயாம் எனச் சொல்லின், அக்கயல்கள் கள்ளப் பார்வை கொள்ளா; கரிதாய்த் தாழ்ந்த அளகத்தை அளகம் அன்று, புயலாமெனில், அப்புயல் அலங்காரமாகப் போதுகளைப் புனையாது; இவ்விரண்டு உறுப்பிற்கும் அழகின் பெருக்கத்தான் உவமப் பொருள்களைப் பெயரிட்டுக் கூற இயையாமையாற் புனையிழையாரது இலக்கணமாகிய அனைத்துறுப்பையும் உவமப் பெயர்களில் வேறாக என்ன பெயரிட்டு இயம்புவது என்றவாறு. |
எனவே, அழகின் பெருக்கத்தான் அவ்வுறுப்புகள் தமக்குத் தாமே உவமை கூறவேண்டுவ தல்லது, வேறு பொருள்கள் ஒப்புக் கூறப்படாவாயின.
|
மயல் - மயக்கம். வாய்த்தல் - முயற்சியான் எய்தற்கு அரிதாகிய பொருள் ஒரு காலத்து ஓரிடத்து நல்வினைப் பயத்தான் தானே வந்து எய்துதல். அளகம் -குழல். இயல் - இலக்கணம். இயம்புவது - சொல்லுவது. நெஞ்சம்: முன்னிலையெச்சம். |
(31) |
பயந்தோர் பழிச்சல்: |
பயந்தோர்ப் பழிச்சல் என்பது, தலைவியைப் பெற்றாரைத் தலைவன் வாழ்த்தல். |
| அணியுஞ் சுடர்விரி சங்குபங் கேருக மாடகமும் மணியுந் தரமன்னி வாழிய ரோதஞ்சை வாணன்வெற்பில் தணியுந் தொழிலொழித் தின்பமுந் துன்பமுந் தன்பதமே பணியும் பணியெனக் குப்பயந் தாளைப் பயந்தவரே.
|
|
|