(பொ-நி.) இன்று சீறினும் சேனைமுன் நாளைநின்ற போழ்தினில் என்னை நினைத்தி; (எ-று.) (வி-ம்.) சீறுதல் -சினத்தல். (78) கேட்ட கலிங்கர்கோன் மொழிந்தது 390. | என்றிவையு ரைத்தலுமெ னக்கெதி | | ருரைக்கஇமை யோர்களு நடுங்கு வர்புயக் குன்றிவைசெ ருத்தொழில் பெறாதுநெடு நாள்மெலிவு கொண்டபடி கண்டு மிலையோ. |
(பொ-நி.) உரைத்தலும், எதிர் உரைக்க இமையோர்களும் நடுங்குவர்; இவைதொழில் பெறாதுமெலிவு கொண்டபடி கண்டு மிலையோ? (எ-று.) (வி-ம்.) எதிர் உரைத்தல் - மாறுபட்டுக்கூறல். இமையோர் - தேவர். புயக்குன்று-தோளாகியமலை. நெடுநாள்மெலிவு-நீண்டநாட்களாக வாடியிருத்தல். பலகாலமாகப் போரின்றி இருந்ததால் தன்தோள்களை வாடியிருப்பதாகக் கூறினான். இதனைப் 'போரென்ன வீங்கும் பொருப்பன்ன பொலன்கொள் திண்தோள்மாரன் அனையான்' என்பர் கம்ப நாடர். (79) இதுவும் அது 391. | பிழைக்கவுரை செய்தனைபி ழைத்தனை | | யெனக்குறுதி பேசுவது வாசி கெடவோ முழைக்கண் இள வாளரி முகத்தெளி தெனக்களிறு முட்டியெதிர் கிட்டி வருமோ. |
(பொ-நி.) உரை செய்தனை; பிழைத்தனை; பேசுவது வாசி கெடவோ? அரிமுகத்து எளிதென, களிறு கிட்டி முட்டி வருமோ? (எ-று.) (வி-ம்.) பிழைக்க-தவறுண்டாக, -பிழைத்தனை-உயிர்பிழைத்தாய். வாசி-(என்)இயல்பு. முழை-குகை. வாள் -கொடுமை. அரி - சிங்கம். முட்டி வருதல்- தாக்க வருதல். எதிர் கிட்டி -நேரில் நெருங்கி. (80) |