(வி-ம்.) பகடு-எருமைக்கடா. இடத்தல்-பிளத்தல். கொள்-கொண்ட. பசுங்குருதி-பச்சிரத்தம். இன்று-இப்பொழுது. முகடு - உச்சி. உரும் - இடி. எறிந்தஎன-இடித்தாற்போல. மொகு மொகு என்பன, ஒலிமிகுதி குறிக்கும் இடைச்சொல். தமருகம் -உடுக்கை. (18) சாதகர் இயல்பு கூறியது 115. | தமரு கங்கள்தரு கின்றசதி யின்கண் வருவார் | | அமரி இன்புறும்அ நாதிவரு சாத கர்களே . | (பொ-நி.) சாதகர்கள் சதியின்கண் வருவார்; (எ-று.) (வி-ம்.) தமருகம்-உடுக்கை. சதி-தாள ஒழுங்கு. அமிரி-காளி. சாதகர் -காளியின் மெய்காப்பாளர். (19) யோகினியர் இயல்பு கூறியது. 116. | படைவ லங்கொடுப சுந்தலைஇ டங்கொ டணைவார் | | இடைமொ ழிந்து இடைநு டங்கவரு யோகினிகளே. | (பொ-நி.) மொழிந்து. நுடங்கவரு யோகினிகள் வலங்கொடு இடங்கொடு அணைவார்; (எ-று.) (வி-ம்.) படை - வாள். இடம் - இடப்பக்கம். கொடு - கொண்டு. இடைமொழிதல் - இடையிடையே சில பேசிக்கொள்ளுதல். இடைநுடங்க -இடுப்புத் துவள. யோகினி-காளியின் பரிவார மகளிர். (20) பேய் இயல்பு கூறியது 117. | வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந் | | திசைதோறும் விழித்து நின்று தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை மறந்திருக்கும் சுழல்கட் சூர்ப்பேய். | (பொ-நி.) பேய், மிசைதோறும் திசைதோறும் தலை விழித்து நின்று சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும்; (எ-று.) (வி-ம்.) வீங்குதல்-பருத்தல். நெடுங்கழை-நீண்ட மூங்கில். தூங்குதல் -தொங்குதல். உறங்குதல்-துயிலுதல். சுழல்கண்-சுழற்சி கொண்ட கண். சூர் -அச்சம். (21) |