|
(கருத்து)
பெற்றவனைப் போலவே வளர்த்தவன், கல்வி கற்பித்தவன்,
மறை சொல்லிக் கொடுத்தவன், அரசன், உற்ற இடத்தில் துணைசெய்தவன்,
தமையன், மனைவியின் தந்தை, வறுமையை நீக்கியவன் ஆகிய இவர்களும்
ஒருவனுக்குத் தந்தை முறையில் வைத்து எண்ணத் தக்கவர்கள். (6)
|
7.
ஒன்றை ஒன்று பற்றியிருப்பவை
சத்தியம்
தவறா திருப்பவ ரிடத்தினிற்
சார்ந்துதிரு மாதிருக்கும்;
சந்ததம் திருமாதிருக்கும் இடந்தனில்
தனதுபாக் கியம்இருக்கும்;
மெய்த்துவரு
பாக்கியம் இருக்கும் இடந்தனில்
விண்டுவின் களையிருக்கும்;
விண்டுவின் களைபூண் டிருக்கும் இடந்தனில்
மிக்கான தயையிருக்கும்;
பத்தியுடன்
இனியதயை உள்ளவர் இடந்தனிற்
பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடந்தனிற் சத்துரு
பலாயனத் திறல்இருக்கும்;
வைத்திசை
மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
மன்னுயில் சிறக்கும் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|
(இ-ள்.)
சத்தியம் தவறாது இருப்பவரிடத்தினில் திருமாது சார்ந்து
இருக்கும் - உண்மை வழுவாமல் நடப்பவரிடத்தில் திருமகள்
அடைந்திருப்பாள், திருமாது இருக்கும் இடந்தனில் சந்ததம் தனது
பாக்கியம் இருக்கும் - திருமகள் வாழும் இடத்திலே எப்போதும் அவளாற்
கொடுக்கப்பெறும் செல்வம் இருக்கும், மெய்த்துவரு பாக்கியம் இருக்கும்
இடந்தனில் விண்டுவின் களையிருக்கும் - உண்மையாக வருகின்ற
செல்வம் இருக்கு மிடத்திலே திருமாலின்
|