பக்கம் எண் :

154கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)  இன்று  சீறினும்  சேனைமுன்  நாளைநின்ற  போழ்தினில்
என்னை நினைத்தி; (எ-று.)

     (வி-ம்.) சீறுதல் -சினத்தல்.                              (78)

கேட்ட கலிங்கர்கோன் மொழிந்தது

390.என்றிவையு ரைத்தலுமெ னக்கெதி
      ருரைக்கஇமை யோர்களு நடுங்கு வர்புயக்
குன்றிவைசெ ருத்தொழில் பெறாதுநெடு
     நாள்மெலிவு கொண்டபடி கண்டு மிலையோ.

     (பொ-நி.)  உரைத்தலும்,  எதிர் உரைக்க இமையோர்களும் நடுங்குவர்;
இவைதொழில் பெறாதுமெலிவு கொண்டபடி கண்டு மிலையோ? (எ-று.)

     (வி-ம்.) எதிர்  உரைத்தல் - மாறுபட்டுக்கூறல்.  இமையோர் - தேவர்.
புயக்குன்று-தோளாகியமலை. நெடுநாள்மெலிவு-நீண்டநாட்களாக வாடியிருத்தல்.
பலகாலமாகப்  போரின்றி  இருந்ததால்  தன்தோள்களை  வாடியிருப்பதாகக்
கூறினான். இதனைப்  'போரென்ன  வீங்கும்  பொருப்பன்ன  பொலன்கொள்
திண்தோள்மாரன் அனையான்' என்பர் கம்ப நாடர்.               (79)

இதுவும் அது

391.பிழைக்கவுரை செய்தனைபி ழைத்தனை
      யெனக்குறுதி பேசுவது வாசி கெடவோ
முழைக்கண் இள வாளரி முகத்தெளி
     தெனக்களிறு முட்டியெதிர் கிட்டி வருமோ.

     (பொ-நி.) உரை  செய்தனை; பிழைத்தனை; பேசுவது வாசி கெடவோ?
அரிமுகத்து எளிதென, களிறு கிட்டி முட்டி வருமோ? (எ-று.)

     (வி-ம்.) பிழைக்க-தவறுண்டாக, -பிழைத்தனை-உயிர்பிழைத்தாய். வாசி-(என்)இயல்பு. முழை-குகை. வாள் -கொடுமை. அரி - சிங்கம். முட்டி வருதல்-
தாக்க வருதல். எதிர் கிட்டி -நேரில் நெருங்கி.                  (80)