(கு
- ரை) காந்தமலை - நாமக்கல் வட்டத்தில் மோகனூரை
யடுத்துள்ளது.
நாய்க்குட்டிமரம்
- மருதமலை
(37)
|
பாகார்
மொழிமட வீர்கடல் சூழுமிப் பாருலகில்
ஆகாய மேவி வளரு மரத்தி லதிசயமாய்
ஏகா வனம்புடை சூழ்கின்ற கொண்ட லிறங்கிவெற்பில்
வாகான நாய்க்குட்டி காய்ப்பது வுங்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை)
நாய்க்குட்டி மரம் - சுவானக்குட்டி மரம்.
"சுவானக்
குட்டிக டொக்கவெனப் புக்க
கவான் வரைத்தலைக் கண்ட புலிப்பறழ்
சுவானக் குட்டியிற் காய்பல தோற்றிய
சுவானக் குட்டி மரமொரு பாலெலாம்
-
(பேரூர்ப் புராணம் - மருதவரைப்படலம் 18)
|
ரங்கமலையில்
இன்னும் இம்மரம் இருப்பதாக கூறுகின்றனர்.
வாலசுப்பப்
புலவன் - வெள்ளோடு
(38)
|
தந்திர
மாய்வந்து வெள்ளோட்டில் வாலசுப் ப்புலவன்
குந்திய தோயக்குலத்தானை வெல்லென் றென மொழியச்
செந்தமிழ் மங்கையில் வாழ்சாமி நாதன் செயித்தவனை
வந்த வழியினி லோட்டி யதுங்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை)
மங்கை - விசயமங்கலம்: நீ எந்தவூர் என்றதோயக்
குலத்தானுக்கு விடையாக விசயமங்கை சாமிநாதப் புலவன் பாடிய பாடல்.
"காய்மாறாத்
தேமாவுங் கத்தரியி லாக்கிணறும்
பூமாறாக் கொன்றையுள பொற்பதியாம் - நேம
நறுவீசர் சோலைநெறி நன்னகர்வெள் ளோடைச்
சருவீசர் வாழுந் தலம்."
-
(தனிப்பாட்டு)
|
|