பக்கம் எண் :

9. பாங்கி மதியுடன்பாடு
85

 
      அஃதாவது,    தலைவி    வேறுபாட்டைக்    கண்டு   புணர்ச்சியுண்மை
அறிந்தாராய்ந்து தன் மதியை யுடன்படுத்தல்.


1`முன்னுற உணர்தல் கறையுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தலென்
றாங்குமூ வகைத்தே பாங்கிமதி யுடன்பாடு`

      என்னுஞ் சூத்திரவிதியால் பாங்கிமதி யுடன்பாடு மூவகைப்படும். அவற்றுள்,

முன்னுறவுணர்தலாவது -  தலைவி  பாங்கற்  வட்டத்தின் கண் பாங்கியை நீங்கிச்
சென்று   தலைவனைப்  புணர்ந்து  மீண்டு வந்து பாங்கி  முன்னுற்றவழி,  பாங்கி
தலைவியது வேறுபாடு கண்டு அதனானே கூட்டுமண்மை யறிதல்.

குறையுற    உணர்தலாவது -  பாங்கி தலைவன் தழையுங்  கண்ணியுங் கொண்டு
தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு அதனானே கூட்டமுண்மை யறிதல்.

இருவரு முள்வழி யவன்வர வுணர்தலாவது - தலைவியும் தானும்   ஒருங்கிருந்துழி,
தலைவன் அவ்வாறு வரக்கண்டு அதனானே கூட்டுமண்மை யறிதல்.

முன்னுறவுணர்தல்:

2`நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியும்
செய்வினை மறைப்பும் செலவும் பயில்வுமென்
றிவ்வகை யேழினு மையமுற் றோர்தலும்.`

நாற்றமாவது - தான் பண்டு பயின்றறியாததோர் நாற்றம்.
தோற்றமாவது - கூட்டத்தாற் பிறந்ததோ ரழகு.
ஒழுக்கமாவது - தெய்வந்தொழமை முதலியன.
உண்டியாவது - ஊண் பண்டையிற் சுருங்குதல்.
செய்வினை மறைத்தலாவது - தான் செய்யும் வினையைப் பாங்கிக்கு மறைத்தல்.
செலவாவது - ஆயத்தை நீங்கித் தனியே சேறல்.
பயில்வாவது - எப்பொழுதும் ஓரிடத்தே நிற்றல்.

இவ்வேழினானும்   பாங்கி தலைவியை  ஐயமுற்று   ஆராய்தல்.  இவ்வேழினுள்
இச் செய்யுள் தோற்றத்தால் ஆராய்கின்றது.


1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 22.
2. அகப்பொருள் விளக்கம், களவியல் - 23.