(பொ-நி.) பவன பதத்தில், களம் உறு, துரககணத்தின் முகத்திலே, முடிவினில், சுடர்விட்டெழு, வட அனலத்தினை வைத்தது (ஒத்தது); (எ-று.) (வி-ம்.) பவனம்-காற்று. பதம்-தன்மை. உகக்கடை-முடிவுயுக. உண- உண்ண. சுடர்விட்டு எழு-ஒளி வீசி. மேலோங்குகின்ற. வட அனலம்- வடவாமுகாக்கினி. களம்-போர்க்களம். துரகம்-குதிரை. கணம்-கூட்டம். குதிரைகளின் முகத்திலே வடவைக்கனலை வைத்தாற்போலிருந்த தென்க. (12)யானையொடு பொருவோர் இயல்பு 416. | களமுறு துரகக ணத்தின்மு கத்தெதிர் | | கறுவிலர் சிலர்கல வித்தலை நித்தில இளமுலை எதிர்பொரும் அப்பொழு திப்பொழு தெனவெதிர் கரியின்ம ருப்பின்முன் நிற்பரே. |
(பொ-நி.) சிலர், துரக கணத்தின் முகத்து; கறுவிலர், இளமுலை எதிர்பொரும் அப்பொழுது, இப்பொழுதென, கரியின் மருப்பின்முன், நிற்பர்; (எ-று.) (வி-ம்.) களம்-போர்க்களம். துரகம்-குதிரை. கணம்-கூட்டம், கறு-சினம். கலவி-புணர்ச்சி. நித்திலம்-முத்து. கரி-யானை. மருப்பு-தந்தம். சிலர் குதிரை முகத்து நிற்றிலை வெறுத்து யானை முகத்து நின்றனர் என்க. (13) இதுவும் அது 417. | எதிர்பொரு கரியின்ம ருப்பைஉ ரத்தினில் | | இறஎறி படையினி றுத்துமி றைத்தெழு சதுரர்கள் மணியக லத்தும ருப்பவை சயமகள் களபமு லைக்குறி ஒத்ததே. |
(பொ-நி.) கரியின் மருப்பை, உரத்தினில் இற, இறுத்து எழு சதுரர்கள் அகலத்து மருப்பு அவை, முலைக்குறி ஒத்தது: (எ-று.) (வி-ம்.) கரி-யானை. உரம்-மார்பு. இற-இற்றுப்போகும்படி. எறிபடை-வாள். இறுத்து-ஒடித்து. மிறைத்து-இறுமாந்து. சதுரர்கள்-திறமை மிகுந்த வீரர்கள். அகலம்-மார்பு. |