பக்கம் எண் :

88கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) பதடி - பதர். நிலை நில்லாமல்- நிலை பெறாமல் பாதிநாக்கு-
நாவில் பாதி. ஒறுவாய்-மூளியான வாய். அடிமையாகிய  அடியேம் (அடிமைத்
தொழில்   செய்வோராய்  அடிக்கண்  சூழ்ந்து   நிற்போம்)  என்க.  ஓட -
ஓடும்படி.பாராய்-பார்க்கமாட்டாய். (6)

இதுவும் அது     

218அகளங்கன் நமக்கிரங்கான் அரசரிடுந்
    திறைக்கருள்வான் அவன்றன் யானை
நிகளம்பூண் டனவடியேம் நெடும்பசியான்
  அறவுலர்ந்து நெற்றாய் அற்றேம்.

     (பொ-நி.) அகளங்கன்   இரங்கான்;  திறைக்கு  அருள்வான்  அவன்
யானை  நிகளம்பூண்டன.  அடியேம்  உலர்ந்து  நெற்றாய்  அற்றேம்; (எ-று.)

     (வி-ம்.) அகளங்கன் - குலோத்துங்கன். திறை -கப்பம். நிகளம்-யானை
கட்டும் சங்கிலி. அற உலர்ந்து -மிகவும் வாடி.நெற்று ஆய்- முதிர்ந்து உலர்ந்த
வற்றல் போலாகி; அற்றேம்-அழிந்தேம்.                              (7)

இதுவும் அது      

219மூக்கருகே வழுநாறி முடைநாறி
    உதடுகளுந் துடிப்ப வாயை
ஈக்கதுவும் குறியாலுய்ந் திருக்கின்றேம்
  அன்றாகில் இன்றே சாதும்

     (பொ-நி.) மூக்கருக்கே  நாறி,  உதடுகள்  துடிப்ப,  வாயை  ஈகதுவும்
குறியால் உய்ந்திருக்கின்றேம்; அன்றாகில் சாதும்; (எ-று.)

     (வி-ம்.)வழு-நிணநீர். நாறி-தோன்றி.முடை-புலால். நாறி-வீச்சமெடுத்து.
கதுவுதல்.- கவ்வுதல் உய்ந்து - உயிர் பிழைத்து. இன்றே -இப்போதே. சாதும்-இறப்போம்.                                                    (8)