பக்கம் எண் :

பேய் முறைப்பாடு87


இதுவும் அது      

215வேகைக்கு விறகானேம் மெலியா நின்றேம்
    மெலிந்தவுடல் தடிப்பதற்கு விரகும் காணேம்
சாகைக்கித் தனையாசை போதும் பாழிற்
  சாக்காடும் அரிதாகத் தந்து வைத்தாய்.

     (பொ-நி.) விறகானேம்; மெலியா நின்றேம்; உடல் தடிப்பதற்கு விரகும்
காணேம்; சாகைக்கு இத்தனை ஆசை; சாக்காடும் அரிதாகத் தந்து  வைத்தாய்;
(எ-று.)

     (வி-ம்.)வேகைக்கு-எரிவதற்கு. தடிப்பதற்கு-பருப்பதற்கு.விரகு-ஒருவழி;
உபாயம். சாகைக்கு-இறப்பதற்கு. பாழ்-வீண். சாக்காடு-இறப்பு.            (4)

இதுவும் அது      

216சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்றான்
    கீழ்நாங்கள் மேனாட் செய்த
பாவத்தா லெம்வயிற்றிற் பசியைத் வைத்தான்
  பாவியேம் பசிக்கொன்று இல்லேம்.

     (பொ-நி.) .சாவத்தாற்   பெறுதுமோ;    சதுமுகன்  மேனாட்  செய்த
பாவத்தால் பசியை் வைத்தான்; பசிக்கொன்று இல்லேம். (எ-று.)

     (வி-ம்.)சாவம் -  பெரியோர்   சாபம்.  பெறுதும் - பெறுகின்றேமோ
 (வழுவமைதி.) சதுமுகன்-நான்முகன்.                               (5)

இதுவும் அது

217பதடிகளாய்க் காற்றடிப்ப நிலைநி லாமற்
    பறக்கின்றேம் பசிக்கலைந்து பாதி நாக்கும்
உதடுகளிற் பாதியுந்தின் றொறுவா யானேம்
  உனக்கடிமை யடியேமை யோடப் பாராய்.

     (பொ-நி.) காற்றடிப்ப, பறக்கின்றோம் ; பசிக்கு அலைந்து தின்று
ஒறுவாய் ஆனேம்;அடியேமை ஓடப்பாராய் ;(எ-று.)