பக்கம் எண் :

192கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) தரை  மகள் - மண் மகள்.  உடலால்  தாங்கி -அணைத்து
என்றபடி. அரமகள்-தெய்வப்பெண்.  அவ்வுயிர்-அக்  கணவனுடைய  உயிர்.
ஆவி-உயிர். ஒக்க-ஒருசேர.                                      (12)

கணவன் தலை பெற்ற மனைவியின் செயல்

484. பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
      போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோளெங்கே எங்கே யென்று
     பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்.

     (பொ-நி.) பயிரவியை ,"கை, வாள் எங்கே,  மார்பு  எங்கே, தோள்
எங்கே"  என்று  கேட்பாளைக்  காண்மின் ; (எ-று.)

     (வி-ம்.) பொருதடக்கை - போர்செய்கின்ற  நீண்ட  கை. கைவாள்:
உம்மைத்தொகை. மணி-அழகிய. பரு - பருத்த.  வயிரம் - அழுத்தமானது.
பயிரவி-யோகினி.                                            (13)

எவ்விடமும் குருதிக்கறை யுண்டது

485.ஆடற்று ரங்கம்பி டித்துஆளை யாளோட
      டித்துணிப்பு டைத்தவ்வி ரும்புண்ணினீர்
ஓடித்தெ றிக்கக்க ருங்கொண்டல் செங்கொண்டல்
     ஒக்கின்ற இவ்வாறு காண்மின்களோ.

     (பொ-நி.) துரங்கம் பிடித்து ,ஆளை  ஆளோ  டடித்து.  புடைத்த
புண்ணின் நீர்தெறிக்க, கருங்கொண்டல் செங்கொண்டல்  ஒக்கின்ற  ஆறு
காண்மின்கள்; (எ-று.) 

     (வி-ம்.) ஆடல்-போர். துரங்கம் - குதிரை  (யையேயன்றி) ஆளை
ஆளோடு-போர்வீரரைப் போர்வீரருடன் பிடித்து அடித்து என  இயைக்க.
அடித்துப் புடைத்த -மோதி அடித்த. இருமை - பெருமை.  நீர் - செந்நீர்.
கருங்கொண்டல் - கரியமேகம்,  செங்கொண்டல் - சிவந்த  நிற  மேகம்.
ஆறு-வகை.                                               (14)

நிணக்குவியலிடத்திருந்த காகங்களின் இயல்பு

486. நெருங்குஆக வச்செங்க ளத்தேத
      யங்குந்நி ணப்போர்வை மூடிக்கொளக்
கருங்காகம் வெண்காக மாய்நின்ற
     வாமுன்பு காணாத காண்மின்களோ.