பக்கம் எண் :

96கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) நெடுமால்  முன்  ஒருநாள்   தேவர் குறையிரப்ப, தேவகி
திருவயிற்றில், அவதாரம் செய்தபின்னை; (எ-று.)

     (வி-ம்.) அவதாரம்-பிறத்தல். குறை இரத்தல்-குறை சொல்லி இரத்தல் என்க                                                       (2)

கண்ணன் குலோத்துங்கனாகப் பிறந்தது

234இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி
    இகல்விளங்கு தபனகுலத் திராச ராசன்
அருள் திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி
   ஆலிலையி னவதரித்தா னவனே மீள.

     (பொ-நி.)  அவனே,   மீள,  விதுகுலத்தோன்  தேவி,  இராசராசன் அருள்திருவின் வயிற்றில் வந்து தோன்றி; (எ-று.)

     (வி-ம்.)விது - திங்கள்.  விதுகுலம்- சளுக்கர்குலம். விதுகுலத்தோன்; இராசராசேந்திரன்.  விதுகுலத்தோன்   தேவி: அம்மங்கை,  இகல் - வெற்றி.
தபனன்-ஞாயிறு. தபனகுலம், சோழர்குலம்.  இராசராசன்  இராசேந்திரனாகிய கங்கைகொண்ட சோழன். இராசராசன் அருள்திரு -அம்மங்கை. ஆலிலையில் அவதரித்தான்; கண்ணன், மீள-மீண்டும்.                           (3)

குலோத்துங்கன் பிறந்த சிறப்பு

235வந்தருளி அவதாரஞ் செய்தலுநம்
    மண்ணுலகும் மறைகள் நான்கும்
அந்தரநீங் கினஎன்ன அந்தரதுந்
   துமிமுழங்கி யெழுந்த தாங்கே.

     (பொ-நி.) அவதாரம்  செய்தலும்,  அந்தரம்  நீங்கின என்ன அந்தர
துந்துமி எழுந்தது; (எ-று.)

     (வி-ம்.)  அந்தரம்-கேடு; தேவருலகம். துந்துமி - பேரிகை, முழங்கி-
ஒலித்து.                                                     (4)

குலோத்துங்கனைப் பாட்டியார் கண்டு மகிழ்ந்தது      

236அலர்மழைபோல் மழைபொழிய அதுகண்டு
    கங்கைகொண்ட சோழன் தேவி
குலமகள்தன் குலமகனைக் கோகனத
   மலர்க்கையான் எடுத்துக் கொண்டே.