பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது155


இதுவும் அது

392.என்னுடைய தோள்வலியு மென்னுடைய
      வாள்வலியும் யாதுமறி யாது பிறர்போல்
நின்னுடைய பேதைமையி னாலுரைசெய்
     தாய்இதுநி னைப்பளவில் வெல்ல அரிதோ.

     (பொ-நி.) தோள்வலியும், வாள்வலியும் யாதுமறியாது, பேதைமையினால்
உரைசெய்தாய், நினைப்பளவில், வெல்ல அரிதோ? (எ-று.)

     (வி-ம்.) பேதைமை-அறியாமை.  நினைப்பளவில் - நினைத்த அளவில்.
அரிதோ-அரிதன்று என்றபடி.                                 (81)

கலிங்கர்கோன் போர்மேற் செல்லக் கூறியது

393.வேழமிர தம்புரவி வெம்படைஞர்
      என்றினைய நம்படைவி ரைந்து கடுகச்
சோழகுல துங்கன்விட வந்துவிடு
     தண்டினெதிர் சென்றமர்தொ டங்கு கெனவே.

     (பொ-நி.) துங்கன் விட  வந்துவிடு தண்டின் எதிர்,  நம்படை,  அமர்
தொடங்குக என; (எ-று.)

     (வி-ம்.)  வேழம் - யானைப்படை.  புரவி - குதிரைப்படை.  துங்கன்:
குலோத்துங்கன். வந்துவிடு-வந்து இறுத்த. தண்டு-சேனை. அமர் தொடங்குக-
போர் தொடங்குவதாக.                                      (82)

இதுவும் அது

394.பண்ணுக வயக்களிறு பண்ணுக
      வயப்புரவி பண்ணுக கணிப்பில் பலதேர்
நண்ணுக படைச்செருநர் நண்ணுக
     செருக்கள நமக்கிகல் கிடைத்த தெனவே.

     (பொ-நி.) களிறு  பண்ணுக;  புரவி பண்ணுக,  தேர்  பண்ணுக; இகல்
கிடைத்ததென, செருக்களம் செருநர் நண்ணுக நண்ணுக என; (எ-று.)