பக்கம் எண் :

46கலிங்கத்துப்பரணி

பலியிட்ட தலை இயல்பு கூறியது

112.நீண்டபலி பீடத்தில் அரிந்து வைத்த
      நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி
ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ
     அணைதலும்அச் சிரம்அச்ச முறுத்து மாலோ.

     (பொ-நி.) ஆண்டலைப்புள்,  வைத்த  சிரத்தை  இனமென்றெண்ணி,
அணைந்து  பார்க்கும்;அச்சிரம்  அச்சுறுத்தும்; (எ-று.)

     
(வி-ம்.) பலிபீடம்-பலிக்கடன்  செலுத்தும் மேலிடம். குஞ்சி-மயிர்முடி.
சிரம் - தலை.  ஆண்டலைப்புள் - ஆண்டலை  என்னும்  பறவை.  அருகு
-தன்பக்கம். அணைதல் - சேர்தல்.                               (16)

உடல் கண்ட பேய்நிலை கூறியது

113.கடன மைந்ததுக ருந்தலைஅ ரிந்த பொழுதே
      கடவ தொன்றுமிலை என்றுவிளை யாடு முடலே
உடல்வி ழுந்திடின்நு கர்ந்திடஉ வந்த சிலபேய்
     உறுபெ ரும்பசிஉடன்றிடஉ டன்திரியுமே.

     (பொ-நி.)   உடல்    " அரிந்தபொழுதே    கடன்    அமைந்தது
கடவதொன்றுமிலை"  என்று  விளையாடும்,  பேய்  பசி  உடன்றிட  உடன்
திரியும்; (எ-று.)

     (வி-ம்.) கடன்-நாம் செய்யவேண்டிய கடன். கடவது- செய்யக்கடவது.
உவந்த-விரும்பிய. உறு-மிக்க.  உடன்றிட- வருத்த.  உடன்- அவ்வுடலுடன்.
திரியும்-செல்லா நிற்கும். உடல்  துள்ளிக்கொண்டிருத்தலின், அருகே செல்ல
அஞ்சி நின்றன பேய்கள் என்க.                                 (17)

எருமைக்கடாப் பலி கூறியது

114.பகடி டந்துகொள்ப சுங்குருதி இன்று தலைவி
      பலிகொள் என்றகுரல் எண்டிசைபி ளந்துமிசைவான்
முகடி டந்துரும் எறிந்தெனமு ழங்க உடனே்
     மொகுமொ கென்றொலிமி குந்தமரு கங்கள் பலவே.

     (பொ-நி.) " தலைவீ,  இன்றுகுருதிகொள்,  பலிகொள்"்  என்றகுரல்,
பிளந்து,  இடந்து,  முழங்க,உடனே,  தமருகங்கள்  ஒலிமிகும்;  (எ-று.)