பொய்த்துயில் நிலை கூறி விளித்தது 28. | இத்துயில் மெய்த்துயிலே என்றுகு றித்திளைஞோர் | | இதுபுல விக்குமருந் தெனமனம் வைத்தடியில் கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக் கடைதிற வாமடவீர் கடைதிற மின்திறன். | (பொ-நி) இளையோர் "மெய்த்துயிலே" என்று குறித்து, மனம் வைத்து, கைத்தலம் வைத்தலும், நயனக்கடை திறவா மடவீர் திறமின்; (எ-று) (வி-ம்.)துயில் - தூக்கம். மெய்த்துயில் - உண்மையான உறக்கம். குறித்து-நினைத்து. இது-அடியிற் கைத்தலம் வைத்தல். புலவி-ஊடல். மனம் வைத்து-எண்ணி. அடி-பாதம். கைத்தலம் வைத்தல்-கைவைத்துப் பிடித்தல். பொய்த்துயில் கூர் - பொய்யுறக்கங் கொள்கின்ற. நயனம் - கண். மெய்த்துயிலே என்று கருதிப் புலவி தீர்க்கப் பாதத்தைக் கையால் வலி தீர்ப்பான் போல் பிடித்தான் என்க. அடியில் என்பதற்கு வேறு பொருள் கூறுவாரும் உளர். (8)
கனவுநிலை கூறி விளித்தது
29. | இகலி ழந்தரசர் தொழவ ருப்பவனி | | இரவு கந்தருளு கனவினில் பகலி ழந்தநிறை பெறமு யன்றுமொழி பதறு வீர்கடைகள் திறமினோ. | (பொ-நி) பகல் பவனி(யில்) இழந்த நிறைபெற முயன்று, இரவு கனவினில் மொழி பதறுவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) இகல்-வலி. பவனி-உலாவில். உகந்தருளும்-விரும்பிக்காணும். பகல்-பகற்பொழுதில். பதறுதல்-துடிப்புறுதல்; நிறை-மனத்தை நிலைதிரியாமல் நிறுத்தல்; மொழி பதறுவீர்-புணர்ந்து மொழி பதறுவீர் என்க. பகலில் நிறையழிந்தும் இரவில் கனவில் புணர்ந்தும் இருந்தனர் என்க. (9) பற்குறியணி கூறி விளித்தது 30. | முத்து வடஞ்சேர் முகிழ்முலைமேல் | | முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய் வைத்த பவள வடம்புனைவீர் மணிப்பொற் கபாடம் திறமினோ. |
|